என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். குருங்குடி என்ற கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
வெடிவிபத்தில் கட்டடங்கள் தரைமட்டமாகி உள்ளன. மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வெடிவிபத்து நிகழ்ந்த கட்டடத்தில் திருவிழாக்களுக்கு பயன்படுத்தும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தின் சத்தம் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். குருங்குடி என்ற கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
வெடிவிபத்தில் கட்டடங்கள் தரைமட்டமாகி உள்ளன. மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வெடிவிபத்து நிகழ்ந்த கட்டடத்தில் திருவிழாக்களுக்கு பயன்படுத்தும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தின் சத்தம் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
வெடிவிபத்தில் இறந்த 5 பேரும் பெண்கள் என்றும், மேலும் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முருகுமாறன் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. கவலைக்கிடமான நிலையில் இருந்த 4 பெண்களில் 2 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
குருங்குடியில் நிகழ்ந்த விபத்தில் நாட்டுவெடி தயாரிப்பு ஆலை உரிமையாளர் காந்திமதி உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.
குருங்குடியில் நிகழ்ந்த விபத்தில் நாட்டுவெடி தயாரிப்பு ஆலை உரிமையாளர் காந்திமதி உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.
பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளதால் மாவட்டத்தில் கூடுதலாக 25 பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார்.
கடலூர்:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் தமிழக அரசு வெளியிட்ட புதிய தளர்வுகளில் செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து மாவட்டத்திற்குள் பஸ் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் முதல் கடலூர் மாவட்டத்திற்குள் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் பயணிகளின் வருகை குறைவாக இருந்ததால் பஸ்களில் கூட்டம் குறைவாக இருந்தது. சில பஸ்களில் 10 பேருக்கும் குறைவான நபர்களே பயணம் செய்ததை காண முடிந்தது. பஸ் நிலையங்களிலும் பயணிகள் நடமாட்டம் மிக குறைவாக இருந்தது. இந்நிலையில் நேற்று வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயணிகள் வருகை அதிகரித்தது.
பஸ்களிலும் கூட்டம் அதிகரித்தது. இருப்பினும் சமூக இடைவெளியை கடைபிடித்து 24 பேர் மட்டுமே செல்ல அறிவுறுத்தப்பட்டதால், அனுமதிக்கப்பட்ட நபர்கள் சென்றனர். இது பற்றி போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், முதல் நாள் 300 பஸ்களை இயக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் பயணிகள் வருகை குறைவாக இருந்ததால் 125 பஸ்களை தான் இயக்கினோம். ஆனால் இன்று (நேற்று) சில இடங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் கூடுதலாக 25 பஸ்களை இயக்கினோம். குறிப்பாக கடலூர்- சிதம்பரம், சிதம்பரம்- கடலூர், கடலூர்-பண்ருட்டி, கடலூர்- விருத்தாசலம் வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையில் வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் பஸ்களை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்ப பஸ்களை தயார் செய்து வருகிறோம் என்றார்.
என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த மளிகைக்கடைக்காரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் கீழச்சாவடியை சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மகன் பாரதிராஜா (வயது 30). என்ஜினீயரான இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வை சந்தித்து புகார் மனு அளித்தார். அதில், தான் என்ஜினீயரிங் முடித்துள்ளதாகவும், கடந்த 2017-ம் ஆண்டு திட்டக்குடியை சேர்ந்த மளிகைக்கடைக்காரர் சரவணன் (52), செவ்வேரி கிராமத்தை சேர்ந்த சேவாங்கியன் மகன் வெங்கடேசன் (45) ஆகிய 2 பேரும் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.
