என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோதல் .கைது"

    • குபேந்திரன் (வயது 30) விவசாயி. இவருக்கும் பிரபு என்ப வருக்கும் நிலத்துக்கு பொது கிணற்றில் இருந்து மோட்டார் வைத்து தண்ணீர் இறைப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
    • இரு தரப்பினரும் ஒரு வரை ஒருவர் தாக்கி கொண்டனர். .

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன் (வயது 30) விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காசிலிங்கம் மகன் பிரபு என்ப வருக்கும் நிலத்துக்கு பொது கிணற்றில் இருந்து மோட்டார் வைத்து தண்ணீர் இறைப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.   ,இந்த நிலையில் குபேந் திரன் மற்றொரு விவசாயி யான வெங்கடேசன் கிணற்றி லிருந்து தண்ணீர் இறைப்ப தற்கான ஏற்பாடு களை செய்தார். அப்போது, அங்கு வந்த காசிலிங்கம் தரப்பினருக்கும், குபேந்தி ரன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் ஒரு வரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இது தொடர்பாக குபேந்திரன் அளித்த புகாரின் பேரில், காசிலிங்கம் மகன்கள் பிரபு (28), சங்கர்(33), இளவரசன், பாவாடை மகன் ஜெயபால் ஆகிய 4 பேர் மீது பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அதே போல் இளவரசன் அளித்த புகாரின் பேரில் தாண்ட வன், அவரது மகன்கள் சிவக்குமார், குபேந்திரன், ரஞ்சித்குமார் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×