என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம்:
வாலாஜாபாத் அருகே உள்ள நாயக்கன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்.ஆர்.பழனி. பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் பழைய வீட்டை இடித்துவிட்டு அதே இடத்தில் புதியதாக வீடு கட்டி உள்ளார்.
நேற்று முன்தினம் வீட்டின் கிரகப்பிரவேசம் நடைபெற்றது. இதையடுத்து பழனி பழைய வீட்டின் அறையை பூட்டிவிட்டு புதிய வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் புதிய வீட்டின் பின்புறம் உள்ள பழைய வீட்டின் கதவை உடைத்து புகுந்த மர்ம கும்பல் பீரோவில் இருந்த 55 சவரன் தங்க நகைகள்,1 கிலோ வெள்ளிப்பொருட்கள் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணம்,மற்றும் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்த பரிசுப் பொருட்களும், மொய்ப்பணத்தையும் அள்ளி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து உடனடியாக வாலாஜாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டை அடுத்த அஞ்சூர் பிராமண தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி பினிதா. கணவன், மனைவி இருவரும் தினந்தோறும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.
நேற்று மாலை திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 7 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.30 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்தித்தில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனி செயல்பட்டு வருகிறது.
இங்கு காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று இரவு பணி முடிந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 27 ஊழியர்களை ஏற்றிக்கொண்டு கம்பெனி பஸ் புறப்பட்டு சென்றது. சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையின் வழியாக காஞ்சிபுரத்தை அடுத்த பாலுச்செட்டி சத்திரம் அருகே பஸ் சென்று கொண்டு இருந்தது.
அப்போது முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்பக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த கம்பெனி பஸ் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருந்த ஊழியர்கள் 15 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் பாலுசெட்டி போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த தேவ நேரி மீனவர் பகுதியை சேர்ந்தர் பரதன் (வயது32). இவர் மோட்டர் சைக்கிளில் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென சாலையோர தடுப்பில் பயங்கரமாக மோதியது.
இதில் நிலைதடுமாறிய பரதன் மோட்டார் சைக்கிளோடு தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.
இங்குள்ள அனந்த சரஸ் குளத்தில் வீற்றிருக்கும் அத்திவரதர் சிலை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே கொண்டு வரப்பட்டு தரிசன விழா விமரிசையாக நடைபெறும்.
கடந்த 2019-ம் ஆண்டு அனந்த சரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் 48 நாட்களுக்கு பிறகு அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராவி மண்டபத்தில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின்னர் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள நீராவி மண்டபம் முழுவதுமாக நிரம்பி உள்ளது.
இந்த குளத்தில் 24 படிக்கட்டுகள் உள்ளன. தற்போது 21 படிக்கட்டுகள் முழுமையாக நீர் நிரம்பி இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக விட்டுவிட்டு பெய்த தொடர்மழை காரணமாக அத்திவரதர் கோவில் குளம் நீராவி மண்டபம் என அனைத்தும் நிரம்பி 3 படிக்கட்டுகள் மட்டுமே வெளியே தெரிகிறது.
இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு அத்திவரதர் குளம் தண்ணீரால் நிரம்பி இருப்பதால் பக்தர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வரதராஜ பெருமாள் கோவிலில் கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை ஒட்டி ஸ்ரீ தாத தேசிக சாற்று முறை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
உற்சவத்தையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு ஆண்டுக்கு ஒருமுறை அணிவிக்கப்பட்டு ஸ்ரீ தேவி, பூதேவி உடன் சிறப்பு அலங்காரம் அத்திகிரி மலையில் இருந்து இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் ரத்ன அங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் பெருந்தேவித் தாயார் உடன் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள் மேள தாளங்கள் முழங்க கோவில் வளாக பிரகாரத்தில் உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.
இதையும் படியுங்கள்... எல்லைகளை பாதுகாக்க உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பம்: அமித் ஷா
காஞ்சிபுரம் சுதர்சன் நகரில் வசித்து வருபவர் கவிதா. இவர் கடந்த 3-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னை அசோக் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
மாலையில் திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்து 43 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவுபடி இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த கொள்ளை தொடர்பாக சேலத்தை சேர்ந்த மனோஜ், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராஜாராம், கார்த்திக் ராஜா, திண்டுக்கல் நிலக்கோட்டையை சேர்ந்த திலிப் திவாகர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 43 பவுன் நகை மீட்கப்பட்டது.
தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து நேரடி விமானங்களிலும், விமானங்கள் மாறி மாற்று விமானங்களிலும் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய சர்வதேச விமானநிலையங்களுக்கு வருபவர்களை அந்தந்த விமானநிலையங்களிலேயே நிறுத்தி, ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனை எடுக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. பரிசோதனை முடிவு வரும் வரை பயணிகளை காத்திருக்கவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழிகாட்டு நடைமுறை இன்று (1-ந் தேதி) அதிகாலை முதல் நடைமுறைக்கு வந்தது. சென்னை விமான நிலையத்தில் வழிகாட்டுதல்களை தடையின்றி செயல்படுத்துவதற்காக விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவனங்கள், மாநில அதிகாரிகள் இன்று டி3, டி4 ஆகியமுனையங்களில் கூட்டு ஆய்வு செய்தனர்.
தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க டி4 முனையத்தில் ஒரு பிரத்யேக நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகள், மாதிரி சேகரிப்பு மற்றும் பணம் செலுத்துதல் ஆகியவற்றிற்கான வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளன.
பயணிகளில் கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு ஒவ்வொரு வசதிக்கும் தனி, தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. டி4 முனையத்தில் விற்பனை நிலையங்கள், தாய்மார்கள் பால் கொடுக்கும் இடம் மற்றும் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி, பொழுதுபோக்கு திரைகள், இலவச வைபை, இலவச தொலைபேசி மற்றும் குளிர்பான விற்பனை எந்திரங்கள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.






