என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிவகிரி அருகே கார் மோதியதில் 1½ வயது சிறுமி பலி
- சிவகிரி அருகே கார் மோதியதில் 1½ வயது சிறுமி பலியானார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
சிவகிரி,
சிவகிரி முத்தூர் ரோடு நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 32). இவரது மனைவி மோகன பிரியா (29). இவர்களுக்கு தமிழ் மாறன் (6) என்ற மகனும், 1 1/2 வயதில் தமிழினி என்ற மகளும் உள்ளனர். பூபாலனின் தாய் விஜயா (60) சிவகிரி ஜீவா தெருவில் உள்ள ஒரு தனியார் பனியன் தைக்கும் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் விஜயா வேலைக்கு செல்லும் போது தனது பேத்தி தமிழினியை அழைத்து சென்றுள்ளார். சம்பவத்தன்று பனியன் தைக்கும் நிறுவனத்தின் முன்பு தமிழினி நின்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் காரை பின்னோக்கி எடுத்துள்ளார். அப்போது தமிழினி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த தமிழினியை அங்கிருந்தவர்கள் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தமிழினி இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து குழந்தையின் உடலை பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்