என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரம் அருகே வயலில் மயங்கி விழுந்த பெண் திடீர் சாவு
    X

    சிதம்பரம் அருகே வயலில் மயங்கி விழுந்த பெண் திடீர் சாவு

    • மகேஷ்வரி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் மகேஷ்வரியை மருத்துவமனையில் சேர்த்தனர்
    • அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீரசோழகன் கிராமத்தை சேர்ந்தவர் வேலவன். அவரது மனைவி மகேஷ்வரி (வயது 35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது. நேற்று மகேஷ்வரி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் மகேஷ்வரியை தூக்கிக்கொண்டு சிதம்பரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×