search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sit-in"

    • சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குடும்பத்தினர் அனைவரும் முறையாக தீர்வை செலுத்தி குடியிருந்து வருகின்றனர்.
    • போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுக்கான ஏற்பாடுகள் அப்பகுதியில் செய்யப்பட்டு சமையல் செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்குட்பட்ட பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள புனை வெங்கப்பன் குளத்தின் நீர் புறம்போக்கு பகுதியில் அருந்ததியினர் மற்றும் பிற சமுதாயத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றனர்.

    இதனை ஒட்டிய பகுதியான மாநகராட்சி 18-வது வார்டுக்கு உட்பட்ட பேட்டை தங்கம்மன் கோவில் தெருவிலும் அருந்ததியினர் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

    சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குடும்பத்தினர் அனைவரும் முறையாக தீர்வை செலுத்தி குடியிருந்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கக்கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டியும் பலமுறை அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்திருந்தனர். ஆனால் அந்த மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் நெல்லையின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டி கள் ஒட்டினர்.

    ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று அவர்கள் குடியிருக்கும் பகுதி தெருக்களில் முழுவதும் கருப்புக்கொடி கட்டினர். அனைத்து வீடுகளின் வாசல் முன்பு கருப்புக்கொடி கட்டப்பட்டது.

    அப்பகுதி குடியிருப்புவாசிகள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் இளமாறன் தலைமையில் அங்குள்ள தங்கம்மன் கோவில் அருகே பந்தல் அமைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளும் அரசு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட் டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபடுப வர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுக்கான ஏற்பாடுகள் அப்பகுதியில் செய்யப்பட்டு சமையல் செய்து வருகின்றனர்.

    தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் போராட்டக்காரர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

    • திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 150 விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் வெள்ளகோவில் கடைமடைக்கு பி.ஏ.பி வாய்க்கால் தண்ணீர் முழுமையாக வந்தடைவதில்லை என பலமுறை போராட்டம் நடத்திய நிலையில் போராட்டங்களின் போது மாவட்ட நிர்வாகம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியிருப்பதாக கூறியதுடன், தங்கள் கோரிக்கைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 150 விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • சமயநல்லூர் மின் கோட்ட அலுவலகத்தில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
    • 10 கிளை அலுவலகங்களில் வசூல் மற்றும் களப்பணி மற்றும் அவசரப்பணிகள் செய்வதில்லை.

    வாடிப்பட்டி

    சமயநல்லூர் மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் அலங்காநல்லூர் மின்பாதை ஆய்வாளர் ராமநாதன், கேங்மேன் சுரேஷ் ஆகியோரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. மாநில பொறுப்பாளர் அறிவழகன் தலைமையில் தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிலாளர் முன்னேற்ற சங்கம், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம், தொழிலாளர் சம்மேளன சங்கம், அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்புச் சங்கம், அட்டைப்பெட்டி பிரிவு அலுவலர்கள் சங்கம் அ.தி.மு.க. தொழிற்சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இதன் காரணமாக அலங்காநல்லூர் துணை மின் நிலையத்திற்கு மதியம் 1 மணிக்கு செல்ல வேண்டிய அலுவலர்கள் செல்ல மாட்டார்கள் என்றும், மாலை 5 மணிக்கு அலங்காநல்லூர் துணை மின் நிலையம் பூட்டப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். சமயநல்லூர் கோட்ட அலுவலகத்திற்கு உட்பட்ட வாடிப்பட்டி, சோழவந்தான், அய்யங்கோட்டை, அலங்காநல்லூர் உள்ளிட்ட 10 கிளை அலுவலகங்களில் வசூல் மற்றும் களப்பணி மற்றும் அவசரப் பணிகள் செய்வதில்லை என்றும் தெரிவித்தனர்.

