search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "who took off her thali during"

    • வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டில் மலர்கொடி இல்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மலர் கொடியை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. அவரது மனைவி மலர்கொ டி (24). அண்ணா மலை பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே கடந்த ஒரு வாரமாக தகராறு ஏற்பட்டு சண்டை போட்டு வந்துள்ள னர்.

    நேற்று வழக்கம்போல் அண்ணாமலை வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டில் மலர்கொடி இல்லை.

    மேலும் வீட்டில் போன், தாலி, கொலுசு ஆகியவற்றை கழற்றி வைத்துவிட்டு மலர்கொடி மாயமானது தெரிய வந்தது. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து அண்ணாமலை பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மலர் கொடியை தேடி வருகின்றனர்.

    ×