

கடலூர்:
பண்ருட்டி மாளிகம்பட்டு பஜனை கோயில் தெருவில் வசிப்பவர் செல்வம் (வயது 28). இவர் அதே ஊரில் உள்ள அய்யனார் கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு மூட்டையுடன். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த மூட்டையில் ஆற்று மணல் இருந்ததை போலீசார் பார்த்தனர். இதனைத் தொடர்ந்து ஆற்று மணலை திருடிய குற்றத்திற்காக செல்வத்தை காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர்.