என் மலர்
கடலூர்
- மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் ெரயில் நிலையம் வந்தார்.
- தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அன்பரசன் அதிர்ச்சி அடைந்தார்.
கடலூர்
விருத்தாசலத்தை அடுத்த எம்.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன். இவர் தனது நண்பரை ெரயிலில் வழி அனுப்பவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் ெரயில் நிலையம் வந்தார்ெயில் நிலையம் எதிரே இருந்த கடையின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, ெரயில் நிலையம் உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்க்கும் போது தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அன்பரசன் அதிர்ச்சி அடைந்தார்இது குறித்து விருத்தாசலம் போலீசில் அன்பரசன் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்ட போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் காணாமல் போன இருசக்கர வாகனத்தை தேடி வருகின்றனர்.
- உடலில் பல இடங்களில் காயங்களுடன் இருந்துள்ளார். வீட்டில் கேட்டபோது வண்டியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறியுள்ளார்.
- சிறிது நேரம் கழித்து பாட்டி அவரை எழுப்பும்போது சண்முகம் இறந்த நிலையில் இருந்துள்ளார்.
கடலூர்:
சிதம்பரம் கோவிந்தசாமி தெரு காரியபெருமாள் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகி என்கிற சண்முகம். இவர் கோவில் சிலை செய்யும் நபர். நேற்று முன்தினம் வெளியில் சென்றவர் நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது உடலில் பல இடங்களில் காயங்களுடன் இருந்துள்ளார். வீட்டில் கேட்டபோது வண்டியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறியுள்ளார். மறுநாள் காலை மருத்துவ மனைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் பணம் வாங்கிக்கொண்டு தனது பாட்டி வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து பாட்டி அவரை எழுப்பும்போது சண்முகம் இறந்த நிலையில் இருந்துள்ளார். அவரது தந்தை முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மர்மமான முறையில் இறந்த சண்முகம் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் அவரது பெயர் ரவுடி பட்டியலில் இடம் பெற்றிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வந்த மோட்டார் திடீரென்று பழுதானதால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரக்கூடிய கழிவுநீர் முழுவதும் அந்தபகுதியில்உள்ள வீடுகளை சூழ்ந்தது,
- அதிகாரியிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் வீடுகள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்து பாதாள சாக்கடை மூலம் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மூலம் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.கடலூர் தேவனாம்பட்டினம் கேகே நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகின்றது. இதில் அந்த சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வரக்கூடிய பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வந்தது.கடந்த சில தினங்களாக சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வந்த மோட்டார் திடீரென்று பழுதானதால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரக்கூடிய கழிவுநீர் முழுவதும் சுத்திகரித்து வெளியேற்ற முடியாமல் தற்போது கழிவுநீர் முழுவதும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்து உளளது.தற்போது வீடுகளை சுற்றியும் கழிவு நீர் முழுவதும் குளம் போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகின்றது. இது மட்டும் இன்றி தற்போது கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இது சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லைஇதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு மக்களுக்கு மர்ம காய்ச்சல், வாந்தி மயக்கம் ,வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்எனவே பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவையான சுகாதாரத்தை அதிகாரிகள் ஏற்படுத்தி நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
- வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
- கல்லூரி மாணவியையும், வாலிபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்
கடலூர்:
கடலூர் வண்டி ப்பாளையம் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி படித்து வரும் மாணவி நேற்று காலை வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லைஅதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கல்லூரி மாணவியை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. மேற்கொண்டு மாணவி எங்கு சென்றார் என விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவி யை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறதுஇது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தி செல்லப்பட்ட கல்லூரி மாணவியையும், வாலிபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- பரத நாட்டியம் விடிய, விடிய நடக்கிறது.
- 19-ந்தேதி அதிஉன்னத அதிகாரநந்தி கோபுர தரிசனம் நடக்கிறது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 11 மணிக்கு அறுபத்து மூவர் அபிஷேகம், மாலை 4.30 மணி அளவில் சனி மகா பிரதோஷம், இரவு 8.30 மணிக்கு முதல் காலம், இரவு 11.30 மணிக்கு 2-ம் காலம், லிங்கோத்பவர் அபிஷேகம், அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால பூஜை நடக்கிறது.
முன்னதாக உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தேவாரம்- திருவாசகம் இசைப்பாடல்கள், வாய்ப்பாட்டு, மாணவ-மாணவிகளின் பரத நாட்டியம் விடிய, விடிய நடக்கிறது. 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 4 மணிக்கு 4-ம் காலம், 5.30 மணிக்கு அதிஉன்னத அதிகாரநந்தி கோபுர தரிசனம் நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் சந்திரன், செயல் அலுவலா் சிவக்குமாா் மற்றும் பலா் செய்துள்ளனா்.
- வீராணம் ஏரியில் இருந்து வெள்ளியங்கால் ஓடை வழியாக கடலுக்கு வீணாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சிஅடைந்தனர்
- இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளதுஇந்த ஏரிக்கு பருவமழை பெய்யும் நேரங்களிலும், மேட்டூர் அணை தண்ணீர் மூலமும் நீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு பருவ மழை அதிகரித்ததால் வீராணம் ஏரி 6 முறை நிரம்பி வழிந்தது.தற்ேபாதும் ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கி றது.
