என் மலர்
கடலூர்
- புவனகிரியில் மது பாட்டில் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
புவனகிரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எடப்பாளையம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த அம்சாயால் (வயது 50), குரியமங்கலம் டாஸ்மாக் கடை அருகே புவனகிரி ஆதிபராநத்தம் பழனிவேல் (43) இவர்கள் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இளவேனில் புவனகிரியில் உள்ள ஒரு தனியார் ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார்.
- பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
புவனகிரி அருகே கீரப்பாளையம் அடுத்த மேல வன்னியர் மேலத்தெரு இளங்கோவன். விவசாயி. இவரது மகள் இளவேனில் (வயது 23) கல்லூரி முடித்து விட்டு புவனகிரியில் உள்ள ஒரு தனியார் ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை வயலில் வேலை செய்த அவருடைய தந்தைக்கு உணவு எடுத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாயார் சித்ரா கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன இளவேனிலை தேடி வருகின்றனர்.
- பண்ருட்டி அருகே இரும்புகளை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் பண்ருட்டி, அண்ணா கிராமம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடலூர்:
பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா உத்தரவுபடி, சிறப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு உள்ளிட்ட போலீசார் பண்ருட்டி, அண்ணா கிராமம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அண்ணா கிராமம் அரசுப்பள்ளி அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அந்தப் பகுதியில் இருந்த மின்வாரிய அலுவலகத்தில் இருந்த இரும்பு திருடியது தெரியவந்தது. மேலும் விசாரணை நடத்தியதில் கீழ்கவரபட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த உத்திரவீரன் (வயது 30) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவனிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மேலும் 2 பேர் இவருடன் சேர்ந்து இரும்பு திருடியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அண்ணா கிராமத்தைச் சேர்ந்த வினோத் குமார் (24), கீழ்கவரப்பட் டை சேர்ந்த சத்திய தாசன் (27) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 50 கிலோ இரும்பு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்னர்.
- கழிவு நீர் கால்வாயில் இரு வழிகள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் அடைப்புகள் சரி செய்யப்பட்டு வந்தது.
- பொதுமக்கள் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அங்கிருந்து அலறிடித்து ஓடினார்கள்.
கடலூர்:
கடலூரில் பாரதி சாலை உள்ளது. இந்த சாலை பிரதான சாலையாக உள்ளதால் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்தும் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. மேலும் இந்த சாலையில் போலீஸ் நிலைய, உணவகம், மருத்துவமனை, வணிக வளாகங்கள், மாநகராட்சி அலுவலகம் இயங்கி வருவதால் ஆயிரக்க ணக்கான பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்காக இந்த சாலையில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சாலையின் இரு புறமும் பொது கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால் இங்கு இயங்கி வரும் பெட்ரோல் பங்க் அருகில் இந்த கழிவு நீர் கால்வாயில் இரு வழிகள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் அடைப்புகள் சரி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலையில் கழிவுநீர் கால்வாயில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் தீயின் வேகம் அதிகரித்து கொழுந்துவிட்டு பல அடி உயரத்திற்கு தீ பிழம்பாக காட்சியளித்தது.
இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அங்கிருந்து அலறிடித்து ஓடினார்கள். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீப்பிழம்பாக எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் மீண்டும் எரிய தொடங்கியது. இதனைப் பார்த்த தீயணைப்பு வீரர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததை அகற்றி, அதன் பிறகு தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்ட லமாக காட்சியளித்தது. கால்வாயில் எப்படி தீ எரிய தொடங்கியது என தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொது மக்கள் ஆச்சரி யத்துடன், பதற்றத்துடன் பார்த்தனர்.
இதில் கழிவுநீர் கால்வாய் சரியான முறையில் அடைப்புகளை அகற்றாத தால் ஒரு விதமான வாய்வு ஏற்பட்டு அதன் மூலம் தீ ஏற்பட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்ற னர். இந்த நிலையில் கடலூர் பிரதான கிழக்கு கடற்கரை சாலையான பாரதி சாலையில் பெட்ரோல் பங்க் அருகே திடீரென்று கால்வாயில் தீ விபத்து ஏற்பட்டு தீ பிழம்பாக மாறிய சம்ப வத்தால் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.இது போன்ற சம்பவங்கள் வருங்காலங்க ளில் ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள் உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.
- இனிப்பு சுவை கூட்ட எவ்விதமான வேதிப்பொருட்களை யும் சேர்க்கக்கூடாது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் பொது மக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க, பலவித குளிர்பா னங்கள் மற்றும் பழச்சாறு களை அருந்துகின்றனர். இதனால் மாவட்டம் முழுவதும் சாலையோர மற்றும் நிரந்தர குளிர்பான கடைகள் பரவலாக அதி கரித்துள்ளது. இந்த தருணத்தில் சாலையோர மற்றும் நிரந்தர வணிகம் செய்யும் வணிகர்கள், பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.
சாலையோர உணவு வணிகர்கள் உள்பட அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின்படி உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம். குளிர்பா னங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொரு ட்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவு பொருட்களாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக பயன்படுத் தப்படும் குடிநீர் தரச்சான்று மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற குடிநீராக இருத்தல் அவசியம். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலான செயற்கை வண்ணங்களை சேர்க்கக் கூடாது. நுகர்வோருக்கு வழங்கும் முன்னர் அதன் காலாவதி நாளை உறுதிப்படுத்திட வேண்டும்.
