என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
கடலூர் அருகே வாலிபர் தற்கொலை
கடலூர் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் முதுநகர் மணவெளி சுடுகாட்டில், வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில், பிணமாக கிடப்பதாக, கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கடலூர் முதுநகர், மணவெளி, முத்தாலம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜவேலு மகன் அரிகிருஷ்ணன் (19). என்பதும் இவர் மண வெளிப்பகுதியில் பொம்மைகள் செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. புகாரின் பெயரில்,போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிகிருஷ்ணன் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவிற்கு, வேறு ஏதேனும் காரணம் உண்டா?என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