சுமார் ஒரு வாரகா லமாக 47.50 அடியாக நீடித்தது. இந்த நிலையில் வீராணம் ஏரியில் இருந்து வெள்ளியங்கால் ஓடை வழியாக கடலுக்கு வீணாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வீராணம் ஏரி நிரம்பினால் அருகில் உள்ள கிராமங்களில் நீர்மட்டம் கணிசமாக உயரும். ஆனால், தற்ேபாது அதிகாரிகள் ஏரியில் உள்ள தண்ணீரை வீணாக கடலுக்கு திறந்து விடுகின்றனர். இதனால் ஏரியில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.இன்று காலை 8 மணி நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.95 அடியாக உள்ளது. ஏரிக்கு 334 கனஅடி நீர் வருகிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 65 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
- மகேஷ்வரி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் மகேஷ்வரியை மருத்துவமனையில் சேர்த்தனர்
- அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீரசோழகன் கிராமத்தை சேர்ந்தவர் வேலவன். அவரது மனைவி மகேஷ்வரி (வயது 35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது. நேற்று மகேஷ்வரி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் மகேஷ்வரியை தூக்கிக்கொண்டு சிதம்பரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- . இவர் குடும்ப செலவுகளுக்காக பல்வேறு நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கி இருந்தார்.
- ட்டில் தனிமையில் இருந்த தமிழ்செல்வன் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
கடலூர்:
விருத்தாசலம் அருகே பரவலூர் கல்லரகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது26). இவர் குடும்ப செலவுகளுக்காக பல்வேறு நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கி இருந்தார்.
கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாத நிலையில் தமிழ்செல்வன் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.நேற்று வீட்டில் தனிமையில் இருந்த தமிழ்செல்வன் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்த தமிழ்ச்செல்வனுக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
- பிரபாகரனை கத்தியால் தொடை மற்றும் வயிற்றுப் பகுதி யில் குத்தினர்.
கடலூர்:
கடலூர் வண்டிபாளை யம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாசிலாமணி. அவரது மகன் பிரபாகரன் (32). இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவை புதுச்சேரி மாநிலம் குருவிநத்தம் பகுதியை சேர்ந்த கலைமணி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். ஆனால் கலைமணி பிரபாகரனுக்கு வாடகை பணத்தை சரியாக கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.இது குறித்து பிரபாகரன், கலைமணியிடம் சென்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபாகரன் நேற்று இரவு உண்ணாமலை செட்டி சாவடி பகுதியில் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த கலை மணி மற்றும் 3 பேர் பிரபாகரனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடு பட்டுள்ளனர்
மேலும் பிரபாகரனை கத்தியால் தொடை மற்றும் வயிற்றுப் பகுதி யில் குத்தினர். இதில் காயமடைந்த பிரபா கரன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் குருவி நத்தம் சேர்ந்த கலைமணி, புதுச்சேரி லால்பேட்டை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 31), புதுச்சேரி குருவி நத்தம் சேர்ந்த ஸ்ரீதர் (வயது 24), அழகிய நத்தம் சேர்ந்த செல்வம் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் ராஜேஷ் , ஸ்ரீதர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- இந்த கோவில் செயல் அலுவலராக மஞ்சு உள்ளார்.
- போலி ஆவணம் தயாரித்து வருவாய்துறைக்கு தடையில்லா சான்று கொடுத்து மின் இணைப்பு ஆணை பெற்றுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் பகுதியில் குட்டியாண்டவர்கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் செயல் அலுவலராக மஞ்சு உள்ளார்.இவர் அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-தெற்கு பிச்சாவரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். விவசாயி. இவர் கடந்த 30-ந் தேதி கோவிலில் பயன்படுத்தப்படும் துறை ரீதியான முத்திரையை பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்து வருவாய்துறைக்கு தடையில்லா சான்று கொடுத்து மின் இணைப்பு ஆணை பெற்றுள்ளார். எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
அதன்பேரில் போலீசார் ஜெயராமன் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இவர் நோய் கொடுமை காரணமாக கடந்த 9-ந் தேதி தூக்குபோட்டார்.
- அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராணி இன்று காலை இறந்தார்.
கடலூர்:
சிதம்பரம் அருகே மனலூர்பகுதியை சேர்ந்தவர் ராமு. அவரது மனைவி செல்வராணி. இவர் நோய் கொடுமை காரணமாக கடந்த 9-ந் தேதி தூக்குபோட்டார். உடனே உறவினர்கள் அவரை காப்பாற்றி சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராணி இன்று காலை இறந்தார். இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் விசாரிக்கிரார்கள்.
- பண்ருட்டியில் மாணவர்களுக்கு சப்ளை செய்ய 6 கிலோ கஞ்சா கடத்தல் 2 பேர் கைது.
- அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை நடத்தினர்.
கடலூர்:
பண்ருட்டி போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார்நேற்று பண்ருட்டிசென்னை சாலை கண்டரக் கோட்டை யில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது,அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 6 கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து அவர்களை பண்ருட்டிபோலீஸ் நிலையத்திற்குஅழைத்து வந்து விசாரணைநடத்தினர்கஞ்சா பொட்டல ங்களுடன் சிக்கியவர்களிடம் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா,இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) ,சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோ ர்விசாரணைநடத்தினர்விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த டிரைவர் சதாம் உசேன் (வயது26), அருண்குமார் (24) என்பதும் தெரியவந்தது.
மேலும் சினிமாபட பாணியில் கஞ்சாவை கடத்தி மற்றொரு கஞ்சா கும்பலிடம் ஒப்படைக்க வந்ததுகண்டு பிடிக்க ப்பட்டது .மேலும் பள்ளி, கல் லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யவும் கஞ்சா கடத்தி வந்து உள்ளனர்இதனையடுத்து, 6 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிளை கைப்பற்றி 2பேரை யும்கைதுசெய்தனர். இது தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






