என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உரையாடிய அமைச்சர்
Byமாலை மலர்24 Nov 2021 12:36 PM GMT
திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாடினார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காஞ்சீபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வகுப்பறைகள், காணொலி காட்சி வகுப்பறைகள், கணினி வகுப்பறை உள்ளிட்டவைகளை அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் மாணவர்களோடு தரையில் அமர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்கள் படிப்பதை ரசித்து பார்த்து, அவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவரிடம் பள்ளியை மேலும் தரம் உயர்த்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் உள்ள அரசினர் மாதிரி மேல்நிலை பள்ளியில் குழந்தை விஞ்ஞானிகள் ஆய்வகத்தையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார்.
அப்போது மாணவ-மாணவிகள் தங்களது கண்டுபிடிப்புகளின் சிறப்பம்சங்கள் குறித்து அமைச்சரிடம் விளக்கி கூறினர்.
இந்த நிகழ்ச்சிகளில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ, காஞ்சீபுரம் எம்.பி. க.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் எழிலரசன், செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன், ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா ஞானசேகரன், துணைத்தலைவர் வசந்தி குமார், மாவட்ட குழு உறுப்பினர் பத்மா பாபு, ஒன்றியக்குழு உறுப்பினர் ருத்ர கோட்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X