என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து வாடிக்கையாளர்கள் கடன் பெற்று இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக 2 ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
    காஞ்சிபுரம்:

    மும்பையை தலைமையிடமாகக் கொண்டு எஸ்.பி. எப்.சி. எனும் பெயரில் தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனம் காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் ஆண்டுதோறும் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்வது வழக்கம். கடந்த சில தினங்களாக நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் தலைமை நிறுவனத்தில் இருந்து வந்த அதிகாரிகள் கணக்குகளை தணிக்கை செய்த போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து வாடிக்கையாளர்கள் கடன் பெற்று இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து வங்கியில் பணிபுரியும் ஊழியர்களான காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், மகேஷ் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் இருவரும் வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றதாக கணக்கு காட்டி பல லட்சம் பணத்தை எடுத்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.

    இச்சம்பவம் குறித்து தனியார் நகை கடன் நிறுவன தலைமை அதிகாரி விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தனியார் நகை கடன் வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த இரு ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    குமரக்கோட்டம் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, கொடிமரத்தில் வேல், மயில், சேவல் பொறிக்கப்பட்ட கொடி சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க, மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் சூழ கொடியேற்ற திருவிழா நடைபெற்றது.
    முருகப்பெருமானின் கந்த புராணம் அரங்கேறிய புகழ் பெற்ற காஞ்சீபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில் கந்தசஷ்டி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி குமரக்கோட்டம் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, கொடிமரத்தில் வேல், மயில், சேவல் பொறிக்கப்பட்ட கொடி சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க, மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் சூழ கொடியேற்ற திருவிழா நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயா, கோவில் செயல் அலுவலர் பரந்தாம கண்ணன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
    இருசக்கர வாகனங்கள் திருடிய 5 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற கோவில்கள், மதுபான கடைகள் போன்ற பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 இருசக்கர வாகனங்கள் கடந்த சில நாட்களாக திருடப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் புத்தேரிதெரு பகுதியில் சிவகாஞ்சி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 18 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்களை நிறுத்திய போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசினர். இதையடு்த்து அவர்களை சிவகாஞ்சி போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்களில் 2 பேர் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் 3 பேர் புஞ்சை அரசந்தாங்கள் பகுதியை சேர்த்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில், ரூ.4 லட்சம் மதிப்பிலான 7 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் அவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
    ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் அனைத்திந்திய படத்திற்கு 'டைகர் நாகேஸ்வர ராவ்' என பெயரிடப்பட்டுள்ளது.
    ‘மாஸ் மகாராஜா’ என அன்புடன் அழைக்கப்படும் ரவி தேஜா பல படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். ஒவ்வொரு திரைப்படமும் மற்ற படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்து வருவதோடு, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மாறுபாடு காட்டி வருகிறார்.

    இதற்கிடையே, புதிய படமொன்றில் ரவி தேஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார். 'டைகர் நாகேஸ்வர ராவ்' என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் கதை, 1970-களில் வாழ்ந்த துணிச்சல் மிகுந்த பலே திருடன் மற்றும் ஸ்டூவர்ட்புரம் மக்கள் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

    டைகர்
    டைகர் நாகேஸ்வரராவ் போஸ்டர்

    படத்தை இயக்கவிருக்கும் வம்சி கடந்த 3 ஆண்டுகளாக தனது குழுவினருடன் இணைந்து திரைக்கதை மற்றும் இதர முன்-தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரில் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார், தேஜ் நாராயண் அகர்வால் வழங்குகிறார்.

    ஆர் மதி ஐஎஸ்சி ஒளிப்பதிவை கையாள, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பை கவனிக்க, ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதுகிறார். மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக இருப்பார். படம் குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.
    படப்பை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நாட்டரசன்பட்டு ஆலாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 22). இவர் சென்னையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று ஒரகடம் அடுத்த பனப்பாக்கம் அருகே வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே பஸ்சில் இறங்கி உள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஜெயராமனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    அவர்களிடம் இருந்து தப்பி ஒட முயன்ற ஜெயராமனை வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் தப்பிச்சென்று விட்டனர். இதில் ஜெயராமன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒரகடம் போலீசார் ஜெயராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்திற்கு முன் விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    பணகுடி அருகே பெண்ணிடம் 10 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூர் பகுதியை சேர்ந்தவர் ஜவகர். இவரது மனைவி பிரவீனா (வயது22).

    இவரது சொந்த ஊர் கங்கை கொண்டான் அருகே உள்ள துறையூரில் உள்ளது. சமீபத்தில் துறையூரில் நடந்த கோவில் விழாவிற்கு பிரவீனா சென்றிருந்தார். அங்கிருந்து ஊருக்கு திரும்பும் போது ஒரு பையில் தனது நகைகள் மற்றும் ஆடைகளை வைத்திருந்தார்.

    பணகுடி பஸ் நிலையத்தில் வந்து இறங்கும் போது கூட்ட நெரிசலில் நகை பை திறந்து இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பார்த்த போது தங்க நகைகளை காணவில்லை.

    அதில் 10 பவுன் எடை உள்ள நெக்லஸ், வளையல் போன்ற நகைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இதுகுறித்து பிரவீனா பணகுடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் நேரம் ரேஷன் கடைகள் செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன்கடைகளை திறந்து, ரேஷன்கடைதாரர்களுக்கு பொது வினியோக திட்ட மற்றும் சிறப்பு பொது வினியோக திட்ட பொருட்களை வினியோகம் செய்திடுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    அரசின் அறிவுரைகளின்படி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகளை திறந்து, ரேஷன் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு ஏற்பாடு, தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக பொருட்களை வாங்க விருப்பமுள்ளவர்களுக்கு வழங்கப்படும். தீபாவளிக்கு முன்னதாக பொருட்களை வாங்காதவர்களுக்கு, 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை ரேஷன் கடைகளின் விடுமுறை தினங்கள் முடிந்த பின்னர் 7-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் பொருட்களை பெற்றுகொள்ளலாம்.

    பொருட்களை பெற வரும் ரேஷன்கார்டுதாரர்கள் முக கவசம் அணிந்து வரவும், ஒரு மீட்டர் சமூக இடைவெளியில் தனிமைப்படுத்தி கொண்டு பொருட்களை பெற்று செல்ல வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வாலாஜாபாத் அருகே போலீசாரின் சோதனையில் 50 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
    வாலாஜாபாத்:

    வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட வல்லப்பாக்கம், இந்திராநகர், உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குடும்ப அட்டைக்கு நியாயவிலை கடைகளில் இலவசமாக வாங்கி வைத்துள்ள ரேஷன் அரிசியை விலை கொடுத்து வாங்கி, கடத்துவதாக வாலாஜாபாத் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் அடிப்படையில் வாலாஜாபாத் போலீசார் காஞ்சீபுரம் ஓரகடம் சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த மினி லாரியை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

    போலீசாரின் சோதனையில் 50 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மினி லாரியில் வந்த காஞ்சீபுரம் தாலுகா, கீழம்பி, பச்சையம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த லியோ சந்துரு (வயது 24) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் (17) ஆகிய 2 வாலிபர்களையும் வாலாஜாபாத் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசி மற்றும் அதை ஏற்றி வந்த மினி லாரியையும் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    குன்றத்தூர் அருகே பழுதான வாகனத்தை சரி செய்தபோது பஸ் மோதி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    மதுரவாயல் ஜானகி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 47). வேன் டிரைவர். நேற்று முன்தினம் நள்ளிரவு தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் நோக்கி வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வேனை ஓட்டிச்சென்றார். குன்றத்தூர் அடுத்த வடக்கு மலையம்பாக்கம் அருகே சென்றபோது வேன் திடீரென பழுதடைந்தது.

    இதையடுத்து அந்த வேனை சாலையின் ஓரம் நிறுத்தி விட்டு சரி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் நின்று கொண்டிருந்த வேன் மீது மோதியது. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். வேனின் பின் பகுதி பஸ்சின் முன் பகுதி நொறுங்கியது. இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கு காரணமான தனியார் பஸ் டிரைவர் பிலவேந்திரன் (40) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    படப்பை அருகே வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த செரப்பணஞ்சேரி ஊராட்சியில் உள்ள நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 19). நேற்று இவர் அதே பகுதியில் நண்பர்களுடன் மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது தகராறு ஏற்பட்டது. தகராறில் 2 பேர் அரிவாளால் அஜித்தின் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி்ச் சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த அஜித் அலறி கூச்சலிட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ரத்தகாயத்துடன் கிடந்த அஜித்தை மீட்டு சிகி்ச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் அஜித்தை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூரில் மூதாட்டியிடம் நூதன முறையில் 9 பவுன் நகை பறிக்கப்பட்டது. இது தொடர்பாக நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் அலமேலு (வயது 73). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் தனது இளைய மகன் சேகர் வீட்டில் தங்கி இருந்தார். அதே பகுதியில் தங்கி இருந்த தனது மூத்த மகன் வீட்டுக்கு நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அலமேலு சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் 2 பேர் மோட்டர்சைக்கிளில் அலமேலு அருகில் வந்து ஏன் மாஸ்க் அணியவில்லை?. போலீசார் பார்த்தால் வழக்கு போடுவார்கள் என்று கூறி ஒரு மாஸ்க்கை கொடுத்தனர்.

    மேலும் தங்க நகை அணிந்து கொண்டு அலட்சியமாக சென்றால் யாராவது பறித்துச்சென்று விடுவார்கள். ஆகவே கழற்றி பேப்பரில் வைத்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

    மர்மநபர்கள் அலமேலு அணிந்திருந்த 9 பவுன் நகையை பேப்பரில் மடித்து தருவதை போல் நடித்து கல்லை பேப்பரில் மடித்து கொடுத்துள்ளனர். பின்னர் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். அலமேலு தன்னுடைய மகன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது பேப்பரில் வெறும் கற்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவரது மகன் சேகர் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    குன்றத்தூர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் மின்கசிவு காரணமாக ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததா? அல்லது நாச வேலை காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் சாந்தி நகரை சேர்ந்தவர் அமலநாதன் (வயது 49), இவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு ஆட்டோவை தனது வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்தார். நள்ளிரவில் இவரது ஆட்டோ எரிந்து கொண்டிருப்பதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அமலநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கேட்டு அமலநாதன் வருவதற்குள் ஆட்டோ முழுவதும் தீயில் எரிந்து சேதமாகி விட்டது.

    இதுகுறித்து குன்றத்தூர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் மின்கசிவு காரணமாக ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததா? அல்லது நாச வேலை காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
    ×