என் மலர்tooltip icon

    கடலூர்

    விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளராக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளராக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இவர் கடந்த 19-ந்தேதி தனது தம்பி சுதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அன்று மாலை சுதீசுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சுதீஷ் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தன்னை பரிசோதித்து கொண்டார்.

    அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுதீஷ் ஆஸ்பத்திரியில் தனிமைபடுத்தப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையில் வேட்பு மனு தாக்கல் செய்த போது இருந்த அதிகாரிகள், வேட்பாளர் பிரேமலதா ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என பரபரப்பாக பேசப்பட்டது.

    இதனை தொடர்ந்து வேட்புமனு தாக்கலின் போது பணியில் இருந்த தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    தற்போது வேட்பாளர் பிரேமலதா தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இன்று காலை விருத்தாசலம் ஷெராமிக் தொழிற்பேட்டையில் பிரேமலதா வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது சுகாதாரத்துறை ஆய்வாளர் ராஜா தலைமையிலான மருத்துவ குழுவினர் அங்கு வந்தனர்.

    வேட்பாளர் பிரேமலதாவிடம் கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என்று மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். இதற்கு அங்கிருந்த தே.மு.தி.க. நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அப்போது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை சமரசம் செய்தனர்.

    உடனே பிரேமலதா நான் தற்போது பிரசாரத்தில் உள்ளேன். மாலை இது பற்றி உங்களிடம் தெரிவிக்கிறேன் என்றார். அதன் பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் அவருடன் தொடர்பில் இருக்கும் நபர்களையும் கொரோனா பரிசோதனைக்கு அழைப்பது வழக்கம். அந்த எண்ணத்தில் பிரேமலதாவை கொரோனா பரிசோதனை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று அவர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.
    சுருக்குமடி வலைக்கு அரசு தடை விதித்துள்ளதால் எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்காவிட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்.

    கடலூர்:

    தமிழகத்தில் உள்ள மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை மீனவர்கள் பயன்படுத்தக்கூடாது. என கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர்சாகமூரி அறிவுறுத்தி வருகிறார்.

    சுருக்கு மடி வலை பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள மீனவர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் உட்பட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இதைத்தொடர்ந்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் தலைமையிலான அதிகாரிகள் தேவனாம்பட்டினம் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தக் கூடாது என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

    எனவே கடலூர் மாவட்டத்திலுள்ள மீனவர்கள் யாரும் சுருக்குமடி வலையை பயன்படுத்தக்கூடாது என்று அதிகாரிகள் கூறினர். இருப்பினும் சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் உள்ள மீனவர்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் மீனவர்களின் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. இதைத்தொடர்ந்து தேவனாம்பட்டினம் பகுதியில் உள்ள மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    மீனவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அந்த பகுதியில் ஒன்று திரண்டனர். மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தேவனாம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் சமாதான பேச்சுவார்த் தை நடத்தினர். அப்போது மீனவர்கள் கூறியதாவது:-

    சுருக்குமடி வலைக்கு அரசு தடை விதித்துள்ளதால் எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்காவிட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    மீனவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இது வரை அரசியல் கட்சியினர் யாரும் அந்த பகுதிக்கு சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சிதம்பரத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 25-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அண்ணாமலைநகர்:

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியாக மாற்றியதோடு, மாணவர்களிடம் அரசு கல்வி கட்டணம் வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.

    ஆனால் குறைக்கப்பட்ட அரசு கல்வி கட்டணம் அடுத்த கல்வி ஆண்டில் தான் நடைமுறைக்கு வரும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள், நடப்பு கல்வியாண்டு முதல் குறைக்கப்பட்ட அரசு கல்வி கட்டணத்தை பெற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களின் போராட்டம் நேற்று 25-வது நாளாக நீடித்தது. இதில் மாணவர்கள் மதிய உணவு இடைவேளையின் போது, மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நடப்பாண்டு முதல் குறைக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இதில் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    ராமநத்தம் அருகே பணம் வைத்து சூதாடியது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ராமநத்தம்:

    ராமநத்தம் அருகே கொரக்கவாடி அம்மாகுளம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர். இருப்பினும் அவர்களில் 3 பேரை மட்டும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திட்டக்குடியை சேர்ந்த பத்மநாபன் மகன் சூப்பர் சேந்தன் (வயது 25), உளுந்தூர்பேட்டை பஷீர் மகன் ஜமால் முகமது (38), கள்ளக்குறிச்சி மாவட்டம் ஜலகண்டபுரம் மாதேசன் மகன் முருகவேல் (48) என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் ராமநத்தம் போலீசில் ஒப்படைத்தனர்.

    மேலும் 6 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஸ்கூட்டர் மற்றும் ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகவேல் உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 12 பேரை தேடி வருகின்றனர்.
    கொரோனா பாதித்த 85 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 21 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 358 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், மேலும் 30 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் சென்னையில் இருந்து சிதம்பரம் வந்த ஒருவர், சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 9 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில இருந்த 20 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

    கடந்த சில மாதங்களாக பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருந்தது. தற்போது இரட்டை இலக்கு எண்ணிக்கையில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதன்படி நேற்று முன்தினம் 16 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 30 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 987 பேர் குணமடைந்து சென்ற நிலையில், நேற்று 6 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். கொரோனா பாதித்த 85 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 21 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 31 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
    புவனகிரி தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கே.எஸ்.கே. பாலமுருகன் தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    சேத்தியாத்தோப்பு:

