என் மலர்tooltip icon

    ஈரோடு

    • அந்தியூர் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது.
    • சந்தை விறுவிறுப்பாக நடைபெற்று களைகட்டி காணப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தி யூர் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் சனிக்கிழமை மற்றும் ஞாயி ற்றுக்கிழமைகளில் கால்ந டை சந்தை நடை பெறும்.

    மேலும் திங்கட்கிழமை களில் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள், வெற்றி லை, உள்ளிட்ட விற்பனை நடை பெறும். இந்த சந்தை க்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வார்கள்.

    இந்த நிலையில் வரும் 29-ந் தேதி (வியாழ க்கிழமை) பக்ரீத்பண்டிகை கொண்டா டப்பட உள்ளது. இதை யொட்டி மாவட்ட த்தின் பல பகுதி களில் இருந்து அந்தியூர் சந்தைக்கு வியாபாரி களும் விவசாயி களும் ஆடுகளை அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    மேலும் அந்தியூர், சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம், ஈரோடு மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து ஆடு களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இத னால் அந்தியூர் வார ச்சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது.

    இதனால் அந்தியூர் வார ச்சந்தையில் இன்று கூட்டம் அலை மோதியது. சந்தை விறுவிறுப்பாக நடைபெற்று களைகட்டி காணப்பட்டது.

    • குளித்தலையை சேர்ந்த புன்னியராஞ் என்பவர் சரக்கு வாகனத்தை திருடியது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    பெருந்துறை:

    திருப்பூரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 34). இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனி யில் மனிதவள துறை மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இவரது கம்பெனியில் ஆனந்த் என்பவர் டிரை வராக பணியாற்றி வரு கிறார். இவர் கம்பெனிக்கு தேவையான துணிகளை கொண்டு வருவதற்காக செங்கப்பள்ளிக்கு சரக்கு வாகனத்தில் சென்றார்.

    தொடர்ந்து அவர் அங்கு துணிகளை ஏற்றிகொண்டு வந்தார். இதையடுத்து அவர் பெருந்துறை அடுத்த சிப்காட் அருகே ரோட்டோரம் சரக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கு உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அவர் அங்கு சாப்பிட்டு விட்டு திரும்ப வந்து பார்த்தார்.

    அப்போது அங்கு நிறுத்தி இருந்த சரக்கு வாகனம் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சரக்கு வாகனத்தை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த புன்னியராஞ் (34) என்பவர் சரக்கு வாகனத்தை திருடியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் புன்னியராஞ்யை கைது செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் சரக்கு வாகனத்தை மீட்டனர். மேலும் அவர்மீது போலீ சார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த னர்.

    • பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று காலை ஆனி திருமஞ்சன விழா நடந்தது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவி லில் இன்று காலை ஆனி திருமஞ்சன விழா நடந்தது. இதையொட்டி சிவகாமி அம்பாள் மற்றும் நடராஜ பெருமானுக்கு காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இதை தொடர்ந்து நடரா ஜருக்கு மகா ஹோமம் நடத்தப்பட்டது. இதை யடுத்து 108 சங்காபிஷேகம் நடந்தது. மேலும் பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அல ங்காரத்தில் சிவகாமி அம்பாள் மற்றும் நடராஜர் அருள் பாலித்தனர். தொட ர்ந்து தீபாராதனை காட்ட ப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல் பாரியூர் அமர பணீஸ்வரர், ஈஸ்வரன் கோவில் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் இன்று காலை ஆனி திரு மஞ்சன விழா நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரி சனம் செய்தனர்.

    • அந்தியூரில் இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோச னைகளை வழங்கினார்.

    அந்தியூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அந்தியூரில் இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் நடைபெற்ற இம்முகாமை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடா ஜலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதில் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் வரவேற்றார். முகாமில் இதயம், நுரையீரல், சிறுநீரகம், நரம்பியல் உள்ளிட்ட அனைத்து வகை யான சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோச னைகளை வழங்கினார்.

    இதில் 450-க்கும் மேற்பட்டோருக்கு இ.சி.ஜி., 150-க்கும் மேற்பட்டோருக்கு எகோ, 190 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை மற்றும் 800-க்கும் மேற்பட்டோருக்கு ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டன. உயர் சிகிச்சை தேவைப்படு வோருக்கு அரசு மருத்துவ மனை மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

    முதல்- அமைச்சரின் விரி வான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை களும் வழங்க ப்பட்டன. நிகழ்ச்சியில் அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ், துணைத்தலைவர் ஏ.சி. பழனிச்சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் செல்வ குமார், துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், மேற்பா ர்வையாளர் ஈஸ்வரமூர்த்தி, அலுவலகப்பணியாளர் சாந்து முகமது, தினேஷ், சிவலிங்கம், தலைமை எழுத்தர் தாமரை,