அப்போது எனக்கும், என்னுடைய அண்ணன் மோகனுக்கும் 45 நாட்களில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் என்ஜினீயர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.30 லட்சம் தர வேண்டும் என்று கூறி, முன்பணமாக ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டனர். ஆனால் இது வரை அவர்கள் வேலை வாங்கி தரவில்லை. இதனால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அதற்கு ரூ.4 லட்சம் மட்டும் திருப்பி கொடுத்தனர். மீதி ரூ.6 லட்சத்தை பலமுறை கேட்டும் அவர்கள் தரவில்லை. ஆகவே ரூ.6 லட்சத்தை மோசடி செய்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு இது பற்றி உரிய விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) வெங்கடேசன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் 2 பேரும் சேர்ந்து பாரதிராஜாவை மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திட்டக்குடி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரவணனையும், விருத்தாசலம் பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த வெங்கடேசனையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கடலூர் பாடலீஸ்வரர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டன. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. இருப்பினும் பக்தர்கள் இன்றி கோவில்களில் பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு சிறிய கோவில்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர், புதிய தளர்வுகளை அறிவித்தார். அதில் அனைத்து கோவில்களையும் திறக்க உத்தரவிட்டார். இதன்படி நேற்று கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெரிய கோவில்களும் திறக்கப்பட்டன. இதன்படி புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
முன்னதாக காலை 5.30 மணிக்கே பக்தர்கள் வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் அவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே கோவிலுக்குள் செல்ல தீட்சிதர்கள் அனுமதித்தனர். தொடர்ந்து நடராஜர் சன்னதியில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இருப்பினும் பக்தர்கள், தீட்சிதர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர்.
இதேபோல் கடலூர் பாடலீஸ்வரர் கோவில் நேற்று கைலாய வாத்தியங்கள் முழங்க திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் ஊழியர்கள், வாசல் முன்பு நின்று கொண்டு, பக்தர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே கோவிலுக்குள் செல்ல அனுமதித்தனர். முன்னதாக அவர்கள் கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு நின்றனர். இருப்பினும் முக கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், வட்டம் போடப்பட்டு இருந்தது. அதில் பக்தர்கள் நின்றபடி வரிசையாக சென்று சாமியை தரிசனம் செய்தனர். ஆனால் பிரசாதம் வழங்கப்படவில்லை. நேற்று ராகு-கேது பெயர்ச்சி என்பதால் கூட்டம் அலைமோதியது. இருப்பினும் மதியம் 12 மணிக்கு பிறகு நடை சாத்தப்பட்டது. அதன்பிறகு மாலையில் கோவில் திறக்கப்பட்டது. அப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள், திருவந்திபுரம் தேவநாதசாமி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் உள்பட பல்வேறு கோவில்களும் திறக்கப்பட்டு இருந்தது. ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவில் நடை நேற்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டு, மூலவர் பூவராகபெருமாளுக்கு திருமஞ்சனம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு சோப்புத்திரவம் வழங்கப்பட்டது. இதை வைத்து பக்தர்கள் கை கழுவினர். தொடர்ந்து அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பிறகே அவர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் 15-க்கும் மேற்பட்டோர் சுற்று பிரகாரங்களில் நின்று கொண்டு, பக்தர்களிடம்அரசின் செயல்முறை விளக்கங் களை கடைபிடிக்குமாறு அறிவுரை வழங்கினர்.
ஆனால் பக்தர்கள் அர்ச்சனை செய்வதற்கு அனுமதியில்லை. கோவிலுக்குள் அமரவும், தரையில் விழுந்து வணங்குவதற்கும் அனுமதி இல்லை. சமூக இடைவெளியுடன் ஒருவர் பின் ஒருவராக கருவறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பிரசாதம் அர்ச்சகரால் பக்தர்களுக்கு நேரடியாக வழங்கப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நரசிங்கப்பெருமாள் மற்றும் நம்மாழ்வார் கைங்கர்யசபா பக்தர்கள், தன்னார்வலர்கள் செய்திருந்தனர். மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 229 பெரிய கோவில்களும் நேற்று திறக்கப்பட்டன.
