என் மலர்tooltip icon

    கடலூர்

    புதுப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்தபுதுப்பேட்டை நண்பர்கள் நகரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 61). இவர் நேற்று மாலை 108 எண்ணுக்கு தொடர்பு கொண்டு புதுப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். இதுபற்றி புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர் அப்போது போலீஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிவப்பிரகாசத்தை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    அனைத்து பணிகளையும் நகராட்சி நிர்வாகத்தை புறக்கணித்து இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கழிவுநீர் வாய்கால்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வார்டு கவுன்சிலர் ராஜவேல் நகராட்சி அலுவலகத்தில் பல முறை நேரில் புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து சாக்கடை நீர் சாலையில் வழிய தொடங்கியது. 

    கவுன்சிலர் ராஜவேல் கூறுகையில் எங்கள் வார்டுகளை நகராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருகிறது. எனவே இன்று முதல் எங்கள் பகுதியில் உள்ள அனைத்து பணிகளையும் நகராட்சி நிர்வாகத்தை புறக்கணித்து இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கழிவுநீர் வாய்கால்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு உள்ளோம் என கூறினார்.

    கடலூர் மாவட்டம் வடலூர் நகர அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, ஜூஸ், வெள்ளிரிக்காய், மோர் வழங்கப்பட்டது.
    வடலூர்:

    வடலூர் நகர அ.தி.மு.க. சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, ஜூஸ், வெள்ளிரிக்காய், மோர் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வடலூர் நகர செயலாளர் சி.எஸ்.பாபு வரவேற்றார். அண்ணா தொழிற் சங்க இணை செயலாளர் சூரியமுர்த்தி, மாவட்ட வக்கில் பிரிவு ராஜசேகர், மாவட்ட பொருளாளர் தேவநாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் சுப்பிரமணியன், நெய்வேலி நகர செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர் பஷ்யம், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் கிருஷ்ணன், வடலூர் நகர நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி பாலு, ராஜாராமன், நடராஜ், வேல்முருகன், ராமமுர்த்தி, பக்தவச்சலம்,சேகர்,கண்ணன், செந்தமரைகண்ணன், மோகன், மல்லிகா, அம்மு மணிகண்டன், லோகு, அந்தோணி, முத்துலிங்கம் வேல்முருகன், வார்டு செயலாளர்கள் ஆனந்த், மாயவேல், செல்வராசு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வார்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    2022 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, எதிர் வரும் 15.08.2022 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.
    கடலூர்:

    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, ரூ.1லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.

    அதன்படி, 2022 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, எதிர் வரும் 15.08.2022 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக கீழ்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.15 வயது 35 வயது வரை உள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1 ந்தேதி 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் மார்ச் 31, 2022 அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும். கடந்த நிதி ஆண்டில் ( 202122 ) அதாவது 01.04.2021 முதல் 31.03.2022 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். ( சான்று இணைக்கப்பட வேண்டும்)

    விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகள்/ பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு, விருதிற்கான பரிசீலனையில் கணக்கிற் கொள்ளப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 10.05.2022 அன்று மாலை 4.00 மணி ஆகும்.

    விருப்பமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்பித்தல் வேண்டும். மேலும் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
    வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டப்பிரிவில், அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கணக்குப் புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து, வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தின்கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

    10-ம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து, மார்ச்சு 31ஆம் தேதி ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது.மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.

    பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், பி.எஸ்.சி நர்சிங் போன்ற தொழிற்பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.

    இத்திட்டத்தின் கீழ் பயன் பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித் தொகையினைப் பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31.03.2022 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். உதவித்தொகை விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, கடலூர், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவச மாக பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனு தாரர்கள் மே 31-ந் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில், வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டப்பிரிவில், அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கணக்குப் புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் இன்று அவசர கூட்டம் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்றது. அப்போது பா.ம.க கவுன்சிலர் சரவணன் என்பவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் மாநகராட்சிக்கு கூட்டத்திற்கு வந்தார்.

    இதனைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த கண்ணன், அருள் பாபு ஆகியோர் இதே கோரிக்கையை கண்டித்து சைக்கிளில் மாநகராட்சி கூட்டத்தில் வந்தனர். பின்னர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று அதிமுக கவுன்சிலர்கள் சங்கீதா வசந்தராஜ், ஏ.ஜி.எம். வினோத்குமார், தஷ்ணா உள்ளிட்ட 5 கவுன்சிலர்கள் திடீரென்று சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து திடீரென்று வெளிநடப்பு செய்தனர்.