    • 3 வார்டுகளிலும் அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் மறுப்பதாக கூறப்படுகிறது
    • அ.தி.மு.க. கவுன்சிலர்களான 3 பேரும் பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

     அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் 11 வார்டுகளில் தி.மு.க.வும் ஒரு வார்டில் சுயேச்சையும், 3 வார்டுகளில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றது. இதில் 10-வது வார்டில் தேன்மொழி, 14-வது வார்டில் அறிவழகன் 15-வது வார்டில் மருதமுத்து ஆகிய 3 பேரும் அ.தி.மு.க. கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார்கள்.

    இந்த 3 வார்டுகளிலும் அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் மறுப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்று காலை பேரூராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்களான 3 பேரும் பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

    ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து புதுவை காந்தி சிலை முன்பு வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். #RajivGandhiAssassination
    புதுச்சேரி:

    ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுவிக்கக்கூடாது எனக்கூறி புதுவை கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே இன்று வாலிபர் ஒருவர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதுபற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். பெரியக்கடை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததற்கு பிறகு அவரை விடுவித்தனர்.

    அந்த வாலிபர் புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார் (வயது 33) என்று தெரியவந்தது.



    ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட போது காஞ்சிபுரத்தை சேர்ந்த தர்மன் என்ற போலீஸ்காரர் உயிரிழந்தார். அவருடைய மகன்தான் ராஜ்குமார் என்றும் தெரிந்தது.

    போராட்டம் தொடர்பாக ராஜ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர்கள். எனது தந்தை தர்மன் காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். ராஜீவ்காந்தி பாதுகாப்பு பணிக்காக ஸ்ரீபெரும்புதூர் சென்றிருந்தார்.

    அப்போது அங்கு நடந்த குண்டுவெடிப்பில் அவர் உயிரிழந்துவிட்டார். எனது தாயார் பெயர் வேதவல்லி. எங்கள் பெற்றோருக்கு மலர்விழி, ராஜசேகர் மற்றும் நான் ஆகிய 3 குழந்தைகள்.

    எனது தந்தை இறக்கும்போது எனது தாயாருக்கு 32 வயது. எனது அக்காள் மலர்விழிக்கு 12 வயது, அண்ணன் ராஜசேகருக்கு 11 வயது. நான் 8 வயது சிறுவனாக இருந்தேன்.

    தந்தை திடீரென இறந்து விட்டதால் நாங்கள் சொல்ல முடியாத துயரங்களை சந்தித்தோம். மிகவும் கஷ்டப்பட்டோம். எங்கள் தாயாருக்கு படிப்பறிவு கிடையாது.

    கருணை அடிப்படையில் வேலை பெற வேண்டும் என்பது கூட தெரியாது. தந்தை இறந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு எனது தாயாருக்கு வேலை கொடுத்தார்கள். அதை வைத்து கஷ்டப்பட்டு வளர்ந்தோம்.

    தந்தை இல்லாத காரணத்தால் எங்களை சரியாக படிக்க வைக்கவில்லை. எனது அண்ணன் டிரைவராக இருக்கிறார். எனக்கும் சரியான வேலை இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை வந்த நான் இங்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன்.

    அன்று எனது தந்தை இறந்த காரணத்தால் இன்று வரை எங்கள் குடும்பம் கடும் கஷ்டத்தில் உள்ளது. இதேபோல 13 குடும்பங்கள் அன்றைய குண்டுவெடிப்பில் குடும்ப தலைவரை இழந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றனர்.

    எனவே இதற்கு காரணமான கொலையாளிகளை விடுவிக்கக்கூடாது. அவர்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. முதலில் மரண தண்டனை வழங்கினார்கள். இப்போது ஆயுள் தண்டனை வழங்கி இருக்கிறார்கள்.

    அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கக்கூடாது. அப்படியானால் அப்பாவியான எங்கள் தந்தை போன்றவர்கள் உயிரிழந்ததற்கு யார் பொறுப்பு ஏற்பது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #RajivGandhiAssassination


    ×