இவை அனைத்திலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. முன்னதாக நவக்கிரகம் உள்ள கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
முன்னதாக காலை 5.30 மணிக்கே பக்தர்கள் வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் அவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே கோவிலுக்குள் செல்ல தீட்சிதர்கள் அனுமதித்தனர். தொடர்ந்து நடராஜர் சன்னதியில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இருப்பினும் பக்தர்கள், தீட்சிதர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர்.
இதேபோல் கடலூர் பாடலீஸ்வரர் கோவில் நேற்று கைலாய வாத்தியங்கள் முழங்க திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் ஊழியர்கள், வாசல் முன்பு நின்று கொண்டு, பக்தர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே கோவிலுக்குள் செல்ல அனுமதித்தனர். முன்னதாக அவர்கள் கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு நின்றனர். இருப்பினும் முக கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், வட்டம் போடப்பட்டு இருந்தது. அதில் பக்தர்கள் நின்றபடி வரிசையாக சென்று சாமியை தரிசனம் செய்தனர். ஆனால் பிரசாதம் வழங்கப்படவில்லை. நேற்று ராகு-கேது பெயர்ச்சி என்பதால் கூட்டம் அலைமோதியது. இருப்பினும் மதியம் 12 மணிக்கு பிறகு நடை சாத்தப்பட்டது. அதன்பிறகு மாலையில் கோவில் திறக்கப்பட்டது. அப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள், திருவந்திபுரம் தேவநாதசாமி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் உள்பட பல்வேறு கோவில்களும் திறக்கப்பட்டு இருந்தது. ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவில் நடை நேற்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டு, மூலவர் பூவராகபெருமாளுக்கு திருமஞ்சனம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு சோப்புத்திரவம் வழங்கப்பட்டது. இதை வைத்து பக்தர்கள் கை கழுவினர். தொடர்ந்து அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பிறகே அவர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் 15-க்கும் மேற்பட்டோர் சுற்று பிரகாரங்களில் நின்று கொண்டு, பக்தர்களிடம்அரசின் செயல்முறை விளக்கங் களை கடைபிடிக்குமாறு அறிவுரை வழங்கினர்.
ஆனால் பக்தர்கள் அர்ச்சனை செய்வதற்கு அனுமதியில்லை. கோவிலுக்குள் அமரவும், தரையில் விழுந்து வணங்குவதற்கும் அனுமதி இல்லை. சமூக இடைவெளியுடன் ஒருவர் பின் ஒருவராக கருவறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பிரசாதம் அர்ச்சகரால் பக்தர்களுக்கு நேரடியாக வழங்கப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நரசிங்கப்பெருமாள் மற்றும் நம்மாழ்வார் கைங்கர்யசபா பக்தர்கள், தன்னார்வலர்கள் செய்திருந்தனர். மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 229 பெரிய கோவில்களும் நேற்று திறக்கப்பட்டன.
இவை அனைத்திலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. முன்னதாக நவக்கிரகம் உள்ள கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தில் முறைகேடு செய்தது தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் மேலும் 10 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர்:
விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தில் முறைகேடு செய்தது தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் மேலும் 10 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விவசாயிகள் அல்லாதவர்களிடம் இருந்து ரூ.4¼ கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு, விவசாயிகளுக்கான பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டத்தை(3 தவணைகளில் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம்) கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வரை சுமார் 1 லட்சத்து 79 ஆயிரம் விவசாயிகள் சேர்ந்து பயன்பெற்று வந்தனர்.
