என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் பெண்ணிடம் இருந்து நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் அருகே உள்ள தாமல்வார் தெருவில் மாவு கடை நடத்தி வருபவர் பூங்கொடி (வயது36). இவர் வழக்கம் போல் இரவு கடையை பூட்டிவிட்டு தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தவாறு வந்த மர்ம நபர்கள் 2 பேர் பூங்கொடி அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர்.
பூங்கொடி கூச்சலிட்டதையடுத்து அந்த பகுதி மக்கள் இது குறித்து சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் அந்த பகுதிகளில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூரில் போலி வைர நகையை விற்று கட்டிட ஒப்பந்ததாரரிடம் மோசடி செய்து தப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் திருமங்கை ஆழ்வார் தெருவில் வசித்து வருபவர் கண்ணன் (வயது 47). கட்டிட ஒப்பந்ததாரர். இவர் நேற்று ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையம் அருகே நின்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது செல்போன் `சுவிட்ச்-ஆப்' ஆகி விட்டது எனக்கூறி கண்ணனுடைய செல்போனை வாங்கி பேசியுள்ளார்.
பின்பு, தான் காஞ்சீபுரத்தில் நகைக்கடை வைத்திருப்பதாகவும், வியாபாரியிடம் நகை வாங்குவதற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இப்பகுதிகளில் குறைவான விலைக்கு கடைகளுக்கு தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் விற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகை உள்ளதாகவும், அதை ரூ.3 லட்சத்துக்கு தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி ஜொலி ஜொலிக்கும் கற்கள் அடங்கிய போலி நகையை எடுத்து காண்பித்துள்ளார்.
இதைப் பார்த்த கண்ணனுக்கு பேராசை ஏற்படவே தனது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் 4 மோதிரங்கள் என 9 பவுன் நகையை கழட்டி நகை வியாபாரியிடம் கொடுத்துள்ளார்.
உடனே பேப்பரில் மடித்து வைத்திருந்த போலி நகையை மோசடியாக கண்ணன் கையில் கொடுத்து விட்டு, நகையை இங்கே பிரித்துப் பார்க்க வேண்டாம் என்றும், போலீசுக்குத் தெரிந்தால் பிரச்சினை என்று கூறிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி விட்டார்.
கண்ணன் சிறிது தூரம் சென்ற பிறகு பிரித்து பார்த்த போது, அது போலி நகை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.இது குறித்து கண்ணன் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து நூதன மோசடியில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 43 பவுன் நகையை மீட்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சுதர்சன் நகரில் வசித்து வருபவர் கவிதா. இவர் கடந்த 3-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னை அசோக் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
மாலையில் திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்து 43 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவுபடி இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த கொள்ளை தொடர்பாக சேலத்தை சேர்ந்த மனோஜ், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராஜாராம், கார்த்திக் ராஜா, திண்டுக்கல் நிலக்கோட்டையை சேர்ந்த திலிப் திவாகர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 43 பவுன் நகை மீட்கப்பட்டது.
காஞ்சிபுரம் சுதர்சன் நகரில் வசித்து வருபவர் கவிதா. இவர் கடந்த 3-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னை அசோக் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
மாலையில் திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்து 43 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவுபடி இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த கொள்ளை தொடர்பாக சேலத்தை சேர்ந்த மனோஜ், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராஜாராம், கார்த்திக் ராஜா, திண்டுக்கல் நிலக்கோட்டையை சேர்ந்த திலிப் திவாகர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 43 பவுன் நகை மீட்கப்பட்டது.
தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க டி4 முனையத்தில் ஒரு பிரத்யேக நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆலந்தூர்:
தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து நேரடி விமானங்களிலும், விமானங்கள் மாறி மாற்று விமானங்களிலும் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய சர்வதேச விமானநிலையங்களுக்கு வருபவர்களை அந்தந்த விமானநிலையங்களிலேயே நிறுத்தி, ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனை எடுக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. பரிசோதனை முடிவு வரும் வரை பயணிகளை காத்திருக்கவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழிகாட்டு நடைமுறை இன்று (1-ந் தேதி) அதிகாலை முதல் நடைமுறைக்கு வந்தது. சென்னை விமான நிலையத்தில் வழிகாட்டுதல்களை தடையின்றி செயல்படுத்துவதற்காக விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவனங்கள், மாநில அதிகாரிகள் இன்று டி3, டி4 ஆகியமுனையங்களில் கூட்டு ஆய்வு செய்தனர்.
தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க டி4 முனையத்தில் ஒரு பிரத்யேக நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகள், மாதிரி சேகரிப்பு மற்றும் பணம் செலுத்துதல் ஆகியவற்றிற்கான வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளன.
பயணிகளில் கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு ஒவ்வொரு வசதிக்கும் தனி, தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. டி4 முனையத்தில் விற்பனை நிலையங்கள், தாய்மார்கள் பால் கொடுக்கும் இடம் மற்றும் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி, பொழுதுபோக்கு திரைகள், இலவச வைபை, இலவச தொலைபேசி மற்றும் குளிர்பான விற்பனை எந்திரங்கள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து நேரடி விமானங்களிலும், விமானங்கள் மாறி மாற்று விமானங்களிலும் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய சர்வதேச விமானநிலையங்களுக்கு வருபவர்களை அந்தந்த விமானநிலையங்களிலேயே நிறுத்தி, ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனை எடுக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. பரிசோதனை முடிவு வரும் வரை பயணிகளை காத்திருக்கவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழிகாட்டு நடைமுறை இன்று (1-ந் தேதி) அதிகாலை முதல் நடைமுறைக்கு வந்தது. சென்னை விமான நிலையத்தில் வழிகாட்டுதல்களை தடையின்றி செயல்படுத்துவதற்காக விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவனங்கள், மாநில அதிகாரிகள் இன்று டி3, டி4 ஆகியமுனையங்களில் கூட்டு ஆய்வு செய்தனர்.
தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க டி4 முனையத்தில் ஒரு பிரத்யேக நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆர்.டி-பி.சி.ஆர். சோதனை முடிவுகள் வெளியாக சுமார் 6 மணி நேரம் வரை பயணிகள் காத்திருக்க வேண்டியது கட்டாயம் என்பதால், ஒரே நேரத்தில் 450 பயணிகள் அமரும் வகையில் தனி இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகள், மாதிரி சேகரிப்பு மற்றும் பணம் செலுத்துதல் ஆகியவற்றிற்கான வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளன.
பயணிகளில் கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு ஒவ்வொரு வசதிக்கும் தனி, தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. டி4 முனையத்தில் விற்பனை நிலையங்கள், தாய்மார்கள் பால் கொடுக்கும் இடம் மற்றும் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி, பொழுதுபோக்கு திரைகள், இலவச வைபை, இலவச தொலைபேசி மற்றும் குளிர்பான விற்பனை எந்திரங்கள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொரோனா வைரஸ் வழிகாட்டுதல்களுடன் கூடிய தகவல் காட்சிகள் வெளியிடப்படுகின்றன.
இதையும் படியுங்கள்... உலகளவில் 300 கோடி மக்கள் இணையத்தளம் பயன்படுத்தியதே இல்லையாம்...
ஸ்ரீபெரும்புதூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
திருவள்ளூர் மாவட்டம் மாப்பேடு பகுதியில் வாசிப்பவர் பிரேம். இவர் கடந்த 20-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் சாலையில் சென்ற போது மண்ணுர் கூட்டு சாலை அருகே மர்ம நபர்கள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து காரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பிரேமிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை பறித்துகொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பிரேம் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார்.
விசாரணையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் தெரு வீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன்(வயது 28), அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல்(20), திருவள்ளூவர் தெருவை சேர்ந்த பிரவீன்(24), ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து வழிப்பறி கொள்ளையர்கள் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணுர் பகுதியில் நேற்று கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
ஒரத்தூர் ஏரிக்கரை உடைந்து 3-வது நாளாக தண்ணீர் வெளியேறுகிறது. உடைப்பு பகுதியில் மணல்மூட்டைகளை அடுக்கும் பணி நடந்து வருகிறது.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அடுத்த ஒரத்தூர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணியின் கீழ் ஒரத்தூர் ஆற்றின் குறுக்கே ரூ.60 கோடி செலவில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி முழுமையாக முடிவடையாமல் உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நீர்த்தேக்கம் பகுதியில் உள்ள ஏரியின் கரை 2 நாட்களுக்கு முன்னர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியில் இருந்து அதிக அளவு நீர் வீணாக வெளியேறுகிறது.
ஏரியின் கரை உடைந்து நீர் வெளியேறி வரும் பகுதியில் படகு மூலம் மணல் மூட்டைகள் எடுத்து சென்று கரை உடைந்த பகுதியில் சவுக்கு கட்டைகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தி மணல் மூட்டைகள் அடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழையின் காரணமாக கரை உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைக்கும் பணி முழுமையாக முடியாமல் உள்ளது. இதனால் ஏரியில் இருந்து நீர் தொடர்ந்து 3-வது நாளாக வெளியேறி வருகிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறுகையில்:-
ஏரியின் கரை உடைந்த பகுதியில் அதிக அளவில் நீர் செல்வதால் படகு மூலம் மணல் மூட்டைகள் எடுத்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் அடுக்கும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அல்லது நாளைக்குள் உடைந்த கரை பகுதியில் விரைந்து மணல் மூட்டைகள் அடுக்கி சீரமைக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.
காரப்பேட்டை அருகே லாரி மோதி 2 பெண்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் நாகலுத்து மேடு பகுதியில் வசித்து வருபவர் பாபு. இவரது மனைவி சங்கீதா (வயது 26). இவர் தனது தோழி நீலவேணி(33) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
காஞ்சிபுரம் காரப்பேட்டை அருகே சங்கீதாவும், நீலவேணியும் கடக்க முற்பட்ட போது காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற காய்கறி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரியை கைபற்றி தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படுமென மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் இன்று தெரிவித்தார்.
புதுடெல்லி:
கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து பிரதமர் மோடி இந்த வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற போவதாக அறிவித்தார் ஆனால் விவசாயிகள் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை மறுநாள் (29-ந் தேதி) பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதன் முதல் நாளில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படுமென மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் இன்று தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... ஜெயலலிதா வீட்டு சாவியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்- கலெக்டரிடம் தீபா, தீபக் மனு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி 45 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தினந்தோறும் கொரோனா தடுப்பூசி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளிலும் செலுத்தப்படுவது மட்டுமல்லாமல் அவ்வப்போது மெகா தடுப்பூசி முகாம் மூலமாக அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மாநிலத்தில் காஞ்சீபுரம் மாவட்டம் முதல் தவணை தடுப்பூசியில் முதன்மை இடத்தை வகித்தாலும், 2-வது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவு அதாவது 45 சதவீத இலக்கையே எட்டியுள்ளது.
இதுவரை 1,32,928 பேர் 2-வது தவணை கெரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். எனவே இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் சென்று முதல் மற்றும் நிலுவையில் உள்ள 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி ஒத்துழைப்பு நல்குங்கள். காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று 370 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து கணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி:
செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் தட்சிணாமூர்த்திக்கும், ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்த தினகரன் மகள் அபிதா (வயது 23) என்பவருக்கும் கடந்த 26.10.2020 அன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தட்சிணாமூர்த்தியும், அவரது பெற்றோரும் வரதட்சணை கேட்டு அபிதாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அபிதாவின் தாயார் சம்பூர்ணம்(55) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தட்சிணாமூர்த்தி, இவரது தந்தை ஆறுமுகம், தாய் மல்லிகா, தம்பி முருகன், அக்காள்கள் முத்துலட்சுமி, பாக்கியலட்சுமி ஆகியோர் மீது சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அபிதாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் செஞ்சி அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஆனால் நேற்று காலை வரையில் அபிதாவின் தற்கொலை காரணமாக யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் செஞ்சி கூட்டுச்சாலையில் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் ஆகியோர் அபிதாவின் கணவர் வீட்டுக்கு சென்று தட்சிணாமூர்த்தி(27), இவரது தந்தை ஆறுமுகம்(60), தாய் மல்லிகா(52), தம்பி முருகன்(25) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாடினார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காஞ்சீபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வகுப்பறைகள், காணொலி காட்சி வகுப்பறைகள், கணினி வகுப்பறை உள்ளிட்டவைகளை அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் மாணவர்களோடு தரையில் அமர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்கள் படிப்பதை ரசித்து பார்த்து, அவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவரிடம் பள்ளியை மேலும் தரம் உயர்த்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் உள்ள அரசினர் மாதிரி மேல்நிலை பள்ளியில் குழந்தை விஞ்ஞானிகள் ஆய்வகத்தையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார்.
அப்போது மாணவ-மாணவிகள் தங்களது கண்டுபிடிப்புகளின் சிறப்பம்சங்கள் குறித்து அமைச்சரிடம் விளக்கி கூறினர்.
இந்த நிகழ்ச்சிகளில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ, காஞ்சீபுரம் எம்.பி. க.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் எழிலரசன், செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன், ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா ஞானசேகரன், துணைத்தலைவர் வசந்தி குமார், மாவட்ட குழு உறுப்பினர் பத்மா பாபு, ஒன்றியக்குழு உறுப்பினர் ருத்ர கோட்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு எல்லையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம் வரை நீட்டிக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
புதுடெல்லி:
மேற்கு வங்க முதல் மந்திரியும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ளார். திங்கள் கிழமை முதல் டெல்லியில் தங்கியுள்ள மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை இன்று மாலை சந்தித்தார்.
பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு எல்லையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம் வரை நீட்டிக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், திரிபுராவில் மேற்கு வங்க மாநிலத்தவர்கள் மீதான தாக்குதல் குறித்தும் பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி ஆலோசித்திருக்கலாம் என்று தெரிகிறது. டெல்லி சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மம்தா பானர்ஜி நாளை மேற்கு வங்காளம் திரும்புகிறார்.






