search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகைகள்
    X
    நகைகள்

    காஞ்சிபுரம் தனியார் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் மோசடி

    தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து வாடிக்கையாளர்கள் கடன் பெற்று இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக 2 ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
    காஞ்சிபுரம்:

    மும்பையை தலைமையிடமாகக் கொண்டு எஸ்.பி. எப்.சி. எனும் பெயரில் தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனம் காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் ஆண்டுதோறும் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்வது வழக்கம். கடந்த சில தினங்களாக நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் தலைமை நிறுவனத்தில் இருந்து வந்த அதிகாரிகள் கணக்குகளை தணிக்கை செய்த போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து வாடிக்கையாளர்கள் கடன் பெற்று இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து வங்கியில் பணிபுரியும் ஊழியர்களான காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், மகேஷ் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் இருவரும் வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றதாக கணக்கு காட்டி பல லட்சம் பணத்தை எடுத்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.

    இச்சம்பவம் குறித்து தனியார் நகை கடன் நிறுவன தலைமை அதிகாரி விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தனியார் நகை கடன் வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த இரு ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×