என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஆடிப்பெருக்கை யொட்டி பவானிசாகர் அணை பூங்காவில் ஒரே நாளில் 18 ஆயிரம் பேர் குவிந்த வண்ணம் உள்ளனர்
    • கொடிவேரியில் 13,500 பேர் குளித்து மகிழ்ந்தனர்

    சத்தியமங்கலம்,

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வ தற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொது மக்கள் மட்டுமின்றி தமிழக த்தின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராள மான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட ஏராள மான மக்கள் வந்து தண்ணீரில் குளித்து மகிழ் வார்கள். இதனால் தடுப்பணையில் எப்போது கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் ஆடி பெருக்கை நேற்று வழக்க த்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து கொடி வேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். காலை முதலே ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், சேலம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பலர் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். காலை நேரத்தில் கூட்டம் குறைந்து காணப்பட்டாலும் நேரம் செல்ல, செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது. இதனால் கொடி வேரி பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்களின் தலைகளாக காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் கூட்டம் அலை மோதியது.

    இந்த நிலையில் ஆடி பெருக்கு விழாவையொட்டி நேற்று ஒரே நாளில் சுமார் 15 ஆயிரத்து 500 பேர் வந்து கொட்டும் தண்ணீரில் குளித்து விட்டு சென்றனர். இதன் மூலம் ரூ.67 ஆயிரத்து 500 வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல் சத்திய மங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணைக்கு ஆடிப்பெருக்கு விழாவை யொட்டி ஏராளமான பொதுமக்கள் வந்து இருந்த னர். பவானிசாகர் அணைக்கு காலை நேரத்தில் கூட்டம் குறைந்து காணப்பட்டாலும் நேரம் செல்ல, செல்ல மக்களின் கூட்டம் அதி கரித்து கொண்டே இருந்தது.

    ஆடி பெருக்கையொட்டி அணையின் மேல் பகுதியில் பொதுமக்கள் அனுமதி க்கப்படுவார்கள். ஆனால் இந்த ஆண்டு பாதுகாப்பு கருதி அணையின் மேல் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பவானிசாகருக்கு வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இதை தொடர்ந்து அவர்கள் அணை பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். குழந்தைகளுடன் வந்து இருந்த மக்கள் அங்கு ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர். இதனால் பவானிசாகர் முழுவதும் மக்கள் கூட்டம் அலை மோதியது. தொடர்ந்து பொது அங்கு விற்பனை செய்யப்படும் மீன் வகைகளை ருசித்து விட்டு சென்றனர்.இதனால் நேற்று ஒரே நாளில் பவானிசாகர் அணை பூங்காவுக்கு சுமார் 18 ஆயிரத்து 394 பேர் கண்டு களித்தனர். இதன் மூலம் ரூ. 91 ஆயிரத்து 470 வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நம்பியூர் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
    • அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்தினை ஆய்வு மேற்கொ ண்டு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகள் மற்றும் நம்பியூர் பேரூரா ட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.6.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வே று வளர்ச்சி திட்டப்பணிக ளை கலெக்டர் ராஜ கோபா ல் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    நம்பியூர் பேரூராட்சிக்கு ட்பட்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடம், கலைஞர் நகர்ப்பு ற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நம்பியூர் வார சந்தை வளாகத்தில் ரூ.460.63 இல ட்சம் மதிப்பீட்டில் சந்தை மேம்பாடு செய்யும் பணி, குருமந்தூர் அரசு மேல்நிலை ப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.3.75 இலட்சம் மதிப்பீட்டில் பே வர் பிளாக் அமைக்கும் பணி, நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் அஞ்சனூர் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பா ட்டு திட்டத்தின் கீழ் ரூ.56.83 இலட்சம் மதிப்பீட்டில் இருகலூர் முதல் சுண்ணா ம்புகரையூர் வரையிலான சாலை மேம்பாடு செய்யும் பணி, பூசாரிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் சமத்து வபுரம் திட்டத்தின் கீழ் ரூ.29.44 இலட்சம் மதிப்பீ ட்டில் வீடுகள் சீர் செய்யும் பணி, ரூ.19.75 இலட்சம் மதிப்பீட்டில் 6 எண்ணிக்கை யிலான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணி என மொத்தம் ரூ.620.40 இலட்சம் மதிப்பீ ட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெ க்டர் நேரில் சென்று பா ர்வையிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    முன்னதாக நம்பியூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்தினை ஆய்வு மேற்கொ ண்டு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் மொட்டணம் பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயிக்கு ரூ.30 ஆயிரம் மானிய உதவியுடன், ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் கறவை மாடு வாங்குதல் உள்ளிட்ட வேளாண் உபக ரணங்களும் வேட்டை யம்பாளையம் மற்றும் எழத்தூர் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2 விவசாயிகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் மானிய உதவியுடன் தார்ப்பாய் மற்றும் பேட்டரியால் இய ங்கும் தெளிப்பான் ஆகியவ ற்றையும் வழங்கினார். இந்த ஆய்வின்போது நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார், செயல் அலுவலர் நடரா ஜன், நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரதராஜன், சுபா, நம்பியூர் வட்டாட்சியர் மாலதி உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • கரும்பு தோட்டத்துக்குள் பதுங்கி உள்ள சிறுத்தை எந்நேரமும் மீண்டும் ஊருக்குள் வரலாம் என்பதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
    • சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சர ங்கங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, காட்டெ ருமை, கரடி என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    உணவு, தண்ணீர் தேடி யானைகள் அவ்வபோது விவசாயத் தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதாரம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதேபோல் ஜூர்கள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை மற்றும் புலிகள் ஊருக்குள் புகுந்து விவசாய தோட்டத்தில் உள்ள கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.

