என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • கேரளாவின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமாகிய உம்மன் சாண்டி உடல்நல குறைவினால் காலமானார்.
    • குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர்.பினுலால்சிங் தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி:

    கேரளாவின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமாகிய உம்மன் சாண்டி உடல்நல குறைவினால் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மார்த்தாண்டம் பம்மத்தில் உள்ள அலுவலகத்தில் உம்மன் சாண்டியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.மேலும் கட்சிக்கொடியானது அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர்.பினுலால்சிங் தலைமை தாங்கினார். ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. , மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ், மாவட்ட துணைத்தலைவரும் களியக்காவிளை பேரூராட்சி தலைவருமான சுரேஷ், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தம்பி விஜயகுமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார், வட்டாரத் தலைவர்கள் ஜெபா, ரவிசங்கர், ராஜசேகரன், மாவட்டச் செயலாளர் ஜாண் இக்னேசியஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக வேர்கிளம்பி சந்திப்பில் உம்மன்சாண்டியின் உருவ படத்துக்கு வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவருடன் அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ், மாவட்ட பஞ்சாயத்து கவுன் சிலர் செலின்மேரி, முன்னாள் வட்டார தலைவர் ஜெகன்ராஜ், மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் ஜான் இக்னே ஷியஸ், ஆற்றூர்குமார், காட்டத்துறை ஊராட்சி மன்ற தலைவர் இசையாஸ், ஊராட்சி மன்ற காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அச்சுதன், அகஸ்டின்ஜிஜோ, வட்டார செயலாளர் ராஜேஸ், ம்ற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

    • நாகர்கோவிலை அடுத்த புது கிராமம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலை அடுத்த புது கிராமம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    கோரிக்கையை ஏற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டு தேரூர் பேரூராட்சி புதுகிராமம் 1-வது வார்டில் அங்கன் வாடி கட்டும் பணி நடந்து முடிந்தது. இதையடுத்து அதன் திறப்பு விழாவில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    முன்னதாக டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி. உதயம், வட்டார தலைவர் காலபெருமாள், குமரி கிழக்கு மாவட்ட எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு தலைவர் ஜோயல், தங்கம் நடேசன், தேரூர் பேரூராட்சி தலைவர் அமுதா ராணி வின்சென்ட், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பென்னி கிரகாம் மற்றும் தேரூர் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • காலை, மாலை நேரங்களில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இதனால் காலை, மாலை நேரங்களில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டுக்கு புகார்கள் சென்றது.

    ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், ராமன் புதூர் பகுதியில் பஸ்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இந்த நிலையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையிலான போலீசார் கேப் ரோடு பகுதியில் நேற்று மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கோட்டார் நோக்கி வந்த பஸ்களில், மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தனர். உடனடியாக அந்த பஸ்களை போக்கு வரத்து பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

    படியில் பயணம் நொடியில் மரணம். எனவே மாணவர்கள் கவனமாக பஸ்சுக்குள் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். பெற்றோர்கள் உங்களை படிப்பதற்காக கஷ்டப்பட்டு பள்ளிக்கு அனுப்பி வைக்கி றார்கள். நீங்கள் பஸ்களில் வீட்டிற்கு செல்லும் போதும் பள்ளிக்கு வரும்போதும் படிக்கட்டில் பயணம் செய்யாமல் பஸ்சுக்குள் அமர்ந்து பயணம் செய்வது நல்லதாகும் என்று அறிவு ரைகளை கூறினார்கள்.

    ஒரு சில பஸ்களில் கூட்டம் அதிகமாக இரு ந்ததையடுத்து மாணவர்களை அந்த பஸ்சிலிருந்து இறக்கி பின்னால் வந்த பஸ்களில் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • லைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடைபெறும். 2-ம் கட்ட முகாம் அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெறும். நியாய விலைக் கடை பணியாளர் ஒவ்வொரு நியாய விலைக் கடைப் பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கு ம் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்குவார்.

