search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelry Recovery"

    9 பவுன் நகை மீட்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் பேக்காடு பகுதியில் வசித்து வருபவர் தமிழ்செல்வி .இவரது வீட்டில் கடந்த 19.9.23 அன்று யாரும் இல்லாத நேரத்தில் 19 பவுன் நகை திருட்டு போனது. இது குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் நேற்று செம்பாக்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் கீழ்குப்பம்சப்- இன்ஸ்பெக்டர் சந்திரன் தனிப்பிரிவு போலீஸ் சரவணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகம் படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கும் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட போது அவர் சின்னசேலம் அருகே உள்ள தென் சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் சந்திரமோகன் (வயது 26 )என்பதும் இவர் நைனார்பாளையம் பேக்காடு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி வீட்டில் நகை திருடியதும் தெரியவந்தது.பின்னர் இவரிடமிருந்து 9 பவுன் நகை மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்திரமோகனை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • உறவினரை பார்க்க தனது மொபட்டில் தாதகாப்பட்டியில் இருந்து நெத்திமேடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • திருமண மண்டபம் அருகே அவரிடம் இருந்து மர்ம நபர் நகைகள், பணம் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி கேட், நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் கடந்த 5- ந் தேதி உறவினரை பார்க்க தனது மொபட்டில் தாதகாப்பட்டியில் இருந்து நெத்திமேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அன்னதானப்பட்டி எஸ்என்எஸ் திருமண மண்டபம் அருகே அவரிடம் இருந்து மர்ம நபர் நகைகள், பணம் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி சேலம் அம்மாப்பேட்டை, அல்லிக்குட்டை, சத்தி யமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.

    சர்க்கரை வியாபாரி யான இவர் மீது ஏற்கனவே

    இரும்பாலை, கொண்ட

    லாம்பட்டி, அன்னதா னப்பட்டி போலீஸ் நிலை யங்களில், தனியாக செல்லும்

    காதல் ஜோடி மற்றும் இளம்பெண்களை பின் தொடர்ந்து சென்று, ரகசி யமாக படம் பிடித்து, அவர்களை மிரட்டி நகைகள், பணம் பறித்த வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது மேலும் 3 பெண்கள் அளித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து பெண்களிடம் நகைகள், பணம் பறித்த வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள அவரை அன்ன தானப்பட்டி போலீசார் காவலில் எடுத்து விசா ரணை செய்ய கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இதனை ஏற்று நீதிபதி, அவரை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதன்படி சரவணனிடம் இளம்பெண்கள் பாலியல் புகார்கள், வழிப்பறி தொடர்பாக விசாரித்தனர்.இதனையடுத்து அவரிடம் இருந்து 2 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

    • மீன்சுருட்டி அருகே நகை அடகுக்கடையில் திருடுபோன 151 பவுன் நகை,20 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன
    • இந்த வழக்கில் தொடர்புடைய சுரேஷ், ரஞ்சித், செல்வராஜ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். விரைவில் அவர்கள் பிடிக்கப்பட்டு மீதமுள்ள நகைகள் மீட்கப்படும் என தெரிவிக்க ப்பட்டுள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே நகை அடகுக்கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவரை துளையிட்டு நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 151 பவுன் நகைகள் 20 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மீன்சுருட்டி அருகேயுள்ள பாப்பாகுடி கிராமத்தில் காட்டுமன்னார்குடியை சேர்ந்த சங்கர்லால் என்பவரின் நகை அடகுகடையில், சுவரை துளையிட்டு மர்மநபர்கள் சிலர் 209 பவுன் நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றனர். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்கள் தேடப்பட்டனர். இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தின்மலை கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(வயது35) என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது.

    சுரேஷ் தலைமறைவாக உள்ள நிலையில், அவரது மனைவி பிரியா(26) மூலம், கர்நாடக மாநிலம் தும்கூர் கிராமத்தை சேர்ந்த தாசார் கட்டி(42) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 56 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வழக்கில் கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்(45) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 50 பவுன் நகைகள், 20 கிலோ வெள்ளிப்பொருட்கள் மீட்கப்ப ட்டுள்ளன.

    அதே போல், செங்கல்பட்டு மாவட்டம் வைப்பன கிராமத்தை சேர்ந்த ராஜா(34), முருகன்(39) ஆகியோர் ஆந்திர போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த நிலையில், அவர்களை அழைத்து வந்து விசாரித்ததில், ராஜாவி டமிருந்து 3 பவுன் நகைகள், திருட உபயோ கப்ப டுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் முருகனிடமிருந்து 42 பவுன் நகைகள் மீட்க ப்பட்டுள்ளன. இதையடுத்து ராஜா மற்றும் முருகன் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள சிறைச்சாலையில் ஒப்படைக்கப்பட்டன.

    இந்த திருட்டு வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு 151 பவுன் நகைகள், 20 கிலோ வெள்ளிப் பொருட்கள் மீட்கப்ப ட்டுள்ளன. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சுரேஷ், ரஞ்சித், செல்வராஜ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். விரைவில் அவர்கள் பிடிக்கப்பட்டு மீதமுள்ள நகைகள் மீட்கப்படும் என தெரிவிக்க ப்பட்டுள்ளது




    ×