search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் திடீர் மாயம்
    X

    10-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் 'திடீர்' மாயம்

    • 3 மாணவர்கள் குறித்து அவரது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த ஒரு தகவலும் இல்லை.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி மகேஸ்வரி (35). இவர்களுக்கு சச்சின் என்கிற பிரதீப் (15), மற்றொரு மகன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இதில் சச்சின் என்கிற பிரதீப் பெருந்துறையில் உள்ள ஒரு டுட்டோரியல் கல்லூரியில் 10 -ம் வகுப்பு சேர்ந்து படித்து வந்துள்ளார். அவரோடு செங்கோடம் பாளையத்தை சேர்ந்த உறவினர் அழகிரி மகன் வினோத் (14) என்பவரும் அதே டுட்டோரியல் கல்லூரியில் 10 -ம் வகுப்பு சேர்ந்து படித்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று வழக்கம் போல் காலை சச்சின் என்கிற பிரதீப், வினோத் டுட்டோரியல் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர்.

    அதன் பின்னர் மாலையாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர்கள் கல்லூரிக்கு சென்று விசாரித்த போது இன்று அவர்கள் வகுப்புக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது.

    மேலும் அவர்களுடன் படிக்கும் லோகேஷ்(15) என்ற மாணவனும் மாயமாகி உள்ளார். 3 மாணவர்கள் குறித்து அவரது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த ஒரு தகவலும் இல்லை.

    இதனையடுத்து அவர்களது பெற்றோர் பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு சென்று மாயமான தங்களது மகன்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தனர்.

    அதன் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×