இதற்கிடையில் விடுபட்ட விவசாயிகளை இந்த திட்டத்தில் சேர்க்க இணைய தளத்தில் மத்திய அரசு சில எளிய மாற்றங்களை செய்தது. இதை பயன்படுத்தி கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 31-ந்தேதி வரை மாவட்டத்தில் 80 ஆயிரத்து 752 பேர் கிசான் நிதிஉதவி திட்டத்தில் சேர்ந்தனர். இத்திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்களும் சேர்ந்து உதவித்தொகை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இது பற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, இது தொடர்பாக விரிவாக விசாரிக்க குறுவட்ட அளவில் கண்காணிப்பு குழுவை அமைத்தார். அந்த குழுவினர் 1.4.2020-க்கு பிறகு பதிவேற்றம் செய்த 80 ஆயிரத்து 752 பேர் விவசாயிகளா? என்று கள ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் 37 ஆயிரம் பேர் விவசாயிகள் அல்லாதவர்கள் என்று தெரிந்தது. மேலும் அவர்களை விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் சேர்த்த அட்மா திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த தற்காலிக ஊழியர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் போலி ஆவணம் கொடுத்து விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் சேர்ந்த 37 ஆயிரம் பேருடைய வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டன. தொடர்ந்து விவசாயிகள் அல்லாதவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தை திரும்பப்பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக தனியாக குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் மாவட்டத்தில் விவசாயிகள் வங்கிக்கணக்கு வைத்துள்ள 226 வங்கிகளின் கிளைதோறும் ஒவ்வொருவராக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், 226 வங்கி கிளைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகள் அல்லாதவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து இதுவரை ரூ.4 கோடியே 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் அடங்குவர். அதில் சிலர் ஒரு தவணையும், சிலர் 2 தவணையும் பெற்றுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. வங்கிக்கணக்கில் பணம் பெற்றவர்கள், வேறு வங்கி கணக்கு வைத்திருந்தால் அதில் இருந்து பணத்தை பறிமுதல் செய்யவும் வருவாய்த்துறை, போலீசார் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வேறு வங்கி கணக்கு இல்லாதவர்களிடம் நேரிடையாக சென்றும் பணத்தை வசூலிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கிடையில் இந்த திட்டத்தில் பணி திறமை இல்லாத மேலும் 10 ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இடிதாக்கியதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே சோழத்தரம் போலீஸ் சரகம் அறந்தாங்கி கிராமத்தை சேர்ந்தவர் மரியபிரகாசம். இவரது வயலில் நேற்று மதியம் கம்பு அறுவடை நடந்தது.
இந்த பணியில் சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த சாம்பசிவம் மனைவி ஆனந்தி (வயது 35), அறந்தாங்கியை சேர்ந்த லூர்துசாமி மனைவி மரியநட்சத்திரம் (60) ஆகியோர் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென பலத்த மழை பெய்தது. சிறிது நேரத்தில் இடி-மின்னலும் ஏற்பட்டது. இதில் இடிதாக்கி ஆனந்தி, மரியநட்சத்திரம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து சோழத்தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே சோழத்தரம் போலீஸ் சரகம் அறந்தாங்கி கிராமத்தை சேர்ந்தவர் மரியபிரகாசம். இவரது வயலில் நேற்று மதியம் கம்பு அறுவடை நடந்தது.
இந்த பணியில் சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த சாம்பசிவம் மனைவி ஆனந்தி (வயது 35), அறந்தாங்கியை சேர்ந்த லூர்துசாமி மனைவி மரியநட்சத்திரம் (60) ஆகியோர் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென பலத்த மழை பெய்தது. சிறிது நேரத்தில் இடி-மின்னலும் ஏற்பட்டது. இதில் இடிதாக்கி ஆனந்தி, மரியநட்சத்திரம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து சோழத்தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர் சித்தமல்லி கிராமத்தில் அறுவடைப் பணியின் போது இடி தாக்கி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர்:
கடலூர் சித்தமல்லி கிராமத்தில் விளை நிலத்தில் அறுவடைப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்கள் மீது இடி தாக்கியது. இதில் ஆனந்தி, மரியநட்சத்திரம் ஆகிய 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து கேள்விபட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