    டோக்கன் வழங்கும் பணி முகாம் நடைபெறும் நாளுக்கு 4 நாட்கள் முன்பாக தொடங்கும். பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களைப் பெறுவதற்காக நியாயவிலை கடைக்கு வரத் தேவையில்லை. குடும்ப அட்டை இருக்கும் நியாய விலை கடை பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

    முதல் கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை அகஸ்தீஸ்வரம் வருவாய் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், தோவாளை வருவாய் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், கல்குளம் வருவாய் வட்டத்தில் உள்ள 126 கிராமங்களின் நியாய விலை கடை பகுதியில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.

    நாகர்கோவில் மாநக ராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், பத்மனாபபுரம் மற்றும் குளச்சல் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து நியாய விலைக்கடை பகுதியில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடை பெறும்.

    கல்லுகூட்டம், கோத நல்லூர் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள தலா 5, குமார புரம் பேரூராட்சி பகுதியில் 7, மணவாளகுறிச்சி, நெய்யூர் பேரூராட்சி பகுதிகளில் தலா 6, மண்டைக்காடு பேரூ ராட்சியில் 8, வெள்ளிமலை பேரூராட்சியில் 5 நியாய விலைக்கடைகளில் முதல் கட்டமாக விண்ணப் பதிவு முகாம்கள் நடைபெறும். மேலும் வில்லுக்குறி பேரூ ராட்சிக்குட்பட்ட 14, 4, 5, 11, 6, 4 ஆகிய வார்டுகளிலுள்ள நியாயவிலை கடைகளிலும் முகாம் நடைபெறும்.

    திருவிதாங்கோடு பேரூ ராட்சிக்குட்பட்ட வார்டு எண். 12, திங்கள் நகர் பேருராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1, 11, 12, 8, 15 ஆகியவற்றில் உள்ள நியாய விலைக் கடை பகுதிகளில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம் கள் நடைபெறும்.

    சடையமங்கலம், முத்தல குறிச்சி, தென்கரை, வெள்ளி சந்தை கக்கோட்டுதலை, நெட்டாங்கோடு ஆகிய ஊராட்சிகளில் உள்ள தலா 2 கட்டடிமாங்கோடு ஊராட்சி பகுதியிலுள்ள 5, குருந்தன்கோடு ஊராட்சி பகுதியிலுள்ள 7, சைமன் காலனி பகுதியில் 4, முட்டம் பகுதியில் 8 நியாய விலைக்கடைகளிலும், தலக்குளம் ஊராட்சி பகுதியிலுள்ள 1 நியாய விலைக்கடையிலும் முதற்கட்டமாக விண்ணபப்பதிவு முகாம்கள் நடைபெறும்.

    இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை திருவட்டார் வருவாய் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும், கிள்ளியூர் வருவாய் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும், விளவங்கோடு வருவாய் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் நியாய விலைக் கடைப் பகுதியில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும். கல்குளம் வட்டத்தில் மீத முள்ள 49 நியாய விலை கடைப் பகுதிகளில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும். கொல்லங் கோடு நகராட்சி பகுதியில் அனைத்து வார்டுகளிலும் உள்ள நியாய விலைக் கடை பகுதியில் 2-ம் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.கல்குளம் வட்டத்தில் இரணியல் பேரூராட்சிப் பகுதியிலுள்ள 3 நியாய விலைக்கடைகளிலும், கப்பியறை பேரூராட்சிப் பகுதியிலுள்ள 7 நியாய விலைக்கடைகளிலும், முளகுமூடு பேரூராட்சி பகுதியிலுள்ள 6 நியாய விலைக்கடைகளிலும், வாள்வச்சகோஷ்டம் பேரூ ராட்சி பகுதியிலுள்ள 8 நியாயவிலைக்கடைகளிலும் இரண்டாம் கட்ட விண்ணப் பபதிவு முகாம் நடைபெறும்.

