என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பணகுடி அருகே பெண்ணிடம் 10 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்2 Nov 2021 7:27 PM IST (Updated: 2 Nov 2021 7:27 PM IST)
பணகுடி அருகே பெண்ணிடம் 10 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூர் பகுதியை சேர்ந்தவர் ஜவகர். இவரது மனைவி பிரவீனா (வயது22).
இவரது சொந்த ஊர் கங்கை கொண்டான் அருகே உள்ள துறையூரில் உள்ளது. சமீபத்தில் துறையூரில் நடந்த கோவில் விழாவிற்கு பிரவீனா சென்றிருந்தார். அங்கிருந்து ஊருக்கு திரும்பும் போது ஒரு பையில் தனது நகைகள் மற்றும் ஆடைகளை வைத்திருந்தார்.
பணகுடி பஸ் நிலையத்தில் வந்து இறங்கும் போது கூட்ட நெரிசலில் நகை பை திறந்து இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பார்த்த போது தங்க நகைகளை காணவில்லை.
அதில் 10 பவுன் எடை உள்ள நெக்லஸ், வளையல் போன்ற நகைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இதுகுறித்து பிரவீனா பணகுடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X