search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode lorry owner association"

    ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் இன்று ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் மனு அளித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அலுவலகம் ஈரோடு வ.உ.சி. பார்க் அருகே பவானி மெயின் ரோட்டில் செயல்பட்டு வருகிறது.

    இந்த சங்கத்தில் மொத்தம் 1180 உறுப்பினர்கள் உள்ளனர். லாரி உரிமையாளர் சங்கத்தின் 2017 மற்றும் 2018-ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அதன் நகலும் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட ஆண்டு அறிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. உதாரணமாக டீசல் வாங்கியதில் ஆட்டோ மொபைல்ஸ் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் வாராக்கடன் என பல்வேறு வகையில் பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே தாங்கள் ,இந்த வி‌ஷயத்தில் தலையிட்டு முறைகேடுகள் குறித்து விசாரித்து அதன் மீதும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    இது பற்றி ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் கேட்டபோது, ‘‘இந்த புகாரில் எந்த ஆதாரமும் இல்லை. இப்படி தவறான புகார் கொடுப்பவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினர். #tamilnews
    ×