பழச்சாறு தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் அழுகிய பழங்களையும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களையும் பயன்படுத்தக்கூடாது. பழச்சாறு பிழியும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் சுத்தத்தை பராமரித்தல் வேண்டும். எந்தவிதமான செயற்கை வண்ணங்களையும் இனிப்பு சுவை கூட்ட எவ்வித மான வேதிப்பொருட்களை யும் சேர்க்கக்கூடாது. பழச்சாற்றில் சேர்க்கப்படும் ஐஸ் கட்டிகளை உணவு பாது காப்பு உரிமம் பெற்று பாது காப்பான நீரில் தயாரிக்கப் பட்ட நிறுவனங்களிடம் இருந்து வாங்குதல் வேண்டும். முறையான மற்றும் தொடர்ச்சியான பூச்சி தடுப்பு முறைகளை பயன்படுத்தி பூச்சிகள் மொய்ப்பதை தவிர்த்தல் வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி கோப்பைக்களில் பழச்சாறுகளை வழங்காமல் அரசால் அனுமதிக்கப்பட்ட கோப்பைக்களில் மட்டுமே வழங்க வேண்டும். குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அடைக்கப்பட்ட குடிநீரை வாங்கும்போது வணிகர்கள் தரக்குறியீடு, உணவு பாதுகாப்பு உரிமம், கொள்கலன்களின் வாய்ப்புறம் சீலிட்டு மூடி யிருத்தல், காலாவதி நாள் போன்றவற்றை உறுதி செய்திட வேண்டும். இத்த கைய வழிகாட்டுதல்களை கடைபிடித்து பொது மக்களுக்கு தரமான, பாது காப்பான குளிர்பானங்கள், பழச்சாறுகளை வழங்க கடலூர் மாவட்ட நிர்வாகம் உணவு வணிகர்களை கேட்டுக்கொள்கிறது. பொது மக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் இருந்தால் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு 04142-221081 அல்லது 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்க லாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- ரமேஷ் கடந்த 6 மாத காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
- ரமேஷை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நல்லூர் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (38),டெய்லர். இவர்திருமணம்ஆனவர். மனைவி, மற்றும் மகள் உள்ளனர். இவர் கடந்த 6 மாத காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இவர் கடந்த 26-ந் தேதிவயிற்று வலி தாங்காமல் வீட்டில் புடவை துணியால் தூக்கு போட்டுக் கொண்டார்.
இவரது அலறல்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை ரமேஷ் இறந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் -இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ருட்டி டி.எஸ்.பி. சிறப்பு படைபோலீசார் பண்ருட்டி அண்ணா கிராமம், நடுவீரப்பட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- மோட்டார் சைக்கிளில் 2 பேர் சாராயம் கடத்திவந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது பாகூர் பரிக்கல்பட்டு கார்த்தி, மணிவேல் என தெரியவந்தது.
பண்ருட்டி:
பண்ருட்டி டி.எஸ்.பி. சிறப்பு படைபோலீசார் பண்ருட்டி அண்ணா கிராமம், நடுவீரப்பட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் சாராயம் கடத்திவந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது புதுவை மாநிலம் பாகூர் பரிக்கல்பட்டு கார்த்தி (வயது 24) மணிவேல் (24) என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இவர்களை கைது செய்து 100 பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்து கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மாளிகைமேடு ஊராட்சியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரியசித்தேரி உள்ளது.
- ஒன்றிய குழு அலுவலகம் முன்பு அமர்ந்து கணவர் தென்னரசுடன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அண்ணா கிராமம் ஒன்றியம் மாளிகைமேடு ஊராட்சியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரியசித்தேரி உள்ளது. இந்த ஏரி மாளிகை மேடு ஊராட்சிக்கு சொந்தமானது. இங்குள்ள கருவேல மரங்களை அரசு விதிகளுக்கு உட்பட்டுஏலம் நடத்திமரங்களைவெட்டி அகற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து இருந்தார். ஏலம் விடாமலே ஏரியிலிருந்து மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக தெரிய வந்தது.இதனை தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலரும் ஒன்றிய குழு துணை தலைவருமான ஜான்சி ராணி தென்னரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி இருந்தார். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை அண்ணா கிராமம் ஒன்றிய குழு அலுவலகம் முன்பு அமர்ந்து கணவர் தென்னரசுடன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்ததும் துணை வட்டார வளர்ச்சிஅலுவலர் திருநாவுக்கரசு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய குழு துணை தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மரங்களை வெட்டி கடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்என்று அதிகாரிகளிடம் கூறினார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- வீரலட்சுமி அங்குள்ள ஸ்விட்ச் போடும் போது மின் கசிவு ஏற்பட்டதில் வீரலட்சுமி தூக்கி வீசப்பட்டார்.
- மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வீரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர்:
கடலூர் ஓட்டேரி சேர்ந்தவர் மதன் (வயது 36). இவரது மனைவி வீரலட்சுமி (35). இவர்கள் 2 பேரும் ஓட்டேரி பகுதியில் உள்ள மாட்டு பண்ணையில் கூலி வேலை செய்து வந்தனர். இன்று காலை வீரலட்சுமி அங்குள்ள ஸ்விட்ச் போடும் போது மின் கசிவு ஏற்பட்டதில் வீரலட்சுமி தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் வீரலட்சுமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் வீரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மீனவ கிராமத்தினருக்குள் மோதல் ஏற்பட