    மேலும் வில்லுக்குறி பேரூராட்சி பகுதியில் வார்டு எண் 15, திருவி தாங்கோடு பேரூராட்சி பகுதியில் வார்டு எண். 6, 7, 12, திங்கள்நகர் பேரூராட்சி பகுதியில் வார்டு எண் 5 ஆகிய நியாய விலை கடைகளிலும், நுள்ளிவிளை ஊராட்சி பகுதியிலுள்ள 6 நியாய விலைக்கடை களிலும், திக்கணங்கோடு ஊராட்சி பகுதியிலுள்ள 7 நியாய விலைக்கடைகளிலும், மருதூர்குறிச்சி ஊராட்சியில் உள்ள 4 நியாய விலைக்கடைகளிலும், ஆத்திவிளை ஊராட்சியில் உள்ள 3 நியாய விலைக்கடைகளிலும், 2-ம் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடை பெறும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு
    • முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய களரி அடிமுறை பாகம்-1 நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடை பெற்றது.

    கன்னியாகுமரி:

    தக்கலையில் இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி 15 நாட்கள் நடைபெறுகிறது. இதில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய களரி அடிமுறை பாகம்-1 நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடை பெற்றது.

    விழாவுக்கு பேரவை தலைவர் சிவனி சதீஷ் தலைமை தாங்கினார். ராச கோகிலா அறக்கட்டளை தலைவர் வக்கீல் ராஜ கோபால், வேநாடு அகாடமி கவுரவ தலைவர் சுவாமி யார்மடம் கிறிஸ்துதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்த னர். அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தின ராக கலந்துகொண்டு நூலை வெளியிட களரி அடிமுறை உலக கூட்டமைப்பு செயல் அதிகாரி செந்தில் ராஜகுமார் பெற்று கொண்டார். களரி அடிமுறை உலக கூட்டமைப்பு நிறுவனர் ரமேஷ் ரத்தின குமார், முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் தமிழக கலை குறித்து பேசினார். கொல்லன்விளை மது நன்றி கூறினார். நிகழ்ச்சியை சமூக ஆர்வலர் கிரிஜா மணி தொகுத்து வழங்கினார்.

    • விவசாயிகளின் கழுத்தை நெரிக்கின்ற கைகோர்ப்பு என்று நான் கருதுகிறேன்.
    • கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோதும் தண்ணீர் தரவில்லை என்று கூறுகிறீர்கள்.

    நாகர்கோவில்:

    முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக விவசாயிகள் காவிரி நீரை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஆனால் தற்போது கிடைக்கும் நீரை கூட முழுமையாக தடுக்க புதிய அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக மாநிலம் சென்று, அணை கட்ட முயற்சி எடுக்கும் அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் அதற்கு மூளையாக இருக்கும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோருடன் கை குலுக்கி கொண்டு, சோனியா காந்தி கொடுக்கும் விருந்தில் கலந்துகொள்ள சென்றுள்ளார். இதுவெந்துபோன விவசாயி இதயத்தில் ஈட்டி பாய்ச்சுவது போல இருக்கிறது.

    எனவே தமிழக மக்களின் விருப்பத்துக்கு மாறாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடகா சென்றது கண்டிக்கத்தக்கது. இதை எதிர்கட்சி கூட்டணிக்காக சென்றாக கருதவில்லை. விவசாயிகளின் கழுத்தை நெரிக்கின்ற கைகோர்ப்பு என்று நான் கருதுகிறேன். இது தமிழகத்துக்கான கேடு. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் அங்கு சென்று இருக்கலாம். ஆனால் 8 கோடி மக்களின் முதலமைச்சராக சென்று கைகுலுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

    மேகதாதுவில் அணைகட்ட மாட்டோம் என்ற வாக்குறுதியை தந்தால் மட்டுமே கூட்டணியில் கைகோர்ப்போம் என்று மு.க.ஸ்டாலின் மற்றும் கே.எஸ்.அழகிரி கூறி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வாக்குறுதியை பெறவில்லை. அதனால் தான் இன்றைய தினத்தை துக்க தினமாக அனுசரித்து கருப்பு பட்டை அணிந்து இருக்கிறோம். கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோதும் தண்ணீர் தரவில்லை என்று கூறுகிறீர்கள். யார் தண்ணீர் தரவில்லை என்றாலும் தவறுதான்.

