என் மலர்
காஞ்சிபுரம்
- காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவம் நடந்த பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி 10 பேரை பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பல்லவன் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஏனாத்தூர் பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே கல்லூரியில் படிக்கும் 2-ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவர் வசிப்பதும் ஒரே பகுதி என்பதால் அவர்கள் நெருங்கி பழகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் காதலர்கள் இருவரும் நேற்று இரவு செவிலிமேடு அருகே உள்ள குண்டு குளம் வயல்வெளி பகுதியில் தனியாக நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள் திடீரென காதல் ஜோடியிடம் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனை கண்டித்த காதலனை அவர்கள் தாக்கினர். மேலும் கல்லூரி மாணவியை கத்தியை காட்டி மிரட்டி காதலன் கண்முன்பே 4 வாலிபர்களும் கூட்டு பலாத்காரம் செய்தனர்.
பின்னர் அந்த கும்பல் இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று காதல் ஜோடியை மிரட்டி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியும், மாணவனும் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரித்தனர்.
அப்போதுதான் 4 பேர் கும்பலால் மாணவி சீரழிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து மாணவியை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி 10 பேரை பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழக கவர்னர் சட்டமன்றத்தில் எப்படி செயல்பட்டார் என்பதை பற்றி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து சொல்லிவிட்டு வந்துள்ளோம்.
- நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசியதின் தொடர்ச்சியாக, கவர்னர் ரவி டெல்லி செல்லலாம் என்று நினைக்கிறோம்.
ஆலந்தூர்:
தமிழக சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரையின் போது நடந்த நிகழ்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் கொண்ட குழுவினர் அளித்தனர். பின்னர் அவர்கள் சென்னை திரும்பினர்.
சென்னை விமான நிலையத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக கவர்னர் சட்டமன்றத்தில் எப்படி செயல்பட்டார் என்பதை பற்றி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து சொல்லிவிட்டு வந்துள்ளோம்.
கவர்னர் ரவி டெல்லி செல்ல இருப்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசியதின் தொடர்ச்சியாக, கவர்னர் ரவி டெல்லி செல்லலாம் என்று நினைக்கிறோம்.
ஜனாதிபதியிடம் நாங்கள் என்ன பேசினோம் என்பதை முழுமையாக தெரிவிக்க முடியாது. நாங்கள் என்ன பேசினோம் அங்கு என்ன நடந்தது என்பது பற்றி பொது இடத்தில் பகிரங்கமாக கூற முடியாது.
சமூகநீதி குறித்து நாங்கள் 100 ஆண்டு காலமாக செய்து வருகிறோம். சமூகநீதி பற்றி பேசும்போது, அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், உச்சநீதி மன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெற்றால் சேது சமுத்திர திட்டம் வந்துவிடும். எனவே முதலில் அவர்கள் வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு வந்து, அது பற்றி பேசட்டும். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் பா.ஜ.க.வுக்கு உண்மையில் இருக்குமேயானால், முதலில் அவர்கள் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும்.
திராவிடமாடல் என்பது இலக்கியம், இதிகாசம் ஆகியவற்றில் இருக்கிறது. இதுபற்றி எல்லாம் புரியாதவர்கள் ஏதாவது பேசுவார்கள், உளறுவார்கள். அவர்களுடைய உளறல்களுக்கெல்லாம் நான் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- காஞ்சிபுரம் பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் கொள்ளையர்களும் தங்களது கைவரிசை பாணியை மாற்றி போலீசாருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர்.
கூட்ட நெரிசலின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதனையே கொள்ளையர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நகை, செல்போன் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரத்தில் கூட்டம் அதிகமாக காணப்படும் சூப்பர் மார்க்கெட் கடையில் கொள்ளையர்கள் நூதன முறையில் செல்போன் திருடும் காட்சி பதிவாகி உள்ளது.
காஞ்சிபுரம் நகரில் செயல்படும் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களுக்கான பணம் செலுத்த சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் வரிசையில் நின்றார்.
அப்போது அருகில் வரும் மர்மவாலிபர் ஒருவர் ரமேசின் அருகில் வந்து நிற்கிறார். பின்னர் காலியான சிறிய பிளாஸ்டிக் பையை கையை மறைக்கும் வகையில் வைத்து நூதன முறையில் ரமேசின் சட்டைபையில் இருந்து செல்போன் மற்றும் ரூ.2500 ரொக்கம் ஆகியவற்றை திருடி தப்பி சென்றுவிட்டார்.
இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. அந்த கொள்ளையனுக்கு கூட்டாளியாக வேறு ஒருவரும் வந்து உள்ளார். அவர் கடையில் நிற்கும் வாடிக்கையாளர்களில் யாரிடம் திருடுவது என்பதை நோட்டமிட்டு தெரிவிக்கிறார்.
இந்த வீடியோகாட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கண்காணிப்பு கேமிரா காட்சியை ஆய்வு செய்து கொள்ளையர்கள்குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாணவியை திட்டிய ஆசிரியையிடமும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
- ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த புத்தேரி பகுதியை சேர்ந்தவர் ரஜினி. அரசு பஸ்சில் டிரைவராக உள்ளார். இவரது மனைவி லதா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 2-வது மகள் கனிஷ்கா (வயது 16). காஞ்சிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து உள்ளார். அவர் வரலாறு பாடப்பிரிவு எடுத்து இருந்தார்.
மாணவி கனிஷ்காவுக்கு ஆங்கிலப்பாடம் படிப்பதில் சிரமம் இருந்தது. தன்னால் ஆங்கிலம் சரியாக படிக்க முடியவில்லையே என்று தொடர்ந்து மன வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.
இது பற்றி அவர் அடிக்கடி தனது தோழிகளிடம் தெரிவித்து வருத்தம் அடைந்தார்.
இந்த நிலையில் வகுப்பில் இருந்தபோது ஆங்கில பாடத்தை சரிவர படிக்கவில்லை என்று ஆசிரியை ஒருவர் மாணவி கனிஷ்காவை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அவளிடம் பெற்றோரையும் பள்ளிக்கு அழைத்து வரும்படி தெரிவித்தார்.
மற்ற மாணவிகளின் முன்பு ஆசிரியை கடுமையாக நடந்ததால் மாணவி கனிஷ்கா மிகவும் மனவேதனை அடைந்தார்.
நேற்று மாலை பள்ளி முடிந்ததும் கனிஷ்கா வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. ஏற்கனவே மனமுடைந்து இருந்த கனிஷ்கா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரம் கழித்து தாய் லதா வீட்டுக்கு வந்தபோது மகள் கனிஷ்கா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அலறி துடித்தார்.
இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது மாணவி கனிஷ்கா தனது டைரியில் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றினர். அதில் அவர் எழுதி இருப்பதாவது:-
பள்ளியில் இன்று ஆசிரியை திட்டி விட்டார்கள். நான் எந்த தவறும் செய்யாமல் இருக்கும் போது எல்லாம் என்னை திட்டுகிறார்கள். சின்ன சின்ன விஷயங்களுக்கும் திட்டுகின்றனர்.
நாளை தந்தையை அழைத்து வரும்படி ஆசிரியை கூறி உள்ளார். எப்பவும் நான் நியாயமாக இருந்தாலும் அநியாயம் தான் நடக்கிறது.
கடவுளே இல்லை. எனக்கு ஒருமுறை கூட நல்லது நடக்கவில்லை. எப்பவும் பார்த்ததில்லை. தேர்வில் 'பிட்' அடித்தவர்கள் மட்டும் தான் நல்ல மதிப்பெண் எடுக்கிறார்கள். எப்பவும் படித்து எழுதும் எனக்கு மதிப்பெண்ணில் ஒருமுறை கூட 'குட்' போட்டதில்லை. நான் ஒருமுறை கூட குட் வாங்கியது இல்லை.
லாரி வண்டியின் மீது சைக்கிளை விட முயன்றும் ஒரு முறை கூட என்னால் சாக முடியவில்லை. எனக்கு உயிருடன் இருக்க பிடிக்கவில்லை.
அம்மா... என்னை நல்ல ஆங்கில பள்ளியில் சேர்த்து இருந்தால் எனக்கும் மற்றவர்கள் போல் ஆங்கிலம் வந்திருக்கும் அல்லவா....
எல்லோர் முன்பும் இதுபோல் கேட்டு இருப்பார்களா? எனக்கு ஆங்கிலம் வராதா? எனக்கு சத்தியமா வாழ பிடிக்கவில்லை. சின்ன வயதில் இருந்து ஆங்கிலம் வந்து இருந்தால் இவ்வளவு கஷ்டப்படாமல் இருந்திருப்பேன்.
வரவர என்னை எனக்கே பிடிக்கவில்லை அம்மா... என்னை ஏன் ஆங்கில பள்ளியில் சேர்க்கவில்லை. நான் சந்தோஷமாக இல்லை. அக்காள், தங்கை நன்றாக படிக்கிறார்கள். என்னால்தான் படிக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் உருக்கமாக எழுதி உள்ளார்.
