என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு பழைய கரூர் ரோடு மோகன் தோட்டத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சரோஜா (வயது 55). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் இது வரை வீட்டுக்கு வரவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களிடம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அவர் எங்கே சென்றார் என தெரியவில்லை.
இது குறித்து சரோஜாவின் மகன் யுவராஜா ஈரோடு தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகிறார்கள்.
அந்தியூர்:
பவானி வருணபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 22). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பவானியில் இருந்து அந்தியூர் குருநாத சுவாமி கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
கோவில் விழாவில் பங்கேற்பதற்காக அவர் வந்தார். அந்தியூரைஅடுத்த செம்புலிச்சாம்பாளையம் அருகே வந்த போது அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பினார்.
அப்போது அந்த வழியாக ஈரோட்டை சேர்ந்த தேவராஜ் என்பவர் ஓட்டி வந்தகாரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் தூக்கிவீசப்பட்ட மாதேஷ் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்தார்.
சிகிச்சைக்காக அவரை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மாதேஷ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஈரோடு மாவட்டத்தில் வெள்ள சேத பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். பவானி, கருங்கல்பாளையம், குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்கு தேவையான பால், ரொட்டி வழங்கப்படுகிறது. பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுகிறது. மேலும் மின்சார வசதி, கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் பாதிக்கப்பட்ட மொத்த வீடுகளின் எண்ணிக்கை 1976, முழுவதும் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 263, பாதியளவு சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை - 114, தண்ணீர் புகுந்து மூழ்கிய வீடுகளின் எண்ணிக்கை - 1599.
வெள்ளத்தால் 806 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மொத்த பரப்பு - 609.69.0 ஹெக்டேர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்த பிறகு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.
தமிழகத்தில் ஏரிகள் குளங்கள் தூர் வாரவில்லை என்று கூறுவது பொய்யான குற்றச்சாட்டு. ஏரி குளங்கள் தூர் வாரப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1511 ஏரிகள் கண்டறியப்பட்டு அங்கு தூர் வார ரூ.328 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1819 ஏரிகளில் மராமத்து பணிகள் நடந்துள்ளது. ஏரிகளில் பராமத்து பணிகள் செய்ய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமை பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இதற்கான பணிகளை செய்வார்கள்.
நமது மாநிலத்தில் ஓடும் காவிரி ஆறு சமநிலை பகுதி ஆகும். இங்கு தடுப்பணை கட்டுவது சவாலானது. இருந்தாலும் ஜெயலலிதா காலத்தில் கொள்ளிடம், ஆதனூர், குமாரமங்கலத்தில் 400 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் முயற்சி நடந்தது. ஆனால் அங்கு நிலங்கள் கையகப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால் அப்பணி நிற்கிறது.
பவானி ஆற்றில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பினால் தான் பவானியில் இவ்வளவு வெள்ள சேதங்கள் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். இது தவறு. நான் பவானி பகுதியில் சுற்றி வளம் வந்தவன் தான். அப்படி எல்லாம் எதுவும் இல்லை.
இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #ErodeFloods
ஈரோடு:
இந்த ஆண்டு பருவமழை தீவிரம் அடைந்ததால் காவிரி ஆற்றில் வரலா காணாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கர்நாடக அணைகளில் திறக்கப்படும் 2 லட்சம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருகிறது. அணை நிரம்பியதால் 2 லட்சம் கன அடி காவிரியில் திறந்து விடப்படுகிறது.
காவிரி வெள்ளத்துடன் பவானி சாகர் அணையில் திறக்கப்படும் 50 ஆயிரம் கன அடி தண்ணீரும், அமராவதி ஆற்றுத் தண்ணீரும் கலப்பதால் 3 லட்சம் கன அடி தண்ணீர் வரை காவிரியில் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இரு கரைகளையும் தொட்டுச் செல்லும் காவிரி வெள்ளம் ஊருக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
பவானி ஆற்றின் சீற்றத்தால் சத்தியமங்கலத்தில் 300 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. 400 வீடுகளை வெள்ளம் சூழந்தது. வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் பவானி நகரமும் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளானது. சின்னாற்றுப்பாலம், மார்க்கெட் வீதி உள்பட பல்வேறு இடங்களில் 550 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த வீடுகளை சேர்ந்த பொதுமக்கள் திருமண மண்டபங்களிலும் பள்ளிகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளிலும் சுமார் 1500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அப்பகுதி மக்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பாக இடங்களில் தங்கி உள்ளனர்.
இதேபோல் காவிரி வெள்ளத்தால் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிகளில் 50 வீடுகளிலும் கொடுமுடி, ஊஞ்சலூர் பகுதிகளில் 250 வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.
காவிரி மற்றும் பவானி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர் கார் மூலம் ஈரோடு மாவட்டம் பவானி சென்றார்.

அங்குள்ள கல்யாண மண்டப முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது கால் முட்டு அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. வேட்டியை மடித்தபடி அந்த தண்ணீரில் இறங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.
தொடர்ந்து பவானி- குமாரபாளையம் பழைய காவிரி ஆற்று பாலத்தையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பவானி மார்க்கெட் பகுதியையும் பார்வையிட்டார்.
பிறகு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மீண்டும் ஈரோடு கருங்கல்பாளையம் வந்த முதல்- அமைச்சர் அங்கு வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்கினார். முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன் கருப்பணன், விஜயபாஸ்கர், தங்கமணி சென்றனர்.
இதைத்தொடர்ந்து ஈரோடு காலிங்கராயன் பயணியர் விடுதியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் வெள்ள சேதம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
இன்று மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும், பவானிசாகர் அணையிலிருந்து ஆற்றுக்கு திறக்கப்பட்ட தண்ணீரும் சேர்த்து 2.15 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் காவிரி கரையோரம் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள சுமார் 28 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அந்த வீடுகளில் இருந்தவர்கள் தங்கள் பொருட்களை பரிசல் மூலம் வெளியே கொண்டு வந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
மேலும் ஆற்றின் கரையில் இருந்த கோவில் வெள்ளத்தில் மூழ்கியது. சுமார் 500-க் கும் மேற்பட்டோர் 2 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான உணவு, உடை, பிற வசதிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் துறை, ஊராட்சி துறை ஊழியர்கள் செய்து வருகின்றனர். பள்ளி பாளையத்தில் இருந்து கொக்கரையான் பேட்டை செல்லும் பாலத்தை தொட்டப்படி தண்ணீர் செல்கிறது.
ஈரோடு காவிரி ஆற்று பாலத்தில் அதிகளவில் வெள்ளம் ஓடுவதால் ஆற்று பாலத்தை கடக்கும் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன.
வெள்ள நீரை பார்ப்பதற்காக இன்றும் மக்கள் அதிக அளவு கூடி இருந்தனர். கருங்கல்பாளையம் காவிரி பழைய ஆற்று பாலத்தை தொட்டபடி தண்ணீர் செல்வதால் 3-வது நாளாக இன்றும் அந்த வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் புதிய பாலத்தின் வழியாக போக்குவரத்து நடைபெறுகிறது. பொது மக்களில் சிலர் வெள்ளத்தை காணும் ஆர்வத்தில் புதிய பாலத்தில் நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
தீயணைப்பு வாகனம், ஆம்புலன்சும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. அவர்களுடன் போலீசார் தொடர்ந்து 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
2004-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் காவிரி பழைய ஆற்றுப்பாலத்தை தொட்டபடி வெள்ளம் ஓடுகிறது.
வெண்டிபாளையம் பகுதியிலும் காவிரி வெள்ளத்தை பார்ப்பதற்காக மக்கள் அதிக அளவில் கூடியுள்ளனர். ஆனால் பாலத்துக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. #tamilnews
பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
அணை தண்ணீர் சத்திய மங்கலத்தை தாண்டி கொடிவேரிக்கு வருகிறது. தற்போது வெள்ளப் பெருக்கு காரணமாக கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 3 நாட்களாக இந்த நிலை நீடித்தது. அணையே தெரியாத அளவுக்கு தண்ணீர் செல்கிறது. இன்று தண்ணீரின் அளவு சிறிது குறைந்தது.
எனினும் இன்றும் கொடிவேரியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. இதனால் குளிக்கும் ஆர்வத்தில் வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து செல்கிறார்கள். தண்ணீர் அதிகம் செல்வதால் யாரும் குளிக்க சென்று வெள்ளத்தில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக கொடிவேரி அணையின் முகப்பு பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்றும் அவர்களது பாதுகாப்பு பணி தொடர்கிறது.
ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அலுவலகம் ஈரோடு வ.உ.சி. பார்க் அருகே பவானி மெயின் ரோட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தில் மொத்தம் 1180 உறுப்பினர்கள் உள்ளனர். லாரி உரிமையாளர் சங்கத்தின் 2017 மற்றும் 2018-ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதன் நகலும் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட ஆண்டு அறிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. உதாரணமாக டீசல் வாங்கியதில் ஆட்டோ மொபைல்ஸ் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் வாராக்கடன் என பல்வேறு வகையில் பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே தாங்கள் ,இந்த விஷயத்தில் தலையிட்டு முறைகேடுகள் குறித்து விசாரித்து அதன் மீதும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
இது பற்றி ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் கேட்டபோது, ‘‘இந்த புகாரில் எந்த ஆதாரமும் இல்லை. இப்படி தவறான புகார் கொடுப்பவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினர். #tamilnews
ஈரோடு மாவட்டத்தில் காவிரி மற்றும் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினை காண ஏராளமான பொதுமக்கள் கரையோரங்களில் குவிந்து வருகின்றனர்.
ஆற்றில் செல்லும் தண்ணீரை செல்போன் மூலம் போட்டோ எடுப்பது, குழுவாக நின்று கொண்டு செல்பி எடுப்பது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கரையோரங்களில் ஒரு சில பகுதிகள் ஆபத்தானவை என்பதால் போலீசார் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்துள்ளனர். ஈரோடு கருங்கல்பாளையம் பாலம், பவானி பழைய பாலம் ஆகியவற்றில் வாகனங்கள், பொதுமக்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று போக்குவரத்திற்கு இடையூறாகவும், ஆற்றின் கரையோரத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு தடையை மீறி சென்று செல்பி எடுத்து பொதுமக்களுக்கு இடையூறாகவும் செயல்பட்டதாக மாவட்டம் முழுவதும் 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சித்தோடு போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகளும், பவானி, பங்களாப்புதூரில் தலா 1 வழக்கும், சத்தியமங்கலத்தில் 3 வழக்கும் கவுந்தப்பாடியில் 2 வழக்குகள் என மொத்தம் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறியதாவது:-
பொது மக்கள் யாரும் போலீஸ் தடை செய்துள்ள பகுதியில் நின்று போட்டோ எடுக்கக்கூடாது. அவ்வாறு மீறி போட்டோ (செல்பி) எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
ஈரோடு:
ஈரோடு செல்லமுத்து தோட்டம் , சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் கிருபாகரன். இவரது மனைவி பிரியா (வயது45). டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
பிரியா சம்பவத்தன்று பெரியார் நகரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக தனது மொபட்டில் அவரது வீட்டுக்குச் சென்றார். வீட்டின் வெளியே மொபட்டை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் உறவினரை சந்தித்து விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மொபைட் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.யாரோ மர்ம நபர் நோட்டமிட்டு மொட்டை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பிரியா ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்தியூர்:
பவானி வருணபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 22). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பவானியில் இருந்து அந்தியூர் குருநாத சுவாமி கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
கோவில் விழாவில் பங்கேற்பதற்காக அவர் வந்தார். அந்தியூரைஅடுத்த செம்புலிச்சாம்பாளையம் அருகே வந்த போது அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பினார்.
அப்போது அந்த வழியாக ஈரோட்டை சேர்ந்த தேவராஜ் என்பவர் ஓட்டி வந்த காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் தூக்கிவீசப்பட்ட மாதேஷ் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்தார்.
சிகிச்சைக்காக அவரை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மாதேஷ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு அருகே உள்ள மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடுத்த காந்தி வீதியை சேர்ந்தவர் ராசு என்கிற சித்தராசு (வயது 39).
இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை மோட்டார் சைக்கிள் ஓட்ட பயிற்சி அளிப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.
அந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்ற அவர் அங்கு வைத்து சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதை அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறினாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசு என்கிற சித்தராசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் ராசு என்கிற சித்தராசு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேட்டூர் அணையில் இருந்தும் பவானிசாகர் அணையில் இருந்தும் மொத்தம் 2.40 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சத்தியமங்கலம், பவானி, கொடுமுடி போன்ற ஊர்களில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ஈரோடு மாநகர பகுதியான பெரிய அக்ரஹாரம், வைரா பாளையம், வெண்டிபாளையம், கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரை போன்ற பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பெரிய அக்ரகாரம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் நீரில் மூழ்கியுள்ளன. அக்ரஹாரம் பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் நீர் புகுந்துள்ளது. வைராபாளையம், வெண்டி பாளையத்தில் உள்ள குப்பை கிடங்கில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வைராபாளையத்தில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் காவிரி ஆற்று நீர் புகுந்துள்ளது. கருங்கல் பாளையம் காவிரி ஆற்றங்கரையில் 10 வீடுகளில் இன்று வெள்ளம் நீர் புகுந்துள்ளது.
15 குடும்பங்கள் இன்று 2-வது நாளாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கருங்கல்பாளையம் போலீசார் ஆற்று பகுதிக்கு மக்கள் நுழைய விடாமல் தடுப்பு அரண் அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.
கருங்கல்பாளையம் பழைய காவிரி ஆற்றுப்பாலத்தில் இன்று 2-வது நாளாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது புதுப்பாலம் வழியாகவே பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பலர் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரை பகுதியை பார்க்க அதிக அளவு கூடி இருந்தனர். #tamilnews