    இந்த நிலையில் தாளவாடி அடுத்த திகனாரை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 41).விவசாயியான இவர் நேற்று இரவு 8 மணியளவில் தனது வீட்டின் முன்பு சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த போது வீட்டின் காம்பவுண்ட் சுவர் கேட் முன்பு சிறுத்தை ஒன்று நின்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே முருகன் வீட்டின் கதவை மூடிவிட்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று விட்டார். பின்பு அங்கு சிறுத்தை நின்று கொண்டிருப்பதை தனது செல்போனில் படம் எடுத்தார்.

    பின்னர் சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்த சிறுத்தை அருகில் உள்ள கரும்பு காட்டுக்குள் சென்று பதுங்கியது. மேலும் கரும்பு தோட்டத்துக்குள் பதுங்கி உள்ள சிறுத்தை எந்நேரமும் மீண்டும் ஊருக்குள் வரலாம் என்பதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். உடனடியாக வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • யானை அங்குள்ள வெங்கடேஷ் என்பவரின் மளிகை கடையின் ஷட்டர் கதவை துதிக்கையால் அடித்து உடைத்து திறந்தது.
    • கடையில் 2 குலைகளில் தொங்க விடப்பட்டிருந்த வாழைப்பழங்கள் மற்றும் தக்காளி, அரிசி, காய்கறி உள்பட மளிகை பொருட்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகள் உள்ளன. இதில் யானைகள் உணவு, தண்ணீர் தேடி அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து யானை ஒன்று வெளியேறியது. பின்னர் அந்த யானை ஆசனூர் அருகே உள்ள பங்களாதொட்டி கிராமத்துக்குள் புகுந்தது.

    பின்னர் அந்த யானை அங்குள்ள வெங்கடேஷ் என்பவரின் மளிகை கடையின் ஷட்டர் கதவை துதிக்கையால் அடித்து உடைத்து திறந்தது.

    கடையில் 2 குலைகளில் தொங்க விடப்பட்டிருந்த வாழைப்பழங்கள் மற்றும் தக்காளி, அரிசி, காய்கறி உள்பட மளிகை பொருட்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது. சத்தம் கேட்டு அருகே உள்ள வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் வெளியே வந்து பார்த்த போது, மளிகை கடைக்குள் யானை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஆசனூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிட போராட்டத்துக்கு பிறகு யானை காட்டுக்குள் சென்றது.

    அதேபோல் ஓங்கல்வாடி கிராமத்தில் ராஜ் என்பவரின் கரும்புத் தோட்டத்துக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்பை தின்று சேதம் செய்துவிட்டு சென்றது. இதில் ½ ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சேதம் அடைந்தது.

    • சிவகிரி அருகே கார் மோதியதில் 1½ வயது சிறுமி பலியானார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    சிவகிரி,

    சிவகிரி முத்தூர் ரோடு நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 32). இவரது மனைவி மோகன பிரியா (29). இவர்களுக்கு தமிழ் மாறன் (6) என்ற மகனும், 1 1/2 வயதில் தமிழினி என்ற மகளும் உள்ளனர். பூபாலனின் தாய் விஜயா (60) சிவகிரி ஜீவா தெருவில் உள்ள ஒரு தனியார் பனியன் தைக்கும் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் விஜயா வேலைக்கு செல்லும் போது தனது பேத்தி தமிழினியை அழைத்து சென்றுள்ளார். சம்பவத்தன்று பனியன் தைக்கும் நிறுவனத்தின் முன்பு தமிழினி நின்று கொண்டிருந்தார்.

    இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் காரை பின்னோக்கி எடுத்துள்ளார். அப்போது தமிழினி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த தமிழினியை அங்கிருந்தவர்கள் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தமிழினி இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து குழந்தையின் உடலை பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் சிறையில் அடைக்கப்பட்டார்
    • போலீ–சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்–த–னர்.

    கடத்–தூர்,

    ஈரோடு மாவட்–டம் கோபி அருகே உள்ள நம்பி யூர் பகு–தியை சேர்ந்–த–வர் 23 வயது பெண். இவர் திரும– ண–மாகி கண–வர், குழந்தையு டன் வசித்து வரு–கி–றார். பொல–வ–பா–ளையம் பகுதி யை சேர்ந்–த–வர் முருகேசன் (வயது 55). இவர் கடம்–பூர் மலைப்–ப–குதி குன்–றி–ல் கிராம நிர்–வாக அலுவலராக பணி–யாற்றி வரு–கி–றார்.

    இந்த நிலை–யில் இவரை அந்த பெண் சந்–தித்து தனக்கு வேலை வழங்குமா றும், இதற்–காக உங்–கள் வீட்–டுக்கு வந்து நான் படித்த சான்–றி–தழ்–களை தரு–கி–றேன் என்–றும் ஏற்–க–னவே கூறி–யுள்–ளார். ஆனால் கிராம நிர்–வாக அலு–வ–லர் நீங்–கள் என்–னு–டைய வீட்–டுக்கு வர வேண்–டாம். நானே உங்–கள் வீட்–டுக்கு வந்து சான்–றி–தழ்–களை பெற்–றுக்–கொள்கி றேன் என்று கூறி–யுள்–ளார். இதைத்–தொ–டர்ந்து கிராம நிர்–வாக அலு–வ–லர் சம்பவ த்தன்று அந்த பெண்–ணின் வீட்–டு்க்கு சென்று சான்றித ழ்கள் கேட்டுள்ளார்.

    வீட்டு வாச–லில் நின்றிரு ந்த அந்த பெண் சான்றித ழ்கள் எடுத்துவர உள்ளே சென்–றுள்–ளார். அப்போது அவரை முரு–கேசன் பின்–தொ–டர்ந்து சென்–றுள்–ளார். சற்–றும் எதிர்–பா–ராத வகை யில் அவர் அந்த பெண்ணை பாலி–யல் பலாத்–கா–ரம் செய்ய முயன்–ற–தாக கூறப்–ப–டு–கிறது. இத–னால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்–தம் போட்–டுள்–ளார். இதை கேட்டு அக்–கம்–பக்–கத்–தி–னர் அங்கு ஓடி–வந்–துள்–ள–னர். பொது–மக்–கள் வரு–வதை பார்த்–த–தும் கிராம நிர்–வாக அலுவலர் அங்கிருந்து தப்பி சென்–றுள்–ளார். இது குறித்து அந்த பெண் கட த்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் –பே–ரில் போலீ–சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்–த–னர். விசா–ர–ணையில் பெண்ணை கிராம நிர்–வாக அலு–வ–லர் முருகேசன் பாலி–யல் பலாத்–கா–ரம் செய்ய முயன்–றதை ஒப்–புக்–கொண்–டார். அதைத்–தொ–டர்ந்து அவரை போலீ–சார் கைது செய்–தனர். பின்னர் முருகேசனை நீதிம ன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • டி.என்.பாளையம் அருகே மகனின் காலை கத்தியால் வெட்டிய தாய் கைது செய்யப்பட்டார்
    • பலத்த காயம் ஏற்பட்ட அய்யப்பன் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து ள்ளார்

    டி.என்.பாளையம்,

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே யுள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி கோவிலூர் ரேசன் கடை வீதியை சே ர்ந்தவர் அய்யப்பன் (வயது 37). இவர் ஆம்னி வேனை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார். அய்யப்பன் மனைவி மற்றும் இரு மக ன்களை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அய்ய ப்பனின் தாயார் மாரிய ம்மாள் (61) கொங்கர்பா ளையம் பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று மாரியம்மாளை வீட்டுக்கு வந்து விடுமாறு அய்யப்பன் அழைத்து ள்ளார். ஆனால் மாரியம்மா ள் மகன் அய்யப்பன் உடன் செல்ல மறுத்துள்ளார். இதி ல் வாக்குவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாரி யம்மாள் தனது கையில் வைத்திருந்த கரும்பு வெ ட்டப் பயன்படுத்தும் கத்தி யால் மகன் அய்யப்பனின் வலது காலில் வெட்டி யுள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்ட அய்யப்பன் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து ள்ளார். இதையடுத்து அய்ய ப்பன் தனது தாயார் மீது பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிய ம்மாளை கைது செய்தனர்.