    பின்னர் அதிமுக கவுன்சிலர் சங்கீதா வசந்த ராஜ் கூறுகையில்,கடலூர் மாநகராட்சி சொத்து வரி உயர்வை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம் .மேலும் திமுக தேர்தல் அறிக்கையிலும் சட்டமன்றக்கூட்டத் தொடரிலும் சொத்துவரி ஏற்றபடாது என வாக்குறுதி அளித்தனர்.

    ஆனால் தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைவார்கள் ஆகையால் சொத்து வரியை உடனடியாக குறைக்க வேண்டும் என கூறி அங்கிருந்து சென்றனர்.இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
    நகராட்சி அதிகாரிகள் அனைத்து வார்டுகளிலும் ஆய்வு செய்து மின் மோட்டாரை பறிமுதல் செய்வதோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திட்டக்குடி:

    திட்டக்குடி நகராட்சியில் தற்பொழுது வெயில் காலம் என்பதால் பல்வேறு வார்டுகளில் தண்ணீர் பற்றாக்குறையால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் அனைத்து பகுதியிலும் சட்டவிரோதமாக மின் மோட்டார் வைத்து குடிநீர் எடுத்து வருகின்றனர்.

    திட்டக்குடி நகராட்சி மூலமாக நீர்த்தேக்க தொட்டியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அனைத்து தரப்பு மக்களிடமும் சேருவதில்லை. வீடுகளில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவது தான் காரணம்.

    காலை, மாலையில் திறந்து தண்ணீர் விடும்போது அதேசமயம் மின்சாரத்தை நிறுத்தி வைத்தால் தண்ணீர் முறையாக அனைத்து வீடுகளின் சென்றடையும். அந்த அளவிற்கு மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் சி.வெ.கணேசனிடம் குறைகளை எடுத்து கூறப்பட்டு உள்ளது.

    ஆனால் அமைச்சர் தெரிவிப்பதை எடுத்து செய்ய தற்போது திட்டக்குடி நகராட்சியில் கமி‌ஷனர் தவிர நகராட்சி நிர்வாகத்திற்கு புதிய ஊழியர்கள் இன்னும் நியமனம் செய்யப்படாததால் வேலைகள் அனைத்தும் செயல்படுத்த முடியாது நிலையில் உள்ளது.

    எனவே நகராட்சி அதிகாரிகள் அனைத்து வார்டுகளிலும் ஆய்வு செய்து மின் மோட்டாரை பறிமுதல் செய்வதோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் குடிநீர் முறையாக வழங்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுகொண்டனர்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எலி மருந்தை சாப்பிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே ஆண்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. செங்கல் சூளை நடத்திவருகிறார். இவரது மகள் தமிழ்செல்வி (வயது 23). கல்லூரி படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துவந்தார்.

    சம்பவத்தன்று எலி மருந்தை சாப்பிட்டு தமிழ்செல்வி மயங்கி கிடந்தார். அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு தமிழ்செல்வி உயிரிழந்தார்.

    இது குறித்து வேலு தந்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் புஸ்பராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    பொறியியல் புல மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படாத முதல் பட்டதாரி ஊக்கத்தொகையை வழங்க கோரியும், கல்விக்கட்டணத்தை குறைக்க கோரியும் வகுப்புகளை புறக்கணித்தனர்.
    அண்ணாமலை நகர்:

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படாத முதல் பட்டதாரி ஊக்கத்தொகையை வழங்க கோரியும், கல்விக்கட்டணத்தை குறைக்க கோரியும் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதனால் பல்கலைகழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் மற்றும் அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.தகவலறிந்த பொறியியல் புல முதல்வர் பேராசிரியர் முருகப்பன், பல்கலைக்கழக மாணவர் உதவி மற்றும் முன்னேற்ற மைய இயக்குனர் பேராசிரியர் தெய்வசிகாமணி ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