மாணவி கனிஷ்காவின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவியை திட்டிய ஆசிரியையிடமும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பயண கட்டணம் அதிகம் என்றாலும், குறைந்த நேர பயணம் என்பதால் விமான பயணத்தை தேர்வு செய்து வருகின்றனர்.
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்து உள்ளது.
ஆலந்தூர்:
பொங்கல் பண்டிகை விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல் சகஜ நிலை மீண்டும் திரும்பி விட்டதால் பொங்கல் விழாவை கொண்டாட மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட, வெளியூர் பயணிகள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னையில் இருந்து செல்ல இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆம்னி பஸ், ரெயில்களில் அனைத்து டிக்கெட்டுகளும் ஏற்கனவே நிரம்பி விட்டன.
இதனால் தற்போது பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் சொந்த ஊருக்கு விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். பயண கட்டணம் அதிகம் என்றாலும், குறைந்த நேர பயணம் என்பதால் விமான பயணத்தை தேர்வு செய்து வருகின்றனர்.
இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய ஊருக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை இன்று முதல் அதிகரித்து உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடு செல்லும் பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடமைகளை சோதனை செய்து அனுப்ப வேண்டும். மத்திய தொழிற் படை பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள், குடியுரிமை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் என பல சோதனை முடிந்த பின்பு தான் உள்ளே செல்ல முடியும்.
இன்று ஒரே நாளில் தங்கள் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலாவுக்கும் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால் அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சோதனைகளை முடித்து உள்ளே சென்றனர். இதனால் வெளிநாடு மற்றும் உள்நாட்டு நிலையத்தின் நுழைவாயில்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சென்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணமும் பல மடங்கு உயர்ந்து உள்ளது. சென்னை-மதுரைக்கு இன்று விமான கட்டணம் ரூ.12ஆயிரத்து 500, தூத்துக்குடி-ரூ.10 ஆயிரம், திருச்சி-ரூ.11ஆயிரத்து 500, கோவை-ரூ.11 ஆயிரத்து 500 ஆக உள்ளது. இதே போல் நாளை பயணம் செய்ய இதைவிட கூடுதலாக ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்திலேயே சிறந்த மாடுபிடி வீரர்களும் களம் இறங்குகிறார்கள்.
- ஜல்லிக்கட்டை 10 ஆயிரம் பேர் பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலந்தூர்:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் இடையில் தடை ஏற்பட்ட நிலையில் தமிழக அரசின் நடவடிக்கையால் தற்போது தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு என்றாலே அனைவருக்கும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் தான் நினைவுக்கு வரும். இதுதவிர சில கிராமங்களிலும் நடத்தப்படுகிறது.
ஆனால் தலைநகர் சென்னையில் நடத்தப்படவே இல்லை. ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற காரணமாக அமைந்ததே தலைநகர் சென்னையில் உள்ள மெரினாவில் நடந்த தன்னெழுச்சி போராட்டம்தான். எனவே சென்னையிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்து வந்தது.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் வருகிற மார்ச் மாதம் 5-ந்தேதி சென்னை படப்பையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல் முறையாக சென்னை அடுத்த படப்பை கரசங்கால் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதி மக்களின் நீண்ட கால ஏக்கம் தீரும் வகையில் நடத்த உள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதலமைச்சர் பெயரில் ஒரு காளை உள்பட சிறந்த 501 காளைகள் இடம் பெற உள்ளன.
தமிழகத்திலேயே சிறந்த மாடுபிடி வீரர்களும் களம் இறங்குகிறார்கள். மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. போட்டியில் முதல் இடம் பெறும் காளையின் உரிமையாளருக்கு காரும், மாடுபிடி வீரருக்கு மோட்டார் சைக்கிளும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
ஜல்லிக்கட்டை 10 ஆயிரம் பேர் பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பே இதற்கான பணிகள் தொடங்கி விட்டது. இன்னும் 2 மாதங்கள் இருப்பதால் தேவையான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க தலைவர் ராஜேஷ், ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், முன்னாள் கவுன்சிலர் பி.குணாளன் ஆகியோர் இருந்தனர்.
- இந்தியா எனது தாய்நாடு, உக்ரைன் எனக்கு வாழ்க்கை தந்த நாடு.
- ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர்:
உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. கடந்த 10 மாதத்துக்கு மேல் உக்ரைன் நாட்டில் பல்வேறு நகரங்கள் மீது ரஷியா குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
போர் காரணமாக உக்ரைனில் ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான வெளிநாட்டினர் வெளியேறிவிட்டனர். ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனின் கார்கிவ் நகரில் உணவு விடுதி நடத்தி வரும் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பாலா சங்கர் என்பவர் உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி செய்து வருகிறார்.
