என் மலர்tooltip icon

    கடலூர்

    • சீட்டுப்பணத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்கள்.
    • கடந்த 3 ஆண்டுகளாக சீட்டு பணம் மற்றும் தீபாவளி பண்டு என பலர் ரூ.1 கோடியே 40 லட்சம் பணம் செலுத்தி உள்ளோம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கடலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த ஜெயமாலினி தலைமையில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் நேரில் வருகை தந்தனர். பின்னர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் அனைவரும் புதுப்பாளையத்தை சேர்ந்த துணி சலவை கடையில் கூலி வேலை செய்து வருகின்றோம். கடந்த 2018-ம் ஆண்டு கடலூர் புதுப்பாளையம் மற்றும் வன்னியர் பாளையம் சேர்ந்த 2 நபர்கள் எங்களை அணுகி வங்கி மற்றும் தபால் துறையில் முதலீடு செய்யலாம். எங்களுக்கு தெரிந்த நபர்கள் சீட்டு நடத்தி வருகின்றனர். மாதந்தோறும் தீபாவளி பண்டும் நடத்தி வருகிறார். ஆகையால் சீட்டுப்பணத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்கள்.

    மேலும் சீட்டு எடுத்தவுடன் உடனடியாக பணம் வழங்கி விடுவோம். தீபாவளி சீட்டு கட்டினால் 20 நாட்களுக்கு முன்பு பொருட்கள், தங்க நாணயம் ஆகியவை வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை நம்பி கடந்த 3 ஆண்டுகளாக சீட்டு பணம் மற்றும் தீபாவளி பண்டு என பலர் ரூ.1 கோடியே 40 லட்சம் பணம் செலுத்தி உள்ளோம்.

    அவர்களிடம் தொடர்ந்து பணம் கேட்டு வந்ததால், பணம் தராமல் ஏமாற்றி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தலைமறைவாக உள்ளனர். மேற்கண்ட நபர்கள் குறித்து விசாரித்த போது சென்னை திருவெற்றியூரைச் சேர்ந்த கும்பல் பல்வேறு இடங்களில் பணத்தை ஏமாற்றி வீடு மற்றும் நிலம் வாங்கியுள்ளதும், கண்டெய்னர்கள் வாங்கி உள்ளதும் தெரிய வந்துள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டால் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஆகையால் ரூ.1 கோடி 40 லட்சம் ஏமாற்றிய நபர்களை உடனடியாக கண்டுபிடித்து எங்கள் பணத்தை மீட்டுத் தந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

    • பண்ருட்டி மாளிகம்பட்டு பஜனை கோயில் தெருவில் வசிப்பவர் செல்வம் (வயது 28).
    • ஒரு மூட்டையுடன். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர்

    கடலூர்:

    பண்ருட்டி மாளிகம்பட்டு பஜனை கோயில் தெருவில் வசிப்பவர் செல்வம் (வயது 28). இவர் அதே ஊரில் உள்ள அய்யனார் கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு மூட்டையுடன். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த மூட்டையில் ஆற்று மணல் இருந்ததை போலீசார் பார்த்தனர். இதனைத் தொடர்ந்து ஆற்று மணலை திருடிய குற்றத்திற்காக செல்வத்தை காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர்.

    • ராமதாஸ். இவர் இன்று காலை அங்கிருந்த சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.
    • இதனால் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம்  பண்ருட்டி அடுத்த மணம் தவழ்ந்தபுத்தூரை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் இன்று காலை அங்கிருந்த சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த பகத்சிங் என்பவர் ஏன் வழியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது ராமதாசுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் மோதலில் ஈடுபட்டு பகத்சிங்கை தாக்கினார். இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டமான நிலை அங்கு உருவானது. இது பற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    • மகன் மித்ரன்(3). நேற்று முன்தினம் இவரது வீட்டின் தோட்டத்தில் மித்ரன் விளையாடிக் கொண்டிருந்தான்.
    • அப்போது பாம்பு கடித்தது.

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த துணிசரமேடு பகுதியை சேர்ந்தவர் திருஞானம் (வயது 37) இவரது மகன் மித்ரன்(3). நேற்று முன்தினம் இவரது வீட்டின் தோட்டத்தில் மித்ரன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பாம்பு கடித்தது. உடனடியாக சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதனை செய்தபோது அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து சிதம்பரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தமிழரசன். மனைவி ஆனந்தி (வயது 35). அதே ஊரை சேர்ந்தவர் மூர்த்தி (40). கூலி தொழிலாளி. ஆனந்தி நேற்று முன்தினம் வயல் வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த மூர்த்தி, ஆனந்தியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த கரும்பூரை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி ஆனந்தி (வயது 35). அதே ஊரை சேர்ந்தவர் மூர்த்தி (40). கூலி தொழிலாளி. ஆனந்தி நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வயல் வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மூர்த்தி, ஆனந்தியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மணி (25), கொத்தனார். திருமணம் ஆகாதவர். மணி (25), இவர் திருத்துறையூர் - கயப்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள புளிய மரம் ஒன்றில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இவர் எதற்காக தூக்குபோட்டு இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் துளசிங்கம் மகன் மணி (25), கொத்தனார். திருமணம் ஆகாதவர். இவர் திருத்துறையூர் - கயப்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள புளிய மரம் ஒன்றில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல்கொடுத்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இவர் எதற்காக தூக்குபோட்டு இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து நபரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர்.
    • கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஆட்டோ வேலுவை அழைத்து சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இன்று காலை வாலிபர் ஒருவர் நேரில் சென்றார்.

    பின்னர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அந்த நபரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் கடலூரை சேர்ந்த ஆட்டோ வேலு என்பதும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாக இருப்பதும் தெரியவந்தது. இவர் ஒரு பெண்ணிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் பணத்தை வழங்கி உள்ளார். அந்த பணத்தை திருப்பி கேட்டு உள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் பணம் தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இருந்து பணத்தை பெற்று தர வேண்டும் என தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஆட்டோ வேலுவை அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
    • இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன

    கடலூர்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத ஊழியர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் சார்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணி புரியும் அரசு பணியாளர் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் ஏராளமானோர் பணிக்கு வரவில்லை. ஆனால் அரசு அலுவலகங்கள், ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. இந்த வேலை நிறுத்தத்தில் கடலூர் மாவட்டத்தில் சுமார் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும், கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு பணியாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    • கோவிந்தராஜ் (வயது 60). ஜவுளிக் கடையில் பணி செய்து வந்தார். வடவாற்ற ங்கரை ஓரத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு கால் கழுவ சென்றார். அப்போது நிலை தடுமாறி வாய்க்காலில் தலை குப்புற விழுந்து விட்டார்.
    • இதில் மூச்சுத் திணறி இறந்து விட்டார். இதையடுத்து இன்று காலை இவரது உடல் வாய்க்கால் நீரில் மிதந்தது.

    கடலூர்:

    காட்டுமன்னா ர்கோவில் அடுத்த நாட்டார்மங்கலம் வெள்ளாலர் தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (வயது 60). ஜவுளிக் கடையில் பணி செய்து வந்தார். ஜவுளிக்கடையில் வேலையை முடித்து விட்டு நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகள் பிஸ்கட் கேட்டனர். இதனை வாங்க சைக்கிளை எடுத்துக் கொண்டு கடை வீதிக்கு சென்றார்.

    அப்போது வடவாற்ற ங்கரை ஓரத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு கால் கழுவ சென்றார். அப்போது நிலை தடுமாறி வாய்க்காலில் தலை குப்புற விழுந்து விட்டார். இதில் மூச்சுத் திணறி இறந்து விட்டார். இதையடுத்து இன்று காலை இவரது உடல் வாய்க்கால் நீரில் மிதந்தது. இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்  இத்தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கோவிந்தராஜின் உடலை மீட்டு போலீசாரிடம் ஓப்படைத்தனர் பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்து மனைக்கு அனுப்பி வைத்த காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனலட்சுமி (வயது 16). நடுவீரப்பட்டு சி.என்.பாளையம் அரசு பள்ளியில் 11 -ம் வகுப்பு படித்து வந்தார். இவர் , பஸ்சில் நின்றபடி பயணம் செய்த மாணவி தனலட்சுமி படிக்கட்டு வழியாக தவறி கீழே விழுந்தார்‌.
    • இதில் பஸ்சில் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலே மாணவி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த இடையார் குப்பம் சிறுநங்கைவாடி பலாப்பட்டு வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் அல்லி முத்து. இவரது மகள் தனலட்சுமி (வயது 16). நடுவீரப்பட்டு சி.என்.பாளையம் அரசு பள்ளியில் 11 -ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 22.6.2018 அன்று சாத்திப்பட்டு - கடலூர் செல்லும் அரசு பஸ்ஸில் ஏறி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு பஸ் கொஞ்சிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது டிரைவர் திடீரென்று பிரேக் போட்டதால், பஸ்சில் நின்றபடி பயணம் செய்த மாணவி தனலட்சுமி படிக்கட்டு வழியாக தவறி கீழே விழுந்தார். இதில் பஸ்சில் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலே மாணவி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக அவரது பெற்றோர் நஷ்ட ஈடு கேட்டு கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முக்குந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உயிரிழந்த தனலட்சுமி குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக 9 லட்சம் மற்றும் 7.5 சதவீதம் வட்டியுடன் சேர்த்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் இதுவரை நஷ்ட ஈடு வழங்கவில்லை. இதனை தொடர்ந்து நிறைவேற்ற மனு தாக்கல் செய்யப்பட்டதில், அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார். அதன்படி கடலூர் பஸ் நிலையத்தில் இருந்த விழுப்புரம் கோட்ட அரசு பஸ்சை ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    • சுப்பரமணி (வயது 60). இவர் பண்ருட்டி பஸ் நிலைய பின்புறத்தில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்தார். இவருக்கு. மனைவி, குழந்தைகள் இல்லை. இவர் பண்ருட்டி போலீஸ் லைன் 3-வது தெருவில்
    • இன்று காலை அவர் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது..

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் சுப்பரமணி (வயது 60). இவர் பண்ருட்டி பஸ் நிலைய பின்புறத்தில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி, குழந்தைகள் இல்லை. இவர் பண்ருட்டி போலீஸ் லைன் 3-வது தெருவில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.

    இந்நிலையில் இன்று காலை அவர் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது பற்றி அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன். சப்-இன்ஸ்பெக்டர்கள் ரங்கநாதன், புஷ்பராஜ், செல்வகணபதி ஆடியோ சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுப்பிரமணியின் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

    • கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
    • கடலூர் மாவட்டம் புவனகிரிைய சேர்ந்தஸ்டெல்லா மேரி. மாற்றுத்திறனாளி

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை குறித்து கோரிக்கை மனுக்களை நேரில் வந்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றத்திறனாளி திடீரென்று சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர் கடலூர் மாவட்டம் புவனகிரிைய சேர்ந்தஸ்டெல்லா மேரி. மாற்றுத்திறனாளி. பட்டதாரி என்பது தெரிய வந்தது.

    அவர் போலீசாரிடம் கூறும் போது, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதலமைச்சர் இவரது தந்தைக்கு சுய தொழில் செய்வதற்கு பெட்டிக்கடை வழங்கி உள்ளார். இதனை தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளியான நான் கடையை நடத்தி வருகிறேன்.. இந்த நிலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் அனுமதி பெற்ற பிறகு கடையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டதால் கடந்த 3 மாதமாக வருமானம் இல்லாமல் கடும் அவதி அடைந்து வருகின்றோம். மேலும் 90 வயது எனது தாயார் மிகுந்த அவதி அடைந்து வருகின்றார். ஆகையால் சாலை ஓரத்தில் உள்ள எனது பெட்டி கடைக்கு உரிய அனுமதி வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஸ்கூடெல்லா மேரி கூறினார். அப்போது உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து உரிய தீர்வு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறி போலீசார் அறிவுறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    ×