    புவனகிரி தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கே.எஸ்.கே. பாலமுருகன் தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவர், நேற்று புவனகிரி தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டான், மருதூர், எல்லைகுடி, குமுடிமுளை, சொக்கன் கொல்லை, சாத்தப்பாடி, மேலமணக்குடி, பூவராகன் பேட்டை, வடக்கு திட்டை, தெற்கு திட்டை, ஆலம்பாடி, கிருஷ்ணாபுரம், நத்தமேடு, சித்தேரி, கொளக்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று குக்கர் சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், இளைஞர்கள் பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் அறிவழகன், ஜெயலலிதா பேரவை செயலாளர் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் ராமதாஸ், மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜா, புவனகிரி நகர செயலாளர் பிலால் .ரா.பே. காசி, சிறுபான்மை பிரிவு செயலாளர் சையத் பிலால், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் கே.ஆர். வினோத், தொகுதி பொறுப்பாளர் பானு சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கொரோனா பாதித்த 57 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 25 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 342 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், மேலும் 16 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள சிதம்பரத்தை சேர்ந்த நோயாளி, சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 5 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 10 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

    நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 979 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், நேற்று 8 பேர் குண மடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா பாதித்த 57 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 25 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 52 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
    கடலூரில், தி.மு.க. வேட்பாளர் கோ.அய்யப்பன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    கடலூர்:

    மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோ.அய்யப்பன் தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கூட்டணி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய அவர், தற்போது பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

    அவர் நேற்று கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி ரோடு, பெண்ணையாறு ரோடு, வேணுகோபாலபும், குண்டுஉப்பலவாடி மெயின்ரோடு உள்பட பல்வேறு பகுதியில் திறந்த ஜீப்பில் சென்றும், நடந்து சென்றும் பொதுமக்களிடம் தனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். நகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு முதல் 14-வது வார்டு வண்ணாரப்பாளையம் பகுதி வரை தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, சிலிண்டருக்கு மானியம், குடும்பத்தலைவிக்கு ரூ.1000, நகைக்கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து, பூட்டி கிடக்கும் கடலூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை திறந்து, தினந்தோறும் பொதுமக்களின் குறைகள் கேட்கப்படும் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை தெரிவித்து வாக்கு சேகரித்தார். முன்னதாக அவர் மறைந்த இளம்வழுதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பிரசாரத்தில் தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, நகர செயலாளர் ராஜா, மாவட்ட அவை தலைவர் தங்கராசு, முன்னாள் நகரசபை தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி வக்கீல் சந்திரசேகரன், மாவட்ட துணை தலைவர் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், நாகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் அமர்நாத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் முகமது இஸ்மாயில், நகர செயலாளர் ராஜா முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் செந்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த், த.மு.க. சம்சுதீன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று கடலூர் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.சி.சம்பத் தீவிர பிரசாரம் செய்தார்.
    கடலூர்:

    கடலூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக அமைச்சர் எம்.சி.சம்பத் மீண்டும் போட்டியிடு கிறார். அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். பா.ம.க., , பாரதீய ஜனதா கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.

    அதன்படி நேற்று அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் பாதிரிக்குப்பம் அரசமர விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து பாதிரிக்குப்பம் மாடவீதி, சாம்பசிவம் நகர், சண்முகாநகர், குலசேகரம்மாள்நகர், தங்கராசு நகர், சுந்தரிநகர், ருக்மணிநகர், இந்திராநகர், பாதிரிக்குப்பம் காலனி, குறிஞ்சிநகர், நத்தவெளிரோடு, ஜெயராம்பிள்ளைநகர், கூத்தப்பாக்கம் முருகன்கோவில் தெரு, ராமநாதன்நகர், பெரியார்நகர், பாரதியார்நகர் என பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம் பகுதியில் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.

    தனக்கு இரட்டை சிலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். முன்னதாக அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மேள தாளங்கள் முழங்கவும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் அ.தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் வழங்குவோம்.கல்விக்கடன் ரத்து, முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே கொண்டு வரப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்தார்.

    அவருடன் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் காசிநாதன், மாவட்ட பேரவை பொருளாளர் ஆர்.வி.ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர்கள் மகேஸ்வரி விஜயராயலு, கிரிஜா செந்தில்குமார், வேல்முருகன், பா.ம.க. மாவட்ட செயலாளர் கோபிநாத், பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் மணிகண்டன், பாஸ்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

    விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    திட்டக்குடி:

    திட்டக்குடி அருகே உள்ள இளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் கருணாநிதி (வயது 32). இவர் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் விருத்தாசலத்துக்கு புறப்பட்டாா்.

    விருத்தாசலம் அடுத்த ஆவினங்குடி கண்மணி நகர் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கருணாநிதி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கருணாநிதியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கருணாநிதி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகன ஓட்டியை தேடி வருகிறார்கள்.
    தே.மு.தி.க. துணை செயலாளர் சுதீசுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
    கடலூர்:

    விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை கடந்த 18-ந்தேதி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார். அவருடன் மாநில துணை செயலாளர் சுதீஷ், அ.ம.மு.க. பிரமுகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அதன்பிறகு நடந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலும் சுதீஷ் பங்கேற்றார். இதையடுத்து சென்னை சென்ற சுதீசுக்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

    இது பற்றி மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியிடம் கேட்டபோது, சுதீசுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டவுடன், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்து, அவர்களுக்கும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கும் சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ய உள்ளனர்.

    இது பற்றி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, சுதீசுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால், விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய நபர்கள், அவருடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து உள்ளோம். எத்தனை பேர் என்ற விவரம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்வோம் என்றார்.
    சிதம்பரத்தில் தங்கும் விடுதியில் ஜவுளி வியாபாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    உத்தர பிரதேச மாநிலம் அஸ்லாம் நகரை சேர்ந்தவர் முகமதுதசின்கான் (வயது 55). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி, ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலை முகமதுதசின்கான் தங்கும் விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

    இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, முகமதுதசின்கான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, முகமதுதசின்கான் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×