    • பவானிசாகர் அருகே மின் கசிவால் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது
    • தனக்கு அரசு உரிய இழப்பீடு தர வேண்டு ம் என விவசாயி சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

    சத்தியமங்கலம்,

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள பகுத்த ம்பாளையம் வடக்கு தோட்டம் பகுதியைச் சே ர்ந்தவர் சக்திவேல் (வயது 47). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார்.இந்நிலையில் நேற்று மாலை இவரது தோட்ட த்தில் அருகே அமைக்கப்ப ட்டி ருந்த டிரான்ஸ்பார்மரில் மின்கசிவு காரணமாக கரு ம்பு பயிரில் மின்சாரம் பா ய்ந்து தீப்பிடித்ததில் கரும்பு பயிர்கள் எரிந்து சேதமா னது. உடனடியாக இதுகுறி த்து சத்தியமங்கலம் தீயணை ப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரை ந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்ப டுத்தினர். இருந்தாலும் காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவி கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்து சேதம டைந்தது. கரும்பு நன்கு வள ர்ந்து வெட்டும் தருவாயில் இந்த விபத்து நடந்துள்ளது. இதனால் தனக்கு அரசு உரிய இழப்பீடு தர வேண்டு ம் என விவசாயி சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • ஆடிப்பெருக்கையொட்டி பவானிசாகர், கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
    • கடும் சோதனைக்கு பிறகு சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குளிக்க அனுமதி க்கப்பட்ட னர்.

    கோபி,

    ஆடிப்பெருக்கை ஒட்டி இன்று ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. ஆடிப்பெருக்கு வெட்டி பவானி சங்கமே ஸ்வரர், ஈரோடு கருங்கல்பா ளையம் காவிரி கரை, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாரி முதலை ஏராளமான மக்கள் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்ப ணம் கொடுத்தனர். மேலும் புதுமண தம்பதிகள் ஆற்றில் புனித நீராடி மஞ்சள் கயிறை மாற்றிக்கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து விடு முறையை கொண்டாடும் வகையில் பவானிசாகர் அணை பூங்காவில் இன்று காலை முதலே கூட்டம் குவிய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பொது மக்கள் தங்களது குடும்பத்து டன் பூங்காவுக்கு படை யெடுக்க தொடங்கினர்.பூங்காவில் எங்கு பார்த்தா லும் மக்கள் தலையாகவே காட்சி யளித்தது. பூங்காவை ஒட்டி உள்ள மீன் கடைகளில் இன்று வியாபாரம் விறு விறுப்பாக நடைபெற்றது.

    ஏராளமான புதுமண தம்பதிகள், காதல் ஜோடிகள் பூங்காவில் குவிந்து பொழுதை உற்சாகமாக கழித்தனர். ஆண்டுக்கு ஒரு முறை ஆடிப்பெருக்கை யொட்டி பவானிசாகர் அணை நீர்த்தேக்க மேற்பகுதியில் சுற்றுலா பயணிகள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டு வந்தது. பவானிசாகரின் மேற்பகுதியில் பொதுமக்கள் சென்று பவானிசாகர் அணையின் அழகை ரசித்து வந்தனர். ஆனால் கொரோ னா தாக்கம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக நீர்த்தேக்க மேற்பகுதியில் பொதுமக்கள் அனு மதிக்கப்பட வில்லை.

    ஆனால் இந்த முறை அணையின் நீர் தைக்க மேற்பகுதியை பார்க்க அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இந்த ஆண்டும் நீர் தைக்க மேற்பகுதியில் பொதுமக்கள் பார்க்க அனுமதி இல்லை என நீர்வளத் துறையினர் தெரிவித்து விட்டனர். பாது காப்பு நடவடிக்கை காரண மாக தடை விதிக்கப்ப ட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்து இருந்தனர்.

