search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரத்தில்தந்தை சாவில் மர்மம் ,மகன் பரபரப்பு புகார்,
    X

    சிதம்பரத்தில்தந்தை சாவில் மர்மம் ,மகன் பரபரப்பு புகார்,

    • காலையில் மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு பணம் ரூ.100 வாங்கி கொண்டு சென்றார்,
    • தாகர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் செல்வக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்

    கடலூர்:

    சிதம்பரம் பழைய புவனகிரி ரோடு தொழிலாளர் குடியிருப்பில் வசிப்பவர் சுதாகர் (வயது 42) . இவர் தட்டுவண்டி தொழிலாளி . சம்பவத்தன்று காலையில் மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு பணம் ரூ.100 வாங்கி கொண்டு சென்றார். பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் பெரிய காஜியார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சுதாகர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் செல்வக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவரது மகன் சிதம்பரம் போலீசில் புகார் செய்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் செல்வக்குமார் தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×