என் மலர்tooltip icon

    கடலூர்

    • கோவிலில் தமிழக அரசு உத்தரவுப்படி தமிழில் அர்ச்சனை நடந்து வருகிறது.
    • கோவிலில் தமிழில் அர்ச்சனை நடைபெற வேண்டும் என்று கோரி மனு கொடுக்க கோவில் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர்.

     கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப்பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தமிழக அரசு உத்தரவுப்படி தமிழில் அர்ச்சனை நடந்து வருகிறது. எனினும் இன்று காலை நாம்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சாமி ரவி தலைமையில் கட்சி நிர்வாகிகள் திடீர் என பாடலீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். 

    அப்போது கோவிலில் தமிழில் அர்ச்சனை நடைபெற வேண்டும் என்று கோரி மனு கொடுக்க கோவில் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸ் டி.எஸ்.பி. கரிக்கால் பாரி சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் நாம் தமிழர் கட்சியினரை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை மீறி நாம்தமிழர் கட்சியினர் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    • நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
    • விபத்தில் டிரைவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    கடலூர்:

    நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி தென்னங்கீற்றுலோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்றது. இந்த லாரியை திருச்சியை சேர்ந்த டிரைவர் ஜெயராம்சிங் ஓட்டி வந்தார். அப்போது வேப்பூர் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரி சாலையின் குறுக்கே கிடந்ததால் போக்குவரத்து 3 மணி நேரம் பாதிப்படைந்தது. இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து போலீசார் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குருவாயூர் விரைவு ரெயில் வருகிற 7-ந் தேதி பாதை மாற்றி அமைக்கப்படுகிறது.
    • குருவாயூர் விரைவு ெரயில்வருகிற 7-ந் தேதி பாதை மாற்றி அமைக்கப்படுகிறது.

    கடலூர்:

    விருத்தாசலம் ெரயில் பாதை பராமரிப்பு பணி நடக்க உள்ளதால் குருவாயூர் விரைவு ெரயில்வருகிற 7-ந் தேதி பாதை மாற்றி அமைக்கப்படுகிறது.அதன்படி 7-ந் தேதி அன்று சென்னை எழும்பூரிலிருந்து குருவாயூர் புறப்படும் ெரயில், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக ,மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இதனால், விருத்தாசலம், பெண்ணாடம், அரியலுார், ஸ்ரீரங்கம் ஆகிய நிலையங்களில் நிறுத்தம் இருக்காது. ஆனால் பயணிகள் வசதிக்காக திருப்பா திரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை ெரயில் நிலையங்களில் ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    • கடலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் இன்று காலை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
    • வார்டு பகுதிக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பது இல்லை.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் இன்று காலை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன், செயல் பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதனை தொடர்ந்து கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைக்கிறார். மேலும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்க உள்ளார். இதன் காரணமாக அனைத்தும் கவுன்சிலர்களும் தங்கள் வார்டு பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் இந்த திட்டம் செயல்படுவதற்கு என்னென்ன பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள் என்பதனை தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இதனை தொடர்ந்து கூட்டத்தில் ஒரு சில தி.மு.க. கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். மேலும் எங்கள் வார்டு பகுதிக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பது இல்லை. மேலும் எந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் தகவல் தெரிவிப்பதில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர்.

    அப்போது அங்கிருந்த மற்றொரு தரப்பு தி.மு.க. கவுன்சிலர்கள் திடீரென்று, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பேரில் மேயர் சுந்தரி ராஜா தலைமையிலான மாநகராட்சி சிறப்பாக செயல்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றது என குறுங்கிட்டு தெரிவித்தனர்.

    அப்போது குறைகள் குறித்து தெரிவித்த திமுக கவுன்சிலர்கள், எங்கள் கேள்வி தொடர்பாக மேயர் மற்றும் அதிகாரிகள் பதில் கூற வேண்டும். அதற்கு மாறாக எங்கள் கேள்விக்கு எப்படி கவுன்சிலர்கள் பதில் கூற முடியும் என கூறினர். இதனால் இரு தரப்பினர் சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் ஆகியோர் அவரவர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் குறித்து பதில் அளிக்கப்படும். ஆகையால் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் மோதலாக மாறியது. அதனைத்தொடர்ந்து இருதரப்பு கவுன்சிலரும் பாரதி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை அப்புறப்படுத்தினர்.

    • மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், பாரூக் அலி, தமிழரசன், கர்ணன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாநகராட்சி அலுவலகத்திற்குள் வந்து கொண்டிருந்தனர்.
    • கவுன்சிலர் விஜயலட்சுமி கணவர் செந்தில் திடீ ரென்று கவுன்சிலர் பாரூக் அலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 45 வார்டுக்கு உட்பட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் 30-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் காலை 10 மணிக்கு வந்ததால் வழக்கம் போல் கூட்டம் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், பாரூக் அலி, தமிழரசன், கர்ணன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாநகராட்சி அலுவலகத்திற்குள் வந்து கொண்டிருந்தனர். அப்போது கவுன்சிலர் விஜயலட்சுமி கணவர் செந்தில் திடீ ரென்று கவுன்சிலர் பாரூக் அலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனை தொடர்ந்து பாரூக் அலியுடன் வந்த கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்து ஏன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறீர்கள் என கேட்டனர். அப்போது கவுன்சிலர் கணவர் செந்தில் மற்றும் அவர் ஆதரவாளர்களுக்கும், தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தி.மு.க. கவுன்சிலர் பாரூக் அலி தாக்கப்பட்டார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் உடனடியாக இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

    மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வருகை தந்த தி.மு.க. கவுன்சிலர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு 70 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.
    • கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணி–யில் ஈடுபட்டு உள்ளனர்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த 31 ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண் டாடப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 1300 இடங் களில் விநாயகர் சிலை வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து இன்று 3- ம் நாள் என்பதால் வீடுகள் மற்றும் வெளியில் சிலைகள் வைத்து வழிபட்டவர்கள் கடல் மற்றும் ஆறுகள் பகுதியில் விநாயகர் சிலையை கரைக்கும் ஐதீகத்தை முன்னிட்டு ஊர்வலமாக வருவார்கள் என்பதால் மாவட்டம் முழுவதும் 2200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலை ஊர்வ–லத்தின் போது ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 147 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி , குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி சேத்தியா தோப்பு காட்டு மன்னார்கோவில், நடுவீரப் பட்டு, திட்டக்குடி, உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 70 டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத் தப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இன்று 2- ந்தேதி 70 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நடவடிக்கை மூலம் மாவட்டத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப் பட்டுள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வருகிற 4- ந் தேதி மாவட்டம் முழுவதும் இதேபோல் ஒரு சில டாஸ்மாக் கடையில் மூடப்படும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு தயாயும், மகனும் கண்ணியா குமரிக்கு உறவினர்களுடன் சுற்றுலா சென்றனர்.
    • செல்போன் மூலம் சீனிவா சனின் மனைவி கவுரிக்கு தகவல் தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி லிங்காரெட்டி பாளையத்ைத சேர்ந்தவர் சீனுவாசன் (வயது 50). இவர் துபாயில் உள்ள தனி யார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுரி, மகன் பாலகிருஷ்ணன் ஆகியோர் லிங்காரெட்டி பாளையத்தில் வசித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு தயாயும், மகனும் கண்ணியா குமரிக்கு உறவினர்களுடன் சுற்றுலா  சென்றனர். வீட்டில் வளர்த்து வந்த நாயை பக்கத்துவீட்டை சேர்ந்த வரிடம் பார்த்து கொள்ளு மாறு சொல்லி விட்டு சென்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோ வை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற னர். அப்போது நாய்க்கு உணவு வைப்ப தற்காக பக்கத்து வீட்டை சேர்ந்த வர் அங்கு வந்தார். அப்போது வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

    இதுகுறத்து அவர் செல்போன் மூலம் சீனிவா சனின் மனைவி கவுரிக்கு தகவல் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர் உடனே ஊருக்கு திரும்பி னார். அப்போது பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். இதுகுறித்து உடனடியாக பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் டி.எஸ்.பி. சபிபுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் அங்கு விரைந்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது அது உடைக்கப்பட்டு டிஸ்க் திருடுபோய் இருந்தது. 

