search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அந்தியூர் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரிப்பு
    X

    அந்தியூர் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரிப்பு

    • அந்தியூர் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது.
    • சந்தை விறுவிறுப்பாக நடைபெற்று களைகட்டி காணப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தி யூர் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் சனிக்கிழமை மற்றும் ஞாயி ற்றுக்கிழமைகளில் கால்ந டை சந்தை நடை பெறும்.

    மேலும் திங்கட்கிழமை களில் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள், வெற்றி லை, உள்ளிட்ட விற்பனை நடை பெறும். இந்த சந்தை க்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வார்கள்.

    இந்த நிலையில் வரும் 29-ந் தேதி (வியாழ க்கிழமை) பக்ரீத்பண்டிகை கொண்டா டப்பட உள்ளது. இதை யொட்டி மாவட்ட த்தின் பல பகுதி களில் இருந்து அந்தியூர் சந்தைக்கு வியாபாரி களும் விவசாயி களும் ஆடுகளை அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    மேலும் அந்தியூர், சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம், ஈரோடு மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து ஆடு களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இத னால் அந்தியூர் வார ச்சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது.

    இதனால் அந்தியூர் வார ச்சந்தையில் இன்று கூட்டம் அலை மோதியது. சந்தை விறுவிறுப்பாக நடைபெற்று களைகட்டி காணப்பட்டது.

    Next Story
    ×