search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில்புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கலெக்டர் பாலசுப்ரமணியம் தகவல்
    X

    கடலூர் மாவட்டத்தில்புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கலெக்டர் பாலசுப்ரமணியம் தகவல்

    • மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
    • தற்போதுவரை இத்திட் டத்தின் வாயிலாக முதற்கட்ட மாக 4008 மாணவிகளும், 2-ம் கட்டமாக 1956 என 5964 மாணவிகள் பயன டைந்துள்ளனர்

    கடலூர்:

    :கடலூர் கலெக்டர் பால சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது-

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் உயர்கல்வி பயி லும் அரசு பள்ளி மாணவி களின் சேர்க்கை விகிதம் மிக குறைவாக இருப்பதை அதிகரிக்கவும், பொருளா தாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ள மாணவி களுக்கு உயர்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலமாக உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் வாயி லாக மாணவிகளுக்கு உயர் கல்வி வழங்குவதால், பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் விகி தத்தை குறைத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவி களுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், மேலும் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாது காப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் நல்ல சமுதாயத்தை உரு வாக்க வழிவகை செய்யப்படு கிறது. கடலூர் மாவட்டத்தில் தற்போதுவரை இத்திட் டத்தின் வாயிலாக முதற்கட்ட மாக 4008 மாணவிகளும், 2-ம் கட்டமாக 1956 என 5964 மாணவிகள் பயன டைந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×