என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் திடீர் சாவு"

    • மகேஷ்வரி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் மகேஷ்வரியை மருத்துவமனையில் சேர்த்தனர்
    • அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீரசோழகன் கிராமத்தை சேர்ந்தவர் வேலவன். அவரது மனைவி மகேஷ்வரி (வயது 35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது. நேற்று மகேஷ்வரி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் மகேஷ்வரியை தூக்கிக்கொண்டு சிதம்பரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திடீரென உடல் நலம் பாதிப்பு
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை

    கலசபாக்கம் அடுத்த மேப்பத்துறை கிராமம் பேங்க் தெருவை சேர்ந்தவர் பரசுராமன். இவரது மனைவி தமிழரசி (வயது 26) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

    இந்த நிலையில் தமிழரசி மீண்டும் கர்ப்பமானார், நிறைமாதகர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்திற்காக நேற்று முன்தினம் மாலை அருகே உள்ள நார்த்தாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் அவருக்கு மகப்பேறு சிகிச்சை அளித்தனர் இந்த நிலையில் தமிழரசிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை டாக்டர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசி பரிதாபமாக இறந்து விட்டார்.

    இச்சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மேலும் இது சம்பந்தமாக முறையான சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தால் தமிழரசி இறந்து உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தைகளுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.
    • எதிர்பாராதவிதமாக கவுசல்யா தடுமாறி கீழே விழுந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பிடமனேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவுசல்யா(25).

    இவர் தனது குழந்தைகளுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கவுசல்யா தடுமாறி கீழே விழுந்தார். மயங்கி கிடந்த அவரை உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் கவுசல்யா இறந்துவிட்டதாக கூறினர். கவுசல்யா திடீரென இறந்ததால் சந்தேகமடைந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இது குறித்து தருமபுரி நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×