    ஊழல்வாதிகள் மீது எடுக்கும் நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தும். அமைச்சர் செந்தில் பாலாஜி அ.தி.மு.க. ஆட்சியின் போது செய்த தவறுக்காக தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ12 லட்சம் ஒதுக்கப்பட்டு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.
    • முன்னதாக டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு விஜய் வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டில் நிதியிலிருந்து மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் அடுத்த புதுகிராமம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.12 லட்சம் ஒதுக்கினார். இந்த நிதியில் புதுகிராமம் 1வது வார்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.

    அங்கன்வாடி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் விஜயவசந்த் கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், வட்டார தலைவர் காலபெருமாள், குமரி கிழக்கு மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் ஜோயல், தங்கம் நடேசன், தேரூர் பேரூராட்சி தலைவர் அமுதா ராணி வின்சென்ட், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பென்னிகிரகாம் மற்றும் தேரூர் பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் அரசு பஸ்சை ஒப்படைத்த டிரைவர்
    • நாகர்கோவிலில் இருந்து இருந்து நெல்லைக்கு டி.என்.74-1841 என்ற எண் கொண்ட அரசு பஸ் இயக்கபடுகிறது

    கன்னியாகுமரி :

    நாகர்கோவிலில் இருந்து இருந்து நெல்லைக்கு டி.என்.74-1841 என்ற எண் கொண்ட அரசு பஸ் இயக்கபடுகிறது. இந்த பஸ்சை இன்று வடசேரியில் இருந்து மேலசங்கரன் குழியை சேர்ந்த டிரைவர் ஞான பெர்க்மான்ஸ் ஓட்டிச் சென்றார்.

    இந்த நிலையில் வள்ளியூர் வரை பஸ்சை ஓட்டிய அவர், அதற்கு மேல் இயக்க முடியாது எனக்கூறி பயணிகளை கீழே இறக்கி மாற்று பஸ்சில் அனுப்பி உள்ளார். தொடர்ந்து தான் ஓட்டிய பஸ்சை, விசுவாசபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் கொண்டு வந்துள்ளார்.

    இந்த பஸ்சில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இது பற்றி பணிமனை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் பலன் இல்லை. எனவே நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் கூறினார். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடந்த சில நாட்களாக பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை. வலது பக்கம் திருப்பினால் இடது பக்கம் திரும்புகிறது. இடது பக்கம் திருப்பினால் வலது பக்கம் செல்கிறது. இதனை சரி செய்ய வேண்டும் என்று பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பயணிகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியாது என்று நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்த போதும் இதுவரை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு மாணவ-மாணவிகள் பேரணியாக சென்றனர்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு நாள் விழா பேரணி இன்று நடந்தது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை அமைச்சர் மனோ தங்கராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர், மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிர மணியன், கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், திட்ட அதிகாரி பாபு, முதன்மை கல்வி அதிகாரி முருகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, சப்-கலெக்டர் கவுசிக் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியானது டதி பள்ளி சந்திப்பு வழியாக எஸ்.எல்.பி. பள்ளியை சென்றடைந்தது. பேரணியில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். கையில் தமிழ் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு மாணவ-மாணவிகள் பேரணியாக சென்றனர். மாணவ-மாணவிகளுடன் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் மற்றும் அதிகாரிகளும் நடந்தே சென்றனர். பின்னர் செய்தி துறை சார்பில் அங்கு அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டார்.

    இதைத்தொடர்ந்து எஸ்.எல்.பி. பள்ளியில் தமிழ்நாடு நாள் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பரிசுகளை வழங்கினார்.

