என் மலர்
காஞ்சிபுரம்
திருவள்ளூர் அருகே உள்ள கனகம்மாசத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து வெளிவரும் மழைநீர் மற்றும் ஏரிகளின் உபரிநீர் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக செல்லும் ஓடை வழியாக புதூர் கிராமம் அருகே கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.
தற்போது பெய்து வரும் கனமழையால் கனகம்மாசத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து வரும் மழைநீர் வெள்ளப்பெருக்கெடுத்து அப்பகுதியில் ஓடுகிறது. இந்த நிலையில் கனகம்மாசத்திரம் பகுதியில் உள்ள மதுபான கடையில் மது வாங்குவதற்காக மதுப்பிரியர்கள் ஏராளமானோர் உபரிநீர் வரும் ஓடையில் மழை வெள்ளத்தை கடந்து ஆபத்தாக வருகிறார்கள்.
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி - 1/2 கப்
உருளைக் கிழங்கு - 250 கிராம்
சீஸ் - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1/4 கப்
எண்ணெய் - தேவையான அளவு
மாவு பிசைய :
மைதா - 2 கப்
எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை :
உருளைக் கிழங்கை குக்கரில் 2 விசில் விட்டு வேக விடவும்.
கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சீஸை துருவிக்கொள்ளவும்.
உருளைக் கிழங்கு வெந்ததும், தோலை உரித்து ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ளுங்கள். பின் அதில் ப.மிளகாய், சீஸ் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
மாவு பிசைய அகலமாக பாத்திரத்தில் மைதா மாவைக் கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்திக்கு பிசைவது போல் பிசையுங்கள். பிசைந்ததும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீண்டும் நன்கு பிசையுங்கள்.
அடுத்ததாக உங்களுக்கு எந்த அளவிற்கு சமோசா வேண்டுமோ அந்த அளவிற்கு கொஞ்சம் மாவை எடுத்து உருண்டைகளாக பிடித்து வையுங்கள். இப்படி எல்லா மாவையும் உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
தற்போது சப்பாத்தி திரட்டும் கல்லில் வைத்து சப்பாத்தி உருட்டுவது போல் திரட்டுங்கள்.
திரட்டிய மாவை கையில் எடுத்து சமோசாவிற்கு முக்கோண வடிவில் பிடிப்பதுபோல் கையில் சுருடிக் கொள்ளுங்கள்.
அதில் தற்போது தயாரித்து வைத்துள்ள சீஸ் உருளைக் கிழங்கு பூரணத்தை தேவையான அளவு வைத்து மேற்புறத்தை மூடுங்கள். மாவை வாய் திறக்காதவாறு நன்கு அழுத்தி மூடுங்கள்.
இப்படி அனைத்தையும் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
கடாயில் பொரிப்பதற்கு தோவையான எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சமோசாவை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள கீழ்கதிர்பூரில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம்போல் பணியில் இருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் மணிகண்டனை மிரட்டி பணத்தை பறிக்க முயன்றனர். இதனை தடுக்க முயன்ற மணிகண்டனை மர்ம கும்பல் கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் பெட்ரோல் பங்க்கில் ஊழியரை வெட்டியது செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த சதீஷ், கரையாஞ்சாவடியை சேர்ந்த இமானுவேல், பாலாஜி ராஜா, பிரவீன், ஜெகன்ராஜ், மதியழகன் ஆகியோர் என்பது தெரிந்தது.
அவர்கள் 6 பேரையும் போலீசார் உடனடியாக கைது செய்தனர். சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பாராட்டினார்.
புதுடெல்லி:
முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத். 1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கீர்த்தி ஆசாத் அரசியலுக்குள் நுழைந்து பா.ஜனதாவில் சேர்ந்தார். 1999, 2009, 2014 ஆகிய 3 முறை அவர் எம்.பி.யாக இருந்தார்.
2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கீர்த்தி ஆசாத் பா.ஜனதாவில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அருண்ஜெட்லி மீது டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் ஊழல் குற்றச்சாட்டை கூறினார். இதனால் கட்சி அவர் மீது நடவடிக்கை எடுத்தது.

இதைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு கீர்த்தி ஆசாத் காங்கிரசில் இணைந்தார்.
இந்த நிலையில் கீர்த்தி ஆசாத் காங்கிரசில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் மம்தா முன்னிலையில் அந்த கட்சியில் சேருகிறார்.
இதையும் படியுங்கள்... நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காங்கிரசில் நாளை முதல் விருப்ப மனு- கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக மழை கைகொடுத்ததால் குறிப்பிட்ட நேரத்தில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழையால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. ஆனால் கேரள அரசு 142 அடி தண்ணீர் தேக்க தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அவ்வப்போது கேரள பகுதிக்கு வீணாக தண்ணீர் திறந்து விடுவது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது நீர் பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்துள்ளது. இதனால் நேற்று 3104 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1992 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து மின் உற்பத்தி நிலையம் வழியாக 1800 கன அடியும், இரைச்சல் பாலம் வழியாக 200 கன அடியும் என மொத்தம் 2000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 168 கன அடி நீர் கேரளாவுக்கு உபரியாக திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது. 2387 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2355 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை 55 அடியாக உள்ளது. 46 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.47 அடியாக உள்ளது. 106 கன அடி நீர் வருகிறது. இதில் 30 கன அடி பாசனத்திற்கும், 76 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.