ஆனந்தி, மரியநட்சத்திரம் ஆகிய 2 பெண்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் பாடலீஸ்வரர்கோவில் உள்பட மாவட்டத்தில் 700 கோவில்கள் இன்று திறக்கப்பட உள்ளன. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கிராமப்புற, நகர்ப்புற கோவில்களில் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் உள்ள கோவில்கள் திறக்கப்பட்டன. இருப்பினும் அதிக வருமானம் உள்ள கோவில்கள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ள புதிய அறிவிப்பில், தமிழகம் முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்கவும், பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் சுமார் 700 கோவில்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர். கடலூர் பாடலீஸ்வரர்கோவில், திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள்கோவில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர்கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் கிருமி நாசினி தெளிப்பு, சமூக இடைவெளியை கடைபிடிக்க கோவிலுக்குள் வட்டம் போடுதல், சானிடைசர் வைத்தல் போன்ற பணிகளில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது பற்றி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரனிடம் கேட்டபோது, ஏற்கனவே அரசு வழிகாட்டுதல் படி கோவில்கள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக நாளைக்கு (அதாவது இன்று) சுமார் 700 கோவில்கள் திறக்கப்படுகின்றன. இதற்கான ஆயத்த பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். கோவில்கள் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். ஆகவே பக்தர்கள் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முக கவசம் அணிந்து தான் வர வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் சுமார் 700 கோவில்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர். கடலூர் பாடலீஸ்வரர்கோவில், திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள்கோவில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர்கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் கிருமி நாசினி தெளிப்பு, சமூக இடைவெளியை கடைபிடிக்க கோவிலுக்குள் வட்டம் போடுதல், சானிடைசர் வைத்தல் போன்ற பணிகளில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது பற்றி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரனிடம் கேட்டபோது, ஏற்கனவே அரசு வழிகாட்டுதல் படி கோவில்கள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக நாளைக்கு (அதாவது இன்று) சுமார் 700 கோவில்கள் திறக்கப்படுகின்றன. இதற்கான ஆயத்த பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். கோவில்கள் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். ஆகவே பக்தர்கள் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முக கவசம் அணிந்து தான் வர வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.
அண்ணாமலைநகர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் 144 படுக்கைகளுடன் மேலும் ஒரு கொரோனா சிறப்பு வார்டு அமைக்கும் பணியை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன் நேரில் ஆய்வு செய்தார்.
அண்ணாமலைநகர்:
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்கள், அறிகுறி உள்ளவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கல்லூரி முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் கொரோனா தொற்று சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். இதனால் அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள கோல்டன் ஜூப்ளி விடுதி மற்றும் டைமண்ட் ஜூப்ளி விடுதி ஆகியவற்றில் 200-க்கும் மேற்பட்டடோர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள திருவாங்கூர் விடுதியையும் 144 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன் நேற்று காலை அண்ணாமலைநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ள கோல்டன் ஜூப்ளி மற்றும் டைமண்ட் ஜூப்ளி விடுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் புதிதாக கொரோனா வார்டாக அமைய உள்ள திருவாங்கூர் விடுதியையும் அவர் பார்வையிட்டார்.
முன்னதாக கோல்டன் ஜூப்ளி விடுதியில் நேற்று காலை நோயாளிகளுக்கு சூப் வழங்கப்பட்டது. அப்போது அங்கிருந்த நோயாளிகளிடம் வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன் குறைகளை கேட்டறிந்தார். அப்போது சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ், டாக்டர் வினோத், வருவாய் ஆய்வாளர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர் ராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்கள், அறிகுறி உள்ளவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கல்லூரி முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் கொரோனா தொற்று சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். இதனால் அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள கோல்டன் ஜூப்ளி விடுதி மற்றும் டைமண்ட் ஜூப்ளி விடுதி ஆகியவற்றில் 200-க்கும் மேற்பட்டடோர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள திருவாங்கூர் விடுதியையும் 144 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன் நேற்று காலை அண்ணாமலைநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ள கோல்டன் ஜூப்ளி மற்றும் டைமண்ட் ஜூப்ளி விடுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் புதிதாக கொரோனா வார்டாக அமைய உள்ள திருவாங்கூர் விடுதியையும் அவர் பார்வையிட்டார்.
முன்னதாக கோல்டன் ஜூப்ளி விடுதியில் நேற்று காலை நோயாளிகளுக்கு சூப் வழங்கப்பட்டது. அப்போது அங்கிருந்த நோயாளிகளிடம் வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன் குறைகளை கேட்டறிந்தார். அப்போது சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ், டாக்டர் வினோத், வருவாய் ஆய்வாளர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர் ராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.
கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தது. மேலும் போலீசாருடன், பா.ம.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு வான்ராஜன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரும், பண்ருட்டி அருகே சிலம்பிநாதன்பேட்டையை சேர்ந்த 30 வயது வாலிபரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். இதுபற்றி அறிந்த பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த இளம்பெண்ணுக்கு, மாப்பிள்ளை பார்த்து வந்ததாகவும் தெரிகிறது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பேராசிரியையும், அந்த வாலிபரும் வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் பெண்ணின் பெற்றோர், அந்த வாலிபரை தொடர்பு கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் காதல் ஜோடி நேற்று முன்தினம் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்து பாதுகாப்பு கேட்டு மனு ஒன்றை அளித்தனர். அதன் பேரில் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்திக்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, நேற்று மாலை காதல் ஜோடியின் பெற்றோர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பெண்ணின் பெற்றோர், காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பெண்ணிடம் தங்களுடன் வந்து விடுமாறு கூறி அழுது கெஞ்சினர். ஆனால் அந்த பெண், தான் காதல் கணவருடன் செல்வதாக உறுதியாக கூறினார். இதையடுத்து போலீசார், காதல் ஜோடிக்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது என்று இருவீட்டாரிடமும் தெரிவித்தனர்.
அப்போது அங்கு வந்த பா.ம.க.வினர், பெண்ணின் பெற்றோர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த காவல் நிலையம், பண்ருட்டி உட்கோட்டத்திற்குள் வருகிறது. அதனால் இந்த புகாரை பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தான், விசாரிக்க வேண்டும் என்று கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் பா.ம.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். பின்னர் அந்த பெண், தனது காதல் கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் போலி காசோலை கொடுத்து மூதாட்டியிடம் பணத்தை பறித்து சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வயலூரை சேர்ந்தவர் நீலாம்மாள் (வயது 70). இவர் முதியவர் உதவிதொகை பெறுவதற்கான இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் மாதம் 4 கிலோ அரிசி வாங்கி வருகிறார்.
நேற்று மாலை இவர் வீட்டில் இருந்தபோது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது நீலாம்மாளிடம் உங்களுக்கு ரூ.12 ஆயிரம், 10 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை நேற்று முன்தினமே வந்துவிட்டது. அதனை ரேசன் கடைக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம். இதற்கு முன்பணமாக ரூ.3 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதனை நம்பிய நீலாம்மாள் மருந்து வாங்க வைத்திருந்த ரூ.2,800 ஐ அந்த வாலிபரிடம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த வாலிபர் ஒரு காசோலையை நீலாம்மாளிடம் கொடுத்தார். இதனை வாங்கி பார்த்த அவர் அந்த காசோலையை வங்கியில் செலுத்த முயன்றபோது அது போலி என தெரியவந்தது. அப்போது தான் மர்மநபரிடம் ஏமாந்ததை நீலாம்மாள் உணர்ந்தார்.
இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வயலூரை சேர்ந்தவர் நீலாம்மாள் (வயது 70). இவர் முதியவர் உதவிதொகை பெறுவதற்கான இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் மாதம் 4 கிலோ அரிசி வாங்கி வருகிறார்.
நேற்று மாலை இவர் வீட்டில் இருந்தபோது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது நீலாம்மாளிடம் உங்களுக்கு ரூ.12 ஆயிரம், 10 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை நேற்று முன்தினமே வந்துவிட்டது. அதனை ரேசன் கடைக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம். இதற்கு முன்பணமாக ரூ.3 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதனை நம்பிய நீலாம்மாள் மருந்து வாங்க வைத்திருந்த ரூ.2,800 ஐ அந்த வாலிபரிடம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த வாலிபர் ஒரு காசோலையை நீலாம்மாளிடம் கொடுத்தார். இதனை வாங்கி பார்த்த அவர் அந்த காசோலையை வங்கியில் செலுத்த முயன்றபோது அது போலி என தெரியவந்தது. அப்போது தான் மர்மநபரிடம் ஏமாந்ததை நீலாம்மாள் உணர்ந்தார்.
இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் அருகே சாலை மறியல் செய்த கொரோனா நோயாளிகளை கண்டு பொது மக்கள் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரானோ தொற்று நோய் பாதிப்பு அதிகரித்து தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் அருகே குமராபுரம் தனியார் கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு தனியார் கல்லூரியில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென்று சிகிச்சை மையத்தில் இருந்து கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சரியான முறையில் சாப்பாடு வசதிகள் ஏற்படுத்தவில்லை. நேரத்திற்கு சாப்பாடு வருவதில்லை, டாக்டர்கள் சிகிச்சை அளிக்க சரியான முறையில் வரவில்லை என கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்று கொண்டிருந்தவர்களை கொரானோவால் பாதிக்கப்பட்ட நபர்கள் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். அப்போது அவர்கள் யார்? என்று தெரியாமல் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நின்று கொண்டிருந்தனர்.
அதன் பிறகு கொரானோ சிகிச்சை சரியான முறையில் அளிக்கவில்லை என கூறியதை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவசர அவசரமாக அவர்களை கடக்காமல் பதட்டத்துடன் உடனடியாக சென்றனர். மேலும் அங்கு நின்றிருந்த ஒரு சில பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட கொரானோவால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிறிது நேரத்தில் தங்கள் கோரிக்கைகளை பொதுமக்களிடம் தெரிவித்துக்கொண்டு சிகிச்சை மையத்திற்கு சென்றனர்.
தகவல் அறிந்த கடலூர் தாசில்தார் செல்வகுமார் தலைமையில் நெல்லிக்குப்பம் போலீசார் மற்றும் மருத்துவ அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது தங்களுக்கு சாப்பாடு நேரத்திற்கு தரமாக வழங்க வேண்டும். டாக்டர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்.
மேலும் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் உயர் அதிகாரியிடம் தெரிவித்து உங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரானோ தொற்று நோய் பாதிப்பு அதிகரித்து தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் அருகே குமராபுரம் தனியார் கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு தனியார் கல்லூரியில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென்று சிகிச்சை மையத்தில் இருந்து கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சரியான முறையில் சாப்பாடு வசதிகள் ஏற்படுத்தவில்லை. நேரத்திற்கு சாப்பாடு வருவதில்லை, டாக்டர்கள் சிகிச்சை அளிக்க சரியான முறையில் வரவில்லை என கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்று கொண்டிருந்தவர்களை கொரானோவால் பாதிக்கப்பட்ட நபர்கள் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். அப்போது அவர்கள் யார்? என்று தெரியாமல் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நின்று கொண்டிருந்தனர்.
அதன் பிறகு கொரானோ சிகிச்சை சரியான முறையில் அளிக்கவில்லை என கூறியதை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவசர அவசரமாக அவர்களை கடக்காமல் பதட்டத்துடன் உடனடியாக சென்றனர். மேலும் அங்கு நின்றிருந்த ஒரு சில பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட கொரானோவால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிறிது நேரத்தில் தங்கள் கோரிக்கைகளை பொதுமக்களிடம் தெரிவித்துக்கொண்டு சிகிச்சை மையத்திற்கு சென்றனர்.
தகவல் அறிந்த கடலூர் தாசில்தார் செல்வகுமார் தலைமையில் நெல்லிக்குப்பம் போலீசார் மற்றும் மருத்துவ அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது தங்களுக்கு சாப்பாடு நேரத்திற்கு தரமாக வழங்க வேண்டும். டாக்டர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்.
மேலும் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் உயர் அதிகாரியிடம் தெரிவித்து உங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.