    தாசில்தார் பெரியசாமி, நில வருவாய் ஆய்வாளர் சுதாகர், கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ், வருவாய்த்துறையினர், கவுன்சிலர்கள் சண்முகம், சேகர், யாஸ்மின் தாஜ், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் நாகராஜ், மைக்கேல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், சங்கரா பாளை யம் ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி, கெட்டி சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் மாறன், அல்ட்ரா தொண்டு நிறுவன தலைவர் தண்டாயுதபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 2 ஊழியர்கள் வழக்கம் போல் டோக்கன் வழங்கும் வேலை மட்டும் செய்து வந்துள்ளனர்.
    • சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு காலை உணவு பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு அகில் மேடை வீதியில் உள்ள சின்ன மார்க்கெட் வளாகத்தில் அம்மா உணவகம் கடந்த 11 வருடமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 10 சுய உதவி குழுவை சேர்ந்த பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த ஊழியர்கள் டோக்கன் வழங்குதல், சமையல் செய்வது, உணவு பரிமாறுதல் என தங்களுக்குள் வேலைகள் அனைத்தையும் பகிர்ந்து வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் இந்த அம்மா உணவகத்தில் மேலும் 2 பெண் ஊழியர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தபட்டனர். அவர்கள் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் டோக்கன் மட்டுமே வழங்கி வந்துள்ளனர். மற்ற வேலைகளை செய்யவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மற்ற ஊழியர்கள் அவர்களிடம் நீங்களும் இங்கு மற்றவர்கள் போல அனைத்து வேலைகளை செய்ய வேண்டும். டோக்கன் போடும் வேலை மட்டும் செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர்.

    ஆனால் அந்த 2 ஊழியர்கள் வழக்கம் போல் டோக்கன் வழங்கும் வேலை மட்டும் செய்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் இன்று காலை மற்ற 10 ஊழியர்கள் உணவை பரிமாறாமல் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை உணவு சாப்பிட வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் சுகாதார ஆய்வாளர் மணிவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இந்த 2 ஊழியர்களும் மற்றவர்கள் போல் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்று கூறினர்.

    அதற்கு அதிகாரிகள் முதலில் பொதுமக்களுக்கு உணவை பரிமாறுங்கள். பின்னர் பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்றனர்.

    இதனை ஏற்று அம்மா உணவக ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு காலை உணவு பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது. 

    • போலீசார் வாலிபர்கள் 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • அவர்களிடம் இருந்த வெள்ளை ஆடு மற்றும் மோட்டார் சைக்கிளில் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை நத்தக்காடு கருப்பு சாமி கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (65). இவர் மேய்ச்சலுக்கு நத்தக்காடு ஏரி அருகில் தனது விவசாய பூமியில் ஆடுகளை கட்டி வருவது வழக்கம். அதேபோல் சம்பவத்தன்றும் ஆடுகளை அந்த பகுதியில் கட்டி மேய்ச்சலுக்கு விட்டு உள்ளார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் கட்டப்பட்டு இருந்த வெள்ளை ஆடு ஒன்றின் கயிற்றை அவிழ்த்ததை பார்த்து சுப்பிரமணி கூச்சல் போட்டு உள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

    அவர்களை கண்டதும் வாலிபர்கள் 2 பேரும் ஓட்டம் பிடிக்க அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததால் சுப்பிரமணி மற்றும் அக்கம் பக்கத்தினர் அந்த 2 பேரையும் பிடித்து பவானி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பவானி செங்காடுகோட்டை விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த விஜய் என்கிற விஜயகுமார் (23) மற்றும் பவானி சொக்காரம்மன் நகர் பகுதியை சேர்ந்த குமார் (25) என்பதும் தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் வாலிபர்கள் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்த வெள்ளை ஆடு மற்றும் மோட்டார் சைக்கிளில் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • ஈரோடு பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்காக 2,400 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டது.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பாராளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த தொகுதிக்கு அனுப்பும் பணி தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று கர்நாடக மாநிலம் பெங்களூர் பெல் நிறுவனத்தில் இருந்து 2,400 வாக்குப்பதிவு எந்திரங்கள் வேனில் கொண்டு வரப்பட்டது.

    இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர குடோனில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல்கள் கலைக்கப்பட்டு உள்ளே கொண்டு அடுக்கி வைக்கப்பட்டன.

    இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

    அடுத்த வருடம் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இன்று கர்நாடக மாநிலம் பெங்களூர் பெல் நிறுவனத்தில் இருந்து ஈரோடு பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்காக 2,400 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    இதில் 1400 பேலட் எந்திரங்களும், 1000 கட்டுப்பாட்டு கருவி எந்திரங்களும் அடங்கும். இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் தான் ஈரோடு பாராளுமன்ற தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது என்றனர்.

