search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
    X

    கோப்புபடம். 

    குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

    • திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 150 விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் வெள்ளகோவில் கடைமடைக்கு பி.ஏ.பி வாய்க்கால் தண்ணீர் முழுமையாக வந்தடைவதில்லை என பலமுறை போராட்டம் நடத்திய நிலையில் போராட்டங்களின் போது மாவட்ட நிர்வாகம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியிருப்பதாக கூறியதுடன், தங்கள் கோரிக்கைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 150 விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×