என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த அசோதை(வயது38) என்பவர் வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார், உடனே அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    • 5 பேரை கைது செய்து அவர்கிளிடமிருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த அசோதை(வயது38) என்பவர் வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார், உடனே அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் சேஷசமுத்திரத்தை சேர்ந்த சுப்பிரமணி(43), நெடுமானூரை சேர்ந்த முத்தம்மாள்(38), அரசம்பட்டை சேர்ந்த ரமேஷ்(43) ஆகியோர் வீட்டின் அருகே சாராயம் விற்றதாக 3 பேரையும் காவலர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து 310 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோன்று வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மேல் சிறுவள்ளூர் (சாத்தனூர்) வலதுபுற கால்வாய் பகுதியில் ரோந்து பணயில் ஈடுபட்டனர். அப்போதும் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த பூங்கான்(51) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • குபேந்திரன் (வயது 30) விவசாயி. இவருக்கும் பிரபு என்ப வருக்கும் நிலத்துக்கு பொது கிணற்றில் இருந்து மோட்டார் வைத்து தண்ணீர் இறைப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
    • இரு தரப்பினரும் ஒரு வரை ஒருவர் தாக்கி கொண்டனர். .

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன் (வயது 30) விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காசிலிங்கம் மகன் பிரபு என்ப வருக்கும் நிலத்துக்கு பொது கிணற்றில் இருந்து மோட்டார் வைத்து தண்ணீர் இறைப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.   ,இந்த நிலையில் குபேந் திரன் மற்றொரு விவசாயி யான வெங்கடேசன் கிணற்றி லிருந்து தண்ணீர் இறைப்ப தற்கான ஏற்பாடு களை செய்தார். அப்போது, அங்கு வந்த காசிலிங்கம் தரப்பினருக்கும், குபேந்தி ரன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் ஒரு வரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இது தொடர்பாக குபேந்திரன் அளித்த புகாரின் பேரில், காசிலிங்கம் மகன்கள் பிரபு (28), சங்கர்(33), இளவரசன், பாவாடை மகன் ஜெயபால் ஆகிய 4 பேர் மீது பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அதே போல் இளவரசன் அளித்த புகாரின் பேரில் தாண்ட வன், அவரது மகன்கள் சிவக்குமார், குபேந்திரன், ரஞ்சித்குமார் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • புதுச்சேரியிலிருந்து ஈரோட்டிற்கு சென்ற அரசு பஸ் உளுந்தூர்பேட்டைக்குள் செல்வதற்காக திரும்பியது.
    • எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    உளுந்தூர்பேட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ்வரன் (வயது 24), விஜய்பழனி (22). 2 பேரும் அண்ணன், தம்பி. இவர்கள் 2 பேரும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகேயுள்ள தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் வேலை செய்து வந்தனர்.

    இவர்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று இன்று பணிக்கு மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டைக்கு திரும்பினர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிக்கு 100 மீட்டர் தொலைவில் சேந்தநாடு குறுக்குச் சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது புதுச்சேரியிலிருந்து ஈரோட்டிற்கு சென்ற அரசு பஸ் உளுந்தூர்பேட்டைக்குள் செல்வதற்காக திரும்பியது. எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அண்ணன், தம்பி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயங்களுடன் சாலையில் துடித்தனர்.

    இவர்களை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் இறந்துவிட்டதாக கூறினார்கள். தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி 2 பேரும் பணி செய்யும் ஓட்டலுக்கு அருகே சாலை விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன் பிள்ளை (52) என்பவருக்கு சொந்தமான 1.68 சென்ட் நிலத்தை 54 லட்சத்துக்கு வாங்க முடிவு செய்தார்.
    • பெத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியாபிள்ளை (வயது 41). பழனியாபிள்ளை ,வாசுதேவன் பிள்ளைக்கு சொந்தமான வீட்டின் முன்பு குடும்பத்துடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியாபிள்ளை (வயது 41). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன் பிள்ளை (52) என்பவருக்கு சொந்தமான 1.68 சென்ட் நிலத்தை 54 லட்சத்துக்கு வாங்க முடிவு செய்தார். இதற்காக பழனியாபிள்ளை தன்னுடைய வீட்டையும், பூர்வீக நிலத்தையும் விற்று தவணை முறையில் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பணத்தை வாசுதேவன் பிள்ளையிடம் கொடுத்துள்ளார்  நிலத்தை கிரையம் செய்து கொடுக்காமல் பல்வேறு காரணங்களை கூறி கடந்த 2 வருடமாக வாசுதேவன் பிள்ளை காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழனியா பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று காலை பெத்தானூரில் உள்ள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன் பிள்ளைக்கு சொந்தமான வீட்டின் முன்பு குடும்பத்துடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இது குறித்து தகவலின் பெயரில் சின்ன சேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து பழனியா பிள்ளை போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்றஇரவு2 அரசு பஸ்கள் நின்று கொண்டி ருந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பஸ்களின் கண்ணாடி மீது கல் வீசினார்.
    • அதிர்ச்சியடைந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அந்த மர்ம நபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படை த்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் 2 அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்று இரவு சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கு ஒரு அரசு பஸ்சும், கள்ளக்குறிச்சியில் இருந்து ஆத்தூர் செல்வதற்காக ஒரு பஸ்சும் நின்று கொண்டி ருந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பஸ்களின் கண்ணாடி மீது கல் வீசினார். இதனால் 2 பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அந்த மர்ம நபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படை த்தனர்

    . விசாரணையில் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என்பதும், மது போதையில் பஸ்சின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்ததும் தெரிய வந்தது. அவரை இன்ஸ்பெக்டர் சத்திய சீலன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.   அரசு பஸ்சின் கண்ணா டியை உடைத்ததால் அதில் வந்த பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ராமகிருஷ்ணா நகரில் நிதிநிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது இதில் பணிபுரிந்த 3 பேரும் சேர்ந்து 17 லட்சம் 98 ஆயிரத்து 964 ரூபாயை கடந்த 2022 -ம் ஆண்டு கையாடல் செய்தனர் என கிளை மேலாளர் அய்யனார்(33) சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். .
    • இந்தநிலையில், கையாடல் தொகை ரூ. 10 லட்சத்திற்கு மேல் உள்ளதால் வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ராமகிருஷ்ணா நகரில் நிதிநிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்த அழகுவேல் மகன் தினேஷ், மூக்கனூர் கிராமம் ஏழுமலை மகன் அய்யப்பன் ஆகியோர் மக்கள் தொடர்பு பணியாளர்களாகவும், மரூர் கிராமத்தை சேர்ந்த கண்ணுசாமி மகன் அய்யப்பன் உதவி மேலாளராகவும் பணிபுரிந்தனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து 17 லட்சம் 98 ஆயிரத்து 964 ரூபாயை கடந்த 2022 -ம் ஆண்டு கையாடல் செய்துவிட்டதாக கூறி, கிளை மேலாளர் அய்யனார்(33) சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதில் நிறுவனத்தின் தணிக்கை குழுவினர் தணிக்கை செய்த போது மேற்கூறிய 3 பேரும் உறுப்பினர்களிடம் இருந்து தனிதனியாக பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. மொத்தம் 67 உறுப்பினரிடமிருந்து 17 லட்சத்து 98 ஆயிரத்து 964 கையாடல் செய்துள்ளனர்.

    பணத்தை திரும்பி கேட்டும் அவர்கள் தரவில்லை என்று தொிவித்து இருந்தார். இது குறித்து சப்-இன்ஸ்நபெக்டர் நரசிம்ம ஜோதி வழக்கு பதிவு செய்தார். இந்தநிலையில், கையாடல் தொகை ரூ. 10 லட்சத்திற்கு மேல் உள்ளதால் வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்சபெக்டர் சண்முகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டி யன், செண்பகவல்லி, காவலர் உதயகுமார், வெங்கடேசன் குழுவினர் விசாரணை மேற்கொண்டு 3 பேரையும் தேடிவந்தனர். இதில், அய்யப்பனை சங்காரபுரம் தாலுகா அலுவலகம் எதிரே வைத்தும், தினேஷை சங்கராபுரம் நி பஸ் நிலையம் அருகில் வைத்தும் போலீசார் கைது செய்தனர். மேலும் மூக்கனூரை சேர்ந்த அய்யப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • திருக்கோவிலூர் பைபாஸ் சாலை அய்யனார் கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
    • திருக்கோவிலூரில் நடைபெற்ற நகை பறிப்பு முயற்சி, நெடுமுடையான் கிராமத்தில் வீடு புகுந்து திருடிய சம்பவங்களில் ஈடுபட்டதை அறிவழகன் ஒப்புக்கொண்டார்.

    திருக்கோவிலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகரில் ஒரு பெண்ணிடம் செயினை பறிக்க முயற்சி நடந்தது. அடுத்த நாள் திருக்கோவிலூர் அடுத்துள்ள நெடுமுடையான் கிராமத்தில் பட்டப்பகலில் 2 வீடுகளில் நகை, பணம் திருடிய சம்பவம் நடைபெற்றது.

    கொள்ளையர்களை பிடிக்க திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சதிஷ்குமார், ராஜசேகர், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் திருக்கோவிலூர் பைபாஸ் சாலை அய்யனார் கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

    அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள முள்ளிகிராம் பட்டை சேர்ந்த அறிவழகன் (40) என்பது தெரியவந்தது.

    இவர் நெல்லிக்குப்பம் நகர பா.ஜனதா செயலாளராக இருந்து வருகிறார். திருக்கோவிலூரில் நடைபெற்ற நகை பறிப்பு முயற்சி, நெடுமுடையான் கிராமத்தில் வீடு புகுந்து திருடிய சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3½ பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அறிவழகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் சிங்காரவேல் (வயது 37). இவர் ஆட்டோ ஓட்டிந்தபோதுசாலையில் செயின் கிடப்பதை பார்த்தார்.சுமார் 2 பவுன் அளவிலான தங்க செயின் என்பதை உறுதி செய்தார்.
    • தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதியிடம் ஒப்படைத்தார்.

    கள்ளக்குறிச்சி, மார்ச்.14-

    தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் சிங்காரவேல் (வயது 37). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று கொட்டையூர் கிராமத்தில் இருந்து ஆட்டோவில் உளுந்து விதை ஏற்றிக்கொண்டு தியாகதுருகத்தில் உள்ள உதவி வேளாண்மை அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்து தியாகதுருகம் நோக்கி திரும்ப வந்து கொண்டிருந்தார். அப்போது தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே வந்த போது சாலையில் செயின் கிடப்பதை பார்த்தார். உடனே ஆட்டோவை நிறுத்திவிட்டு கீழே இறங்கி செயினை எடுத்து பார்த்தபோது சுமார் 2 பவுன் அளவிலான தங்க செயின் என்பதை உறுதிசெய்தார்.

    மேலும் அக்கம், பக்கம் இருந்தவர்களிடம் விசாரித்து பார்த்ததில் செயின் யாருடையது என தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர் சிங்காரவேல் செயினை தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதியிடம் ஒப்படைத்தார். செயினை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சிங்காரவேலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெகுவாக பாராட்டி சன்மானம் வழங்கினர். அப்போது தனிப்பிரிவு போலீசார் ஆறுமுகம் உடன் இருந்தார். மேலும் இந்த செயின் யாருடையது என்பது குறித்து தியாகதுருகம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அக்கராயப்பாளையத்தில் பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இங்கு குடிநீர் வழங்கப்படாமல் இருந்தது.
    • அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கச்சிராயப்பா ளையத்திலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகேயுள்ள அக்கராயப்பாளையத்தில் பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இங்கு குடிநீர் வழங்கப்படாமல் இருந்து வருவதாகவும், இந்த நிலையில் குடிநீர் வழங்காத அருகில் உள்ள வடக்கனந்தல் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கச்சிராயப்பா ளையத்திலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

    . இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் கச்சி ராயபாளையம் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்குவதாக உறுதியளித்தார் பின்னர் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆறுமுகம் (வயது 48 )மனைவி கோமதி (40 ). குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவீட்டிற்கு திரும்பிய போதுடிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து.
    • இதில் கோமதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள கீழ்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வி கூட்ரோடு விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெண் ஒருவர் பலியானார். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 48 )மனைவி கோமதி (40 ).இவர்களின் உறவினர்கள் வினோதினி (34), நாராயணன் (52) காரை ஓட்டிய விக்னேஷ் (30) ஆகியோர் காரில் கடலூர் மாவட்டம் நந்தி மங்கலத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து முடித்த பிறகு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர் அப்பொழுது விருத்தாசலம் வி. கூட்ரோடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெல்டன் தனியார் பள்ளி அருகே சென்றபோது முன்னாள் சென்ற கரும்பு டிராக்டரை கார் முந்தி சென்றுள்ளது. அப்பொழுது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து. இதில் கோமதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். 4 பேர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் இறந்த கோமதியின் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்த 4 பேரும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
    • 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் மோட்டாம்பட்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த மல்லிகா (வயது 60) என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்

    • அம்மு என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னதம்பி (33) என்பவருக்கும் திருமணம் நடந்தது.
    • கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் அடுத்த பாவந்தூரை சேர்ந்தவர் ஜெகன் மனைவி தனலட்சுமி (வயது 48). இவரது மகள் அம்மு என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னதம்பி (33) என்பவருக்கும் திருமணம் நடந்தது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் சின்னதம்பி சம்பவத்தன்று தனலட்சுமியின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த டி.வி., பீரோ, அடுப்பு உள்ளிட்ட பொருட்களை உடைத்துள்ளார், மேலும், தனலட்சுமியை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னதம்பியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×