    கொள்ளையர்கள் பற்றி துப்புதுலக்க மோப்பநாய் கடலூரில் இருந்து வர வழைக்கப்பட்டது. அது வீட்டை சுற்றி ஓடி சாலை யோரம் நின்றது. உடனே போலீசார் கொள்ளை நடந்த வீட்டின் வெளிபுற பகுதி யில் உள்ள கண்கா ணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 4 பேர் ஆம்னி வேனில் சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் ஆம்னிவேனில் சென்ற 4 பேரை பிடித்து விசா ரணை நடத்தி வருகிறா ர்கள். கொள்ளை நடந்த வீட்டில் உள்ள நாய் யாரைக்கண்டாலும் துடிப்பாக கவ்வி பிடிக்கும். ஆனால் கொள்ளை நடந்த அன்று நாய் அமைதியாக இருந்துள்ளது. எனவே இந்த நாய்க்கு உணவு அளித்தவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அவரிடமும், கவுரியின் உறவினரிடமும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விருத்தாசலம் அருகே கல்லூரி பஸ் மீது லாரி மோதியதில் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
    • சம்பவத்தை பார்த்த அருகிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் தொழுதுரை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி பஸ் இன்று காலை மாணவர்களுடன் விருத்தாசலத்தில் இருந்து தொழுதூர் நோக்கி கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது விருத்தாசலம் அடுத்த சாத்தியம் என்ற இடத்தில் அருகே நின்று கொண்டு மாணவர்களை பேருந்திற்குள் ஏற்றி கொண்டிருந்தபோது விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நோக்கி சென்ற லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த கல்லூரி பஸ்சின் பின்புறம் பலமாக மோதியது.

    இதில் பஸ்சில் இருந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை பார்த்த அருகிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தனர். விபத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும், பலத்த காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக கடலூர் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்.சம்பவம் குறித்து விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்த விருத்தாசலம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருத்தாசலத்தில் மணல் கடத்தய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • மணிமுக்தாற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    விருத்தாசலம் மணிமுக்தாற்றில் மணல் திருட்டு சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்தியுள்ள போதும், மணல் கடத்தல்காரர்கள் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மணிமுக்தாற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்டுடவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மாட்டு வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 3 டயர் வண்டிகள் மற்றும் மாடுகளை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.இது குறித்து விருத்தாசலம் போலீசார் மணல் திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காடாம்புலியூரில் கனமழை காரணமாக குண்டும் குழியுமான சாலையை இன்ஸ்பெக்டர் ராஜா தாமரை பாண்டியன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சரி செய்தார்.
    • 10 ஆண்டுகளாக தொடங்கிய நிலையிலேயே இந்த பணி உள்ளது.

    கடலூர்:

    கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை தரம் உயர்த்தப்பட்டு நாற்கர சாலை அமைக்கும் பணி நடை பெற்று வந்தது. இந்த நாற்கர சாலை பணிக்காக சாலை ஓரங்களில் இருந்த வீடு, நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை போடும் பணிதொடங்கியது. ஆனால் 10 ஆண்டுகளாக தொடங்கிய நிலையிலேயே இந்த பணி உள்ளதால் சாலையில் குண்டும் குழி–யும் ஏற்பட்டு உயிர் பலி வாங்கும் சாலையாக இந்த பண்ருட்டி சென்னை சாலை மாறி உள்ளது.

    கடந்த 2 நாட்களாக பண்ரு–ட்டியில் மழை பெய்து வருவதால் இந்த குண்டும் குழியுமான சாலை சேரும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள குழியில் விழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக  உள்ளது. எனவே கடலூர் கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பேசி இந்த போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையை சீரமைத்து தரவேண்டும். பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் சேரும் சகதியு மாகிய தேசிய நெடுஞ்சா லையில் உள்ள பள்ளத்தை இன்ஸ்பெக்டர் ராஜா தாமரை பாண்டியன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சரி செய்தார்.

    • புவனகிரி அரசு பள்ளி வளாக புதரில் 8 மாத ஆண் குழந்தை பிணமாக கிடந்தது.
    • இந்த தகவல் பள்ளி வளாகத்தில் காட்டுத் தீப்போல பரவியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரியில் குறிஞ்சிப்பாடி-புவனகிரி சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அருகில் உள்ள கிராம ங்களை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். நேற்று வழக்கம்போல் மாணவிகள் பள்ளி வளா கத்தில் உள்ள கழி வறைக்கு சென்றனர். அப்போது அங்குள்ள முட்புதரில் 8 மாத ஆண் குழந்தை கிடப்பதை கண்டு மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் பள்ளி வளாகத்தில் காட்டுத்தீப்போல பரவியது. இது பற்றி பள்ளி மாணவிகள், ஆசிரியைகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் இது தொடர்பாக புவனகிரி போலீஸில் புகார் செய்தனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் தலை மையில் போலீசார் அங்கு விரைந்தனர். பிணமாக கிடந்த ஆண் குழந்தையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தகுழந்தைைய முட்புதருக்குள் வீசி சென்றது யார்? தவறான வழியில் குழந்தை பிறந்த தால் அதனை கொன்று பெண் வீசி சென்றாரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நட த்தி வருகிறார்கள்.

    • கொள்ளிடம் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 3 கிராமங்களில் உள்ள சுமார் 750-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
    • தண்ணீர் வரத்து இன்னும் அதிகரிக்கும்பட்சத்தில் மேலும் நூற்றுக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    சிதம்பரம்:

    கர்நாடக மாநிலத்தில் மழை பெய்து வருவதால் அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேருகிறது. ஏற்கனவே மேட்டூர் அணை நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் சுமார் ஒரு லட்சத்துக்கு அதிகமான கனஅடி நீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக வந்து கடலில் சேருகிறது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் அக்கறை ஜெயங்கொண்டான் பட்டினம், கீழ குண்டல பாடி, திட்டுக்காட்டூர் ஆகிய 3 கிராமங்களிலும் உள்ள சுமார் 750-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கிராமங்களை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளதால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு மக்கள் படகிலேயே பயணம் செய்யும் அவலநிலை உள்ளது.

    மேலும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்தால் 3 கிராமங்கள் மட்டுமல்லாது வீரான் கோவில்தட்டு , காரமேடு மடத்தான் தோப்பு உள்ளிட்ட மேலும் சில கிராமங்களிலும் தண்ணீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தண்ணீரின் அளவு அதிகரிப்பதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 1200 வீடுகளும் தண்ணீரில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    முன்னதாகவே ஏற்பட்ட பாதிப்பிற்கு உரிய நிவாரணம் இதுவரை வழங்கவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். தற்போது புதிதாக வந்துள்ள வெள்ள பாதிப்பிற்கு எப்போது நிவாரணம் கிடைக்குமோ என கேள்வி எழுப்புகின்றனர்.

    கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் அக்கறை ஜெயங்கொண்ட பட்டினம், கீழகுண்டலவாபாடி திட்டுக்காட்டூர் ஆகிய 3 கிராமங்களில் உள்ள 4 புயல் பாதுகாப்பு மையங்களில் 30 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150 பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

    தண்ணீர் வரத்து இன்னும் அதிகரிக்கும்பட்சத்தில் மேலும் நூற்றுக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    ×