என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை கொள்ளை
    X
    நகை கொள்ளை

    வாலாஜாபாத் அருகே பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.3½ லட்சம்-55 பவுன் நகை கொள்ளை

    வாலாஜாபாத் அருகே பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.3½ லட்சம் மற்றும் 55 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    வாலாஜாபாத் அருகே உள்ள நாயக்கன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்.ஆர்.பழனி. பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் பழைய வீட்டை இடித்துவிட்டு அதே இடத்தில் புதியதாக வீடு கட்டி உள்ளார்.

    நேற்று முன்தினம் வீட்டின் கிரகப்பிரவேசம் நடைபெற்றது. இதையடுத்து பழனி பழைய வீட்டின் அறையை பூட்டிவிட்டு புதிய வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் புதிய வீட்டின் பின்புறம் உள்ள பழைய வீட்டின் கதவை உடைத்து புகுந்த மர்ம கும்பல் பீரோவில் இருந்த 55 சவரன் தங்க நகைகள்,1 கிலோ வெள்ளிப்பொருட்கள் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணம்,மற்றும் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்த பரிசுப் பொருட்களும், மொய்ப்பணத்தையும் அள்ளி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து உடனடியாக வாலாஜாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்பட்டை அடுத்த அஞ்சூர் பிராமண தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி பினிதா. கணவன், மனைவி இருவரும் தினந்தோறும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.

    நேற்று மாலை திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 7 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.30 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×