அவர் போர் முனையில் உள்ள வீரர்களுக்கு மருந்து பொருட்கள், ஹெல்மெட்கள், வெப்ப உடைகள், ஷூக்கள், குண்டுகள் துளைக்காத உடைகள், துப்பாக்கி குண்டுகள் மற்றும் கண்காணிப்பு டிரோன்கள் உள்ளிட்டவற்றை அங்குள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தரவின்படி சென்று சேர்த்து வருகிறார்.
போர் மேகம் சூழ்ந்துள்ள சாலைகளில் அவர் பயணம் செய்து ராணவத்தினருக்கு உதவிகள் செய்கிறார்.
இது தொடர்பாக பாலா சங்கர் கூறும்போது, 'எனக்கு வாழ்க்கை தந்த நாட்டை இக்கட்டான காலத்தில் கைவிடமுடியாது. இந்தியா எனது தாய்நாடு, உக்ரைன் எனக்கு வாழ்க்கை தந்த நாடு. நான் என்ன வேண்டுமானாலும் செய்ய விரும்புகிறேன்' என்றார்.
போர் ஆரம்பித்த கால கட்டத்தில் பாலா சங்கர் தனது உணவு விடுதி மூலம் பலருக்கு உணவு வழங்கி உதவி செய்தார். பாலா சங்கரின் இந்த ஆபத்தான சேவையை அவரது குடும்பத்தினர் நினைத்து அச்சத்தில்ல் உள்ளனர். எனினும் பாலாசங்கர் தனது சேவையை தொடர்ந்து வருகிறார்.
அவரது சகோதரர்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்து விட்டனர். மனைவி மற்றும் மகன் போலந்து நாட்டிற்கு இடம்மாறி உள்ளனர். பாலா சங்கர் கடந்த 2013-ம் ஆண்டு மருத்துவமாணவராக உக்ரைன் நாட்டுக்கு சென்று இருந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு கிரிமியாவை ரஷியா இணைந்த இணைந்த பிறகு இது அவருக்கு 2-வது போர் ஆகும். படிப்பை முடித்த பிறகு பாலா சங்கர் உக்ரைன் நாட்டின் நிரந்தர குடியுரிமை பெற்றார். மேலும் உணவகத்தை தொடங்கி நடத்தினார்.
கடந்த 2015-ம் ஆண்டு அவர் கார்கிவ் தமிழ்ச்சங்கம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் கடந்த ஆண்டு இதனை தனது மகன் மாறன் பெயரில் அறக்கட்டளையாக மாற்றி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்த்து போகி பண்டிகையை புகையில்லா போகி பண்டிகையாக கொண்டாட பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
- காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டு பகுதிகளில் குப்பைகளை தீ வைத்து எரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
புகையில்லா போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடும் வகையிலும், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி கழிவுகளை தீ வைத்து எரிப்பது சுற்றுச்சூழல் மாசை விளைவிக்கும் என்பதால் தீ வைப்பதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எனவே மாநகராட்சியில் 51 வார்டு பகுதிகளில் குப்பைகளை தீ வைத்து எரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. குப்பைகளை பொதுமக்கள் யாரும் தீவைத்து எரிக்காமல் இருக்கவும், வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர பகுதிகளில் இருந்து சேகரமாகும் கழிவுகளை ஒதுக்கப்பட்ட இடத்தில் அளித்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்த்து போகி பண்டிகையை புகையில்லா போகி பண்டிகையாக கொண்டாட பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
1-வது வார்டு பஞ்சுப்பேட்டை, 3-வது வார்டு ஏகம்பரநாதர் சன்னதி தெரு, 5-வது வார்டு பூக்கடை சத்திரம், 17-வது வார்டு, பி.எஸ்.கே. தெரு, பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரில் 19-வது வார்டு ரெயில்வே ரோடு, 24-வது வார்டு 3-ம் கால் திருவிழா மண்டபம் தெரு, 25 வது வார்டு அண்ணா தெரு, 33-வது வார்டு விளக்கொளி கோயில் தெரு, 36-வது வார்டு காவலான் தெரு, 48 வது வார்டு ஓரிக்கை ஜங்சன், 49-வது வார்டு சதாவரம் மெயின் ரோடு, 14-வது வார்டு ஆவாக்குட்டை, 11-வது வார்டு திருவேங்கடம் தெரு, 44- வார்டு இரட்டை கால்வாய், 39-வது வார்டு என்.ஜி.ஓ. நகர் ஆகிய 16 இடங்களில் அளித்து சுற்றுச்சூழல் மாசுப்படுவதை தவிர்த்து போகி பண்டிகையை புகையில்லா போகி பண்டிகையாக கொண்டாடிட பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் காதலியுடன் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள உள்ளாவூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ராஜேசிடம் தெரிவித்தார். ஆனால் அவர் நமக்கு ஜாதகம் சரி இல்லை என்று கூறி திருமணம் செய்து கொள்ள மறுத்தார். மேலும் இளம் பெண்ணிடம் பேசுவதையும் தவிர்த்தார். இதற்கிடையே இளம்பெண்ணை பெற்றோர் சமாதானபடுத்தி அவருக்கு வெறொரு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் காதலியுடன் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் திருமணம்செய்ய மறுத்த காதலனான கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் மீது சாலவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.
