search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உம்மன்சாண்டிக்கு காங்கிரசார் அஞ்சலி
    X

    உம்மன்சாண்டிக்கு காங்கிரசார் அஞ்சலி

    • கேரளாவின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமாகிய உம்மன் சாண்டி உடல்நல குறைவினால் காலமானார்.
    • குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர்.பினுலால்சிங் தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி:

    கேரளாவின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமாகிய உம்மன் சாண்டி உடல்நல குறைவினால் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மார்த்தாண்டம் பம்மத்தில் உள்ள அலுவலகத்தில் உம்மன் சாண்டியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.மேலும் கட்சிக்கொடியானது அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர்.பினுலால்சிங் தலைமை தாங்கினார். ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. , மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ், மாவட்ட துணைத்தலைவரும் களியக்காவிளை பேரூராட்சி தலைவருமான சுரேஷ், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தம்பி விஜயகுமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார், வட்டாரத் தலைவர்கள் ஜெபா, ரவிசங்கர், ராஜசேகரன், மாவட்டச் செயலாளர் ஜாண் இக்னேசியஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக வேர்கிளம்பி சந்திப்பில் உம்மன்சாண்டியின் உருவ படத்துக்கு வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவருடன் அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ், மாவட்ட பஞ்சாயத்து கவுன் சிலர் செலின்மேரி, முன்னாள் வட்டார தலைவர் ஜெகன்ராஜ், மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் ஜான் இக்னே ஷியஸ், ஆற்றூர்குமார், காட்டத்துறை ஊராட்சி மன்ற தலைவர் இசையாஸ், ஊராட்சி மன்ற காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அச்சுதன், அகஸ்டின்ஜிஜோ, வட்டார செயலாளர் ராஜேஸ், ம்ற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

    Next Story
    ×