search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை மீட்பு"

    • அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார் தங்களது விசாரணை குறித்து ஊர் பெரியவர்களிடம் தெரிவித்தனர்.
    • கிராமத்தில் உள்ள மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு மின் விளக்குகள் மீண்டும் எரிய விடப்பட்டது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய பொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராகவன் (வயது50), பம்ப் ஆபரேட்டர். இவரது மனைவி பாண்டியம்மாள். 100 நாள் திட்டத்தில் வேலை பார்க்கிறார்.

    சம்பவத்தன்று பாண்டியம்மாள் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 26 பவுன் நகைகள், ரூ.21,500 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து சிந்துபட்டி போலீஸ் நிலையத்தில் ராகவன் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா? என சோதனை நடத்தினர்.

    பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் குறிப்பிடும்படியாக தடயங்கள் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. கிராமத்திற்குள் பட்டப்பகலில் திருட்டு நடந்துள்ளதால் வெளியூரை சேர்ந்த நபர்கள் திருட்டில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை எனவும், இது உள்ளூரில் இருப்பவர்களில் ஒருவரின் கைவரிசையாகத்தான் இருக்கும் என போலீசார் சந்தேகித்தனர்.

    அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார் தங்களது விசாரணை குறித்து ஊர் பெரியவர்களிடம் தெரிவித்தனர். அப்போது கூடிப்பேசிய ஊர் பெரியவர்கள் நகை-பணத்தை திருடியவரை உள்ளூரில் வைத்து கைது செய்தால் கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்படும் என நினைத்தனர். இதையடுத்து நகை-பணத்தை மீட்டுத்தர வேறு வழிமுறையை கையாள முடிவு செய்தனர். இதுகுறித்து கிராமத்தினரிடமும் பேசினர்.

    அதன்படி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஒரு பேப்பர் கவரை கொடுத்தனர். இரவில் பள்ளிக்கூடத்தில் ஒரு பெரிய அண்டாவை வைத்து அனைத்து மின்விளக்குகளையும் அணைத்து விட்டு யாராவது திருடி இருந்தால் கவருக்குள் பொருளை வைத்து அண்டாவிற்குள் போட்டுவிட வேண்டும் என முடிவு செய்தனர்.

    இது தொடர்பான விவரங்களை தண்டோரா மூலம் கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் அறிவித்தனர். இரவு 8 மணிக்கு பள்ளிக்கூட அறையில் 2 அண்டாக்கள் வைக்கப்பட்டது. பின்னர் கிராமத்தில் உள்ள மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு மின் விளக்குகள் மீண்டும் எரிய விடப்பட்டது. 

    ராகவன்-பாண்டியம்மாள்.

    ராகவன்-பாண்டியம்மாள்.

    பின்னர் அண்டாவில் இருந்த கவர்களை பிரித்துப் பார்த்தபோது ஒரு கவரில் நகைகள் இருந்தன. ஆனால் திருடப்பட்ட 26 பவுன் நகைகளில் 23 பவுன் நகை மட்டுமே இருந்தது. மேலும் பணத்தை வைக்கவில்லை. கவரில் இருந்தது திருடப்பட்ட ராகவனின் நகைகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து நகைகளை கிராம பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நகைகளை ராகவனிடம் ஒப்படைத்தனர்.

    தங்களது கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் காணாமல் போன நகைகளை மீட்க பழங்காலத்து நடைமுறைகளை கையாண்ட சுவாரசியமான இந்த சம்பவத்தை பார்த்த போலீசார் கிராம மக்களை பாராட்டினர்.

    இதுதொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது:-

    பொதுவாக அந்த காலத்தில் இருந்தே இதுபோன்ற நடைமுறையை கையாண்டு வருவதாகவும், பழங்காலத்தில் பெரிய பொருட்கள் என்றால் வீடு வீடாக பைகளை கொடுத்தும், மோதிரம் போன்ற பொருட்கள் என்றால் சாணி உருண்டையைக் கொடுத்தும் ஒவ்வொரு வீடாக கொடுப்பது வழக்கம். திருடியவர்கள் அதை கொண்டு வந்து அண்டாவில் போட்டு விடுவார்கள். இப்போது அதே நடைமுறையை கையாண்டதில் நகைகள் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பாக்கி உள்ள நகை-பணத்தை மீட்க மீண்டும் இதே வழிமுறையை கையாளப்போகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    தமிழ் சினிமாக்களில் நகைச்சுவை காட்சிகளில் இதுபோன்ற வழிமுறைகளை பார்த்திருக்கிறோம். ஆனால் நேரடியாக ஒரு கிராமத்தில் இதுபோன்ற காட்சிகளில் நகை மீட்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    9 பவுன் நகை மீட்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் பேக்காடு பகுதியில் வசித்து வருபவர் தமிழ்செல்வி .இவரது வீட்டில் கடந்த 19.9.23 அன்று யாரும் இல்லாத நேரத்தில் 19 பவுன் நகை திருட்டு போனது. இது குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் நேற்று செம்பாக்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் கீழ்குப்பம்சப்- இன்ஸ்பெக்டர் சந்திரன் தனிப்பிரிவு போலீஸ் சரவணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகம் படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கும் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட போது அவர் சின்னசேலம் அருகே உள்ள தென் சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் சந்திரமோகன் (வயது 26 )என்பதும் இவர் நைனார்பாளையம் பேக்காடு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி வீட்டில் நகை திருடியதும் தெரியவந்தது.பின்னர் இவரிடமிருந்து 9 பவுன் நகை மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்திரமோகனை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மீன்சுருட்டி அருகே நகை அடகுக்கடையில் திருடுபோன 151 பவுன் நகை,20 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன
    • இந்த வழக்கில் தொடர்புடைய சுரேஷ், ரஞ்சித், செல்வராஜ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். விரைவில் அவர்கள் பிடிக்கப்பட்டு மீதமுள்ள நகைகள் மீட்கப்படும் என தெரிவிக்க ப்பட்டுள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே நகை அடகுக்கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவரை துளையிட்டு நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 151 பவுன் நகைகள் 20 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மீன்சுருட்டி அருகேயுள்ள பாப்பாகுடி கிராமத்தில் காட்டுமன்னார்குடியை சேர்ந்த சங்கர்லால் என்பவரின் நகை அடகுகடையில், சுவரை துளையிட்டு மர்மநபர்கள் சிலர் 209 பவுன் நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றனர். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்கள் தேடப்பட்டனர். இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தின்மலை கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(வயது35) என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது.

    சுரேஷ் தலைமறைவாக உள்ள நிலையில், அவரது மனைவி பிரியா(26) மூலம், கர்நாடக மாநிலம் தும்கூர் கிராமத்தை சேர்ந்த தாசார் கட்டி(42) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 56 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வழக்கில் கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்(45) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 50 பவுன் நகைகள், 20 கிலோ வெள்ளிப்பொருட்கள் மீட்கப்ப ட்டுள்ளன.

    அதே போல், செங்கல்பட்டு மாவட்டம் வைப்பன கிராமத்தை சேர்ந்த ராஜா(34), முருகன்(39) ஆகியோர் ஆந்திர போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த நிலையில், அவர்களை அழைத்து வந்து விசாரித்ததில், ராஜாவி டமிருந்து 3 பவுன் நகைகள், திருட உபயோ கப்ப டுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் முருகனிடமிருந்து 42 பவுன் நகைகள் மீட்க ப்பட்டுள்ளன. இதையடுத்து ராஜா மற்றும் முருகன் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள சிறைச்சாலையில் ஒப்படைக்கப்பட்டன.

    இந்த திருட்டு வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு 151 பவுன் நகைகள், 20 கிலோ வெள்ளிப் பொருட்கள் மீட்கப்ப ட்டுள்ளன. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சுரேஷ், ரஞ்சித், செல்வராஜ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். விரைவில் அவர்கள் பிடிக்கப்பட்டு மீதமுள்ள நகைகள் மீட்கப்படும் என தெரிவிக்க ப்பட்டுள்ளது




    ×