    அப்போது அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:-

    தமிழ்நாடு நாள் என்று இன்று பெயர் சூட்டப்பட்ட நாளாகும். சென்னை மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு நாள் என்று இன்று தான் பெயர் சூட்டினார்கள். தமிழ்நாடு வாழ்க என்று அப்போது கோஷம் எழுப்பினார்கள். இதன் வரலாறுகளை மாணவ-மாணவிகள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    குமரி மாவட்டம் திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் இருந்த போது மொழி சிறு பான்மையினர் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாகினார்கள். மார்சல் நேசமணி உள்பட தலைவர்கள் குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்க போராட்டம் நடத்தினார்கள். 1956-ம் ஆண்டு சென்னை மாகாணத்துடன் குமரி மாவட்டம் இணைந்தது. அதன் பிறகு சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்று அண்ணா கோரிக்கை வைத்தார். அதற்காக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. போராடி பெற்ற பெயர் தமிழ்நாடு ஆகும். எனவே மாணவ-மாணவிகள் இந்த சமுதாயத்தினர் வரலாற்று உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே நாம் பெற்ற உரிமைகளை, சுதந்திரத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் நெய்யூர் பேரூராட்சி ஆக்கப்பத்துகுளம் முதல் பட்டணத்துக்குளம், ஆலங்கோடு மேல்நிலை நீர்தேக்க தொட்டி முதல் காட்டுக்குளம் சாலை, காட்டுக்குளம் முதல் அம்மாள்குளம் சாலை, பால்தெரு காட்டுக்குளம் சாலை முதல் பேரூராட்சி கிணறு வழியாக முரசங்கோடு செல்லும் சாலை, எரிவிளாகம் கிணறு முதல் கடம்பவிளை சாலை, திங்கள்நகர் - கருங்கல் மெயின் ரோடு முதல் வடக்கன்கரை சாலை வரை பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மேலும் நகர்ப்புற சாலைகள், குடிநீர் தொட்டி அமைக்க, சிமெண்ட தளம் அமைத்தல் என பல்வேறு பணிகளுக்கு என மொத்தம் ரூ.1 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.

    நெய்யூர் பேரூராட்சி தலைவி பிரதீபா தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மகேஷ், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா, பேரூராட்சி செயல் அலுவ லர் சகாயமேரி சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    பொதுக்குழு உறுப்பினர் ஜாண் லீபன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் அகஸ்தீசன், பேரூராட்சி துணை தலைவர் பென் டேவிட், கவுன்சிலர்கள் புஷ்பதிரேஷ், கவிதாராணி, சாராள்மேரி, ராஜகலா, எழில் டைசன், ததேயுராஜன், காங்கிரஸ் நிர்வாகிகள் லாரன்ஸ், சுமன், ராப்சன் மற்றும் விஜி, ஜெகன், பிரான்சிஸ், வழக்கறிஞர் அலெக்ஸ், தனு கென்னடி, ஜெரோம், சாம் ஜெபசிங், ரஞ்சித், தா.ஜெபராஜ், ஆசிரியர் பால், ஜெகதீஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 28 இடங்களில் காமிரா அமைப்பு
    • குமரி வனத்துறையினர் இரவு பகலாக கண்காணிப்பு

    நாகர்கோவில் :

    பேச்சிப்பாறை வனப்பகுதிகளை யொட்டியுள்ள சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு, மூக்கறைக்கல் பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் புலி அட்டகாசம் செய்து வருகிறது. மாடு, 2 ஆடுகளை கடித்து கொன்றது. ஒரு நாயையும் புலி கவ்வி சென்றது. இது ரப்பர் தோட்ட தொழிலா ளர்கள் மற்றும் பழங்குடி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. புலியை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    புலி நடமாட்டம் உள்ள பகுதியாக கருதப்படும் பகுதிகளில் காமிராக்கள் அமைக்கப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது 28 காமிராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 2 இடங்களில் புலியை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

    கூண்டு அமைக்கப்பட்ட பகுதியிலும் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்ட பகுதியிலும் கடந்த 2 நாட்களாக புலி நடமாட்டம் இல்லை. இருப்பினும் வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இது குறித்து வன அதி காரி ஒருவர் கூறியதாவது:-

    புலியை பிடிக்க இரவு பகலாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கண்காணிப்பு காமிராவில் புலி சிக்கவில்லை. ஒரு இடத்தில் புலி வந்து சென்றால் மீண்டும் அந்த இடத்திற்கு 3 நாட்கள் கழித்து வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    எனவே தற்போது வந்து சென்ற பகுதியில் இன்று அல்லது நாளைக்குள் புலி வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எனவே அந்த பகுதியை தீவிரமாக கண்காணித்து புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. புலி இன்று அல்லது நாளைக்குள் சிக்காத பட்சத்தில் புலியை பிடிக்க வெளியே இருந்து பயிற்சி பெற்ற கமாண்டோ வீரர்களை அழைத்து வரலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது
    • குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    கன்னியாகுமரி :

    குழித்துறை மின் கோட்டத்துக்கு உட்பட்ட புதுக்கடை, கருங்கல், கொல்லங்கோடு, நம்பாளி, இரவிபுதூர்கடை, கிள்ளியூர், பள்ளியாடி, சூரியகோடு பிரிவுகளுக்கு உள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின் தளவாடங்கள் மாற்றும் பணி வருகிற 19-ந் தேதி முதல் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. 31-ந் தேதி வரை பணிகள் நடைபெற உள்ளதால் ஒவ்வொரு நாளும் பணி நடக்கும் நாளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.அதன்படி 19-ந் தேதி கொன்னறை, மங்காடு, பள்ளிக்கல், சரல்விளை, குழித்தோட்டம், திருஞானபுரம், பாலவிளை, மங்கலக்குன்றி, தொழிச்சல், வள்ளவிளை, இளம்பாலமுக்கு. மங்காடு, சரல்முக்கு, கோயிக்கத்தோப்பு, பணமுகம், பணமுகம், செறுகோல், அரசகுளம், கல்நாட்டி, குஞ்சாகோடு, பகுத்திக்காட்டு விளை, கோழிப்போர்விளை பகுதியிலும், 20-ந் தேதி மெதுகும்மல், குளப்புறம் பகுதி யிலும், 21-ந் தேதி மானான்விளை, கருக்குப்பனை, வடக்கன்கரை, கொல்லன்விளை, காக்கவிளை, வைக்கல்லூர், பருத்திக்கடவு, வாழ் வச்சக்கோஷ்டம், கொடு வனம்தோட்டம், முள்ளங்கனா விளை, இடவார், வளனூர் பகுதியிலும் மின் தடை ஏற்படும்.வருகிற 24-ந் தேதி பாத்திமாபுரம், பூவன்விளை, கோழிப்போர்விளை, இலவுவிளை, கல்லுக்கூட்டம், சடையன்குழி, மணக்காலை பகுதிக்கும், 25-ந் தேதி கொடுவனம்தோட்டம், மாராயபுரம், உதய மார்த்தாண்டம், மிடாலம், தையாலுமூடு, கோழிவிளை பகுதிகளுக்கும், 26-ந் தேதி கொல்லங்கோடு, மேடவிளாகம், மார்த் தாண்டன்துறை, நீரோடி, பாத்திமாபுரம், சுவாமியார்மடம், புலிப்பனம், விழுந்தயம்பலம், வெட்டுவிளை, ஆப்பிக்கோடு, நட்டாலம், இடவிளாகம் பகுதிகளுக்கும், 27-ந் தேதி ஓச்சவிளை, பேப்பிலாவிளை, ஓலவிளை, வாய்க்கால்கரை, விரிவிளை, வாவறை பகுதி களுக்கும், 28-ந் தேதி சங்குருட்டி, அடைக்காகுழி, செங்கவிளை, செம்முதல், தாழக்கான்வல்லி, செவ்வேலி, கூட்டமாவு, சூரியகோடு, பாத்திமாநகர் பகுதிகளுக்கும், 31-ந் தேதி தொண்டனாவிளை, தும்பாலி, மறுகண்டான்விளை, பிராகோடு, கடுவாக்குழி, சிராயன்குழி, குன்னம்பாறை, பழையகடை, வருக்கவிளை பகுதிகளிலும் முன்விநியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை குழித்துறை மின்விநியோக செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ×