search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலன் கண்முன் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்- 4 பேர் கும்பல் வெறிச்செயல்
    X

    காதலன் கண்முன் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்- 4 பேர் கும்பல் வெறிச்செயல்

    • காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • சம்பவம் நடந்த பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி 10 பேரை பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பல்லவன் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஏனாத்தூர் பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே கல்லூரியில் படிக்கும் 2-ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவர் வசிப்பதும் ஒரே பகுதி என்பதால் அவர்கள் நெருங்கி பழகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் காதலர்கள் இருவரும் நேற்று இரவு செவிலிமேடு அருகே உள்ள குண்டு குளம் வயல்வெளி பகுதியில் தனியாக நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள் திடீரென காதல் ஜோடியிடம் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனை கண்டித்த காதலனை அவர்கள் தாக்கினர். மேலும் கல்லூரி மாணவியை கத்தியை காட்டி மிரட்டி காதலன் கண்முன்பே 4 வாலிபர்களும் கூட்டு பலாத்காரம் செய்தனர்.

    பின்னர் அந்த கும்பல் இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று காதல் ஜோடியை மிரட்டி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியும், மாணவனும் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரித்தனர்.

    அப்போதுதான் 4 பேர் கும்பலால் மாணவி சீரழிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து மாணவியை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி 10 பேரை பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×