search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து கடும் பாதிப்பு
    X

    நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து கடும் பாதிப்பு

    • நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
    • விபத்தில் டிரைவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    கடலூர்:

    நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி தென்னங்கீற்றுலோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்றது. இந்த லாரியை திருச்சியை சேர்ந்த டிரைவர் ஜெயராம்சிங் ஓட்டி வந்தார். அப்போது வேப்பூர் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரி சாலையின் குறுக்கே கிடந்ததால் போக்குவரத்து 3 மணி நேரம் பாதிப்படைந்தது. இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து போலீசார் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×