காதலியை திருமணம் செய்ய மறுத்த கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முன்விரோதத்தில் இந்த கொலை முயற்சி நடந்து இருப்பது தெரிய வந்து உள்ளது.
- பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடைவீதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 31). லாரி உரிமையாளர். இவர் கம்மார்பாளையம் கடை வீதியில் எம் சாண்ட், மற்றும் சிமெண்ட் விற்பனை செய்து வருகிறார்.
இந்தநிலையில் கம்மார்பாளையம் பஸ்நிறுத்தம் அருகே கண்ணன் நின்று கொண்டு இருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் கண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த கண்ணன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பாலுசெட்டிசத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். படுகாயம் அடைந்த கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொலை முயற்சியில் ஈடுபட்டது கோவிந்தவாடி பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகரின் மகன் என்று தெரிகிறது. அவர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன. முன்விரோதத்தில் இந்த கொலை முயற்சி நடந்து இருப்பது தெரிய வந்து உள்ளது. அவரை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடைவீதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எம்.கே.தண்டபாணி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கூடுவாஞ்சேரி:
காட்டாங்கொளத்தூர் முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான எம்.கே.தண்டபாணி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கூடுவாஞ்சேரியில் நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி தலைமையில் நடந்தது.
செல்வம் எம். பி., வரலட்சுமி மதுசூதனன் எம். எல்.ஏ. , நகர் மன்ற துணைத்தலைவர் வக்கீல் ஜி.கே. லோகநாதன், கவுன்சிலர்கள், நகர தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 6 பேருக்கு இஸ்திரி பெட்டி, 5 பேருக்கு தையல் எந்திரம், 5 பேருக்கு தள்ளுவண்டி, மற்றும் 3 குளிர்சாதன சவப்பெட்டி ஆகியவற்றை வழங்கினார்.
முன்னதாக காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், நந்திவரம்- கூடுவாஞ்சேரி தி.மு.க. சார்பில் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி.சாலையிலிருந்து எம்.கே. தண்டபாணி நினைவிடம் வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றிய செயலாளர்கள் வண்டலூர் ஆராமுதன், ஆப்பூர் சந்தானம், மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ. சண்முகம்,கூடுவாஞ்சேரி எம்.கே.டி.சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- போலீசார் வந்து ஸ்ரீபெரும்புதூர் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினார்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 மர்ம நபர்கள் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
போலீசார் அந்த மர்ம நபர்களை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அந்த மர்ம நபர்களிடம் இரும்பு கம்பி, மிளகாய் பொடி மற்றும் பயங்கர ஆயுதங்கள் இருந்த அவர்களிடம் போலீசார் பயன்படுத்தும் வாக்கி டாக்கி சத்தம் வந்தது.
போலீசார் அது குறித்து விசாரணை செய்த போது அந்த மர்ம நபர்கள் போலீசாரிடம் இருந்து தப்பி அருகே இருந்த ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகே ஓடி தப்பினர். போலீசார் காஞ்சிபுரம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். 30-க்கும் மேற்பட்ட போலீசார் வந்து ஸ்ரீபெரும்புதூர் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினார்.
சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஒரு இளம் பெண்ணை மிரட்டி சிலர் கூட்டு பாலியில் பலாத்காரம் செய்து தப்பி விட்டனர். அவர்களிடம் போலீசார் பயன்படுத்தும் வாக்கி டாக்கி இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் தெரிவித்து இருந்தார்.
இந்த பாலியல் வழக்கில் போலீசார் தேடும் தலைமறைவு குற்றவாளிகளாக இந்த மர்ம நபர்கள் இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். போலீசார் தொடர்ந்து அவர்களை தேடி வருகின்றனர்.