    முன்னதாக பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டது.

    • வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    பவானி போலீசார் ஜம்பை, கோட்டை அம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.

    போலீசார் அவரை நிறுத்தி விசாரித்த போது அவர் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த முகமத் ஜின்னா என தெரிய வந்தது. மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் கடத்தி விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதேபோல் அதே பகுதி யில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அவரைப் பிடித்து விசாரித்த போது அவர் அந்தியூர் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (24) என்பதும் கஞ்சா பொட்ட லங்களை கடத்தி விற்ப னைக்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது. அவரையும் போலீசார் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    கைதான 2 பேரிடம் இருந்தும் 2 மோட்டார் சைக்கிள், ஒரு கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்ய ப்பட்டது.

    • 3 மாணவர்கள் குறித்து அவரது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த ஒரு தகவலும் இல்லை.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி மகேஸ்வரி (35). இவர்களுக்கு சச்சின் என்கிற பிரதீப் (15), மற்றொரு மகன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இதில் சச்சின் என்கிற பிரதீப் பெருந்துறையில் உள்ள ஒரு டுட்டோரியல் கல்லூரியில் 10 -ம் வகுப்பு சேர்ந்து படித்து வந்துள்ளார். அவரோடு செங்கோடம் பாளையத்தை சேர்ந்த உறவினர் அழகிரி மகன் வினோத் (14) என்பவரும் அதே டுட்டோரியல் கல்லூரியில் 10 -ம் வகுப்பு சேர்ந்து படித்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று வழக்கம் போல் காலை சச்சின் என்கிற பிரதீப், வினோத் டுட்டோரியல் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர்.

    அதன் பின்னர் மாலையாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர்கள் கல்லூரிக்கு சென்று விசாரித்த போது இன்று அவர்கள் வகுப்புக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது.

    மேலும் அவர்களுடன் படிக்கும் லோகேஷ்(15) என்ற மாணவனும் மாயமாகி உள்ளார். 3 மாணவர்கள் குறித்து அவரது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த ஒரு தகவலும் இல்லை.

    இதனையடுத்து அவர்களது பெற்றோர் பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு சென்று மாயமான தங்களது மகன்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தனர்.

    அதன் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக கால்நடை மருத்துவக்குழு மூலம் மேற்கொள்ளப்படும்.
    • இம்முகாமில் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் விவசாயிகளுக்கு பரிசும் வழங்கப்பட உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:

    கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 27-ந்தேதி அன்று ஒரு பெரிய அளவிலான "கால்நடை மருத்துவ முகாம்" கால்நடை பராமரிப்புத்துறை,

    ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திட தமிழக அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது.

    இம்முகாமில் பங்குபெறும் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம்,

    மலடு நீக்க சிகிச்சைகள், தாது உப்புக்கலவைகள் வழங்குதல், செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, சுன்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள்,

    நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக கால்நடை மருத்துவக்குழு மூலம் மேற்கொள்ளப்படும்.

    மேலும் கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் மூலம் நடைமுறை படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் கால்நடை வளர்ப்பில் உண்டாகும் சந்தேகங்களுக்கும் முகாமில் பங்கேற்கும் கால்நடை வல்லுநர்களிடமிருந்து பதில் பெறலாம்.

    இம்முகாமில் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் 3 விவசாயிகளுக்கு விருதுகளும், கன்று பேரணி நடத்தி சிறந்த மூன்று கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

    எனவே கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்களது கால்நடைகளுடன் 27-ந்தேதி அன்று ஈரோடு ஒன்றியம், என்.தயிர்பாளையம் கிராமத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரே நாளில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
    • 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ப னை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி நேற்று ஒரே நாளில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    அதில் கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், பெருந்துறை, தாளவாடி, சத்திய மங்கலம், பவானி போன்ற பகுதிகளில் பொது இடத்தில் மது அருந்த அனுமதி கொடுத்ததற்காகவும்,

    அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்டதாகவும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 32 மது பாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    • வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டில் மலர்கொடி இல்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மலர் கொடியை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. அவரது மனைவி மலர்கொ டி (24). அண்ணா மலை பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே கடந்த ஒரு வாரமாக தகராறு ஏற்பட்டு சண்டை போட்டு வந்துள்ள னர்.

    நேற்று வழக்கம்போல் அண்ணாமலை வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டில் மலர்கொடி இல்லை.

    மேலும் வீட்டில் போன், தாலி, கொலுசு ஆகியவற்றை கழற்றி வைத்துவிட்டு மலர்கொடி மாயமானது தெரிய வந்தது. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து அண்ணாமலை பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மலர் கொடியை தேடி வருகின்றனர்.

    ×