    அப்போது முதல் பட்டதாரி ஊக்கத்தொகையை கழித்து கல்வி கட்டணத்தை மாணவர்கள் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் சுமார் 4 மணி நேர போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    ஊராட்சி மன்ற தலைவர் சர்குருநாதன் .ஜேசிபி மூலம் துப்புரவு பணியாளர்களை கொண்டு. கழிவுப் பொருள்களைஅகற்றி அதை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டது.
    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் மஞ்சகுழி ஊராட்சி முட்லூர் கடலூர் செல்லும் சாலை .ஓரத்தில் நீண்ட நாட்களாக மாட்டு கறி கழிவு. ஆட்டுக் கழிவு மற்றும் மீன்கள் கழிவு போன்றவை அப்பகுதியில் தினந்தோறும் கொட்டப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் செல்லமே முடியாமல் இருந்தது .மேலும் துர்நாற்றம் வீசும் அவல நிலையில், 'அப்பகுதியில் யாரும் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் முடியவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள்.மஞ்சக்குழி. ஊராட்சி மன்ற தலைவர். மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

    அதனடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவஞானசுந்தரம் சுகுமார் ஆகியோரின் உத்தரவின்பேரில் ஊராட்சி மன்ற தலைவர் சர்குருநாதன் ஜேசிபி மூலம் துப்புரவு பணியாளர்களை கொண்டு கழிவுப் பொருள்களைஅகற்றி அதை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டது. கழிவு கழிவுகள் கொட்டப்பட்டதால் துர்நாற்றம் வீசுவது குறைந்து காணப்பட்டது.

    மேலும் கழிவு அகற்றப்பட்ட இடத்தில் பிளீச்சிங் பவுடர் கொட்டப்பட்டது. அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    கடலூர் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் மணவெளி சுடுகாட்டில், வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில், பிணமாக கிடப்பதாக, கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கடலூர் முதுநகர், மணவெளி, முத்தாலம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜவேலு மகன் அரிகிருஷ்ணன் (19). என்பதும் இவர் மண வெளிப்பகுதியில் பொம்மைகள் செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. புகாரின் பெயரில்,போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிகிருஷ்ணன் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவிற்கு, வேறு ஏதேனும் காரணம் உண்டா?என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் முதுநகரில் நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் உல்லாசமாக இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் கடலூர் முதுநகரில் வசித்து வந்தார். அப்போது கடலூர் செம்மங்குப்பத்தை சேர்ந்த வாலிபர் சசிகுமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. எனவே அவர் அடிக்கடி லாரி டிரைவர் வீட்டுக்கு வருவது உண்டு.

    கடந்த 2018-ம் ஆண்டு டிரைவர் லாரியில் வெளி யூருக்கு சென்று இருந்தார். அப்போது டிரைவர் வீட்டுக்கு சசிகுமார் சென் றார்.

    வீட்டில் லாரி டிரைவர் மனைவி குளிக்கும் சமயத் தில் ரகசியமாக சசிகுமார் வீடியோ எடுத்து வைத்துள் ளார். பின்னர் அந்த வீடியோவை காண்பித்து சசிகுமார் தொடர்ந்து லாரி டிரைவர் மனைவியை நிர்பந்தப்படுத்தியும், ஆசைக்கு இணங்காவிட் டால் சமூக வலைதளங்களிலும், நண்பர்களிடமும் காட்டி அசிங்கப்படுத்து வேன் என மிரட்டியுள்ளார்.

    இதன் காரணமாக பலமுறை சசிகுமார், லாரி டிரைவர் மனைவியிடம் உல்லாசமாக இருந்துள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு இச்சம்பவம் குறித்து லாரி டிரைவருக்கு தெரியவந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர், சசிகுமாரை கண்டித்து அங்கிருந்து தென்காசி மாவட்டத்திற்கு தனது குடும்பத்துடன் சென்று வசித்து வந்துள்ளார்.

    தற்போது லாரி டிரைவர் மனைவி செல்போன் எண்களை சசி குமார் தெரிந்து கொண்டு மீண்டும் உல்லாசமாக இருக்க மிரட்டி வந்துள்ளார்‌. இதன் காரணமாக கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கடந்த சில மாதத்திற்கு முன்பு புகார் அளித்த காரணத்தினால் சசிகுமார் மற்றும் அவரது தந்தை ஆகியோரை போலீசார் விசாரணை நடத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளனர். ஆனால் அதன் பிறகு சசிகுமார் மீண்டும் லாரி டிரைவர் மனைவியை உல்லாசமாக இருக்க அழைத்தார்.

    ஆனால் லாரி டிரைவர் மனைவி வர மறுத்ததால் சமூக வலைத்தளங்களில் போலியாக கணக்கு தொடங்கி உள்ளார். பின்னர் லாரி டிரைவர் மனைவியை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இதனால் லாரி டிரைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் மன உளைச்சலில் இருந்து வருகின்றனர்.

    இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சசிகுமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகின்றது.
    ×