    தற்போது பவானிசாகர் அணையில் 84 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பி உள்ளதால் கடல் போல் காட்சி அளிக்கிறது. மேலும் நீர் தேக்கப் பகுதியில் மரங்களில் தேனீக்கள் கூடுகள் பெரிய அளவில் கட்டியுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக தடை விதிக்கப்ப ட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணி கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும் பவானிசாகர் அணை பூங்காவில் சென்ற பொழுது கழித்தனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக திகழும் கோபியை அடுத்த கொடிவேரி அணையில் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கினர். ஈரோடு மட்டுமன்றி சேலம், திருப்பூர், கோவை, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்த வண்ணம் இருந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு நகராட்சி சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளே கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    கடும் சோதனைக்கு பிறகு சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குளிக்க அனுமதி க்கப்பட்ட னர். காலை 8 மணிக்கு பிறகு கூட்டம் அதிக அளவில் வர தொடங்கியது. அணைப்பகுதியில் உள்ளே பூங்காவிலும் கூட்டம் அதிக அளவில் இருந்தது. குழந்தை கள் பெரியவர்கள் உற்சாக மாக பொழுதை கழித்தனர். கொடிவேரி அணை பகுதியில் வெளியே சுடச்சுட பொரித்த மீன் வியாபாரம் மும்மரமாக நடைபெற்றது. தற்போது கொடிவேரியில் தண்ணீர் அதிக அளவில் விழுவதால் பயணிகள் உற்சாக குளியல் போட்டனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பூங்காக்களில் மக்கள் பொழுதை கழித்தனர். 

    • கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 12 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
    • கோழி கழிவுகளை கொண்டு மின் சாரம் தயாரிக்கப்படுகிறது.

    கோபி,

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலா ண்மை திட்டத்தின் கீழ் தினமும் 18 டன் திடக்கழி வுகள் சேகரம் செய்யப்ப டுகிறது. இதில் 9 டன் மக்கும் கழிவுகளை இயந்திர த்தில் அரைத்து தொட்டி களில் நிரப்பப்பட்டு 40 நாட்கள் மக்கிய பிறகு அவ ற்றை குறைந்த விலைக்கு விவசாயி களுக்கு வழங்க ப்படுகிறது. 3 டன் அதிக ஈரப்பதம் உள்ள உணவு கழிவுகள், பழ கழிவுகள் மற்றும் கோழி கழிவுகளை கொண்டு மின் சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மின்சாரத்தைக் கொ ண்டு இயந்திரங்கள் இயக்க ப்படுகிறது. மக்காத மறுசுழ ற்சிக்கு பயன்படும் சில வகையான கழிவுகளை தூய்மை பணியாளர்கள் விற்று பணப்பயன் அடைகி ன்றனர்.

    மக்காத மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பேப்ப ர்கள் போன்றவற்றை மா ற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனு ப்பி வைக்கப்படுகிறது. தற்போது 12 டன் பிளா ஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்க ப்பட்டது. இதுவரையிலும் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இருந்து 3 ஆயிரத்து 250 டன் பிளா ஸ்டிக் கழிவுகள் மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனு ப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த னர்.

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
    • புதுமண தம்பதிகள் ஏராளமானோர் பண்ணாரி அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆடிப்பெரு க்கையொட்டி இன்று அதி காலை முதலே கோவி ல்களில் பக்தர்கள், பொது மக்கள் வழிபட குவிந்த வண்ணம் இருந்தனர். ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று காலை முதலே நடை திறக்க ப்பட்டு பண்ணாரி அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை செய்ய ப்பட்டது. புதுமண தம்பதி கள் ஏராளமானோர் பண் ணாரி அம்மனை தரிசித்து வழிபட்டனர். பண்ணாரி அம்மன் சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதைப்போல் கோபி செட்டி பாளையத்தில் உள்ள புகழ் பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் பொதுமக்கள் ஏராளமானோர் சென்று அம்மனை வழிபட்டனர். இதே போல் கோபி சாரதா மாரியம்மன் கோவில், முடச்சூர் பால மாரியம்மன் கோவில் மற்றும் முருகன் கோயில்களில் ஆடிப்பெ ருக்கை ஒட்டி சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதைப்போல் அந்தியூ ரில் பிரசித்தி பெற்ற பத்திர காளி அம்மன் கோவிலில் காலை முதலே நடை திறக்க ப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அந்தியூர் பேட்டை பெருமாள் செல் ஈஸ்வரர் கோவில், வரத ராஜ பெருமாள் கோவி லிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஈரோடு மாநகரில் மிகவும் புகழ் பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பெண்கள் நீண்ட வரிசை யில் நின்று பெரிய மாரிய ம்மன் தரிசித்து சென்றனர்.

    இதைப்போல் சின்ன மாரியம்மன், காரை வாய் க்கால் மாரியம்மன், கொங் காலம்மன் வீரப்பன்சத்தி ரம் மாரியம்மன் போன்ற பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைக நடைபெ ற்றது. ஆடிப்பெருக்கையொ ட்டி மாவட்டம் முழுவதும் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது
    • அணையில் இருந்து 1205 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.82 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 784 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 200 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் அணையில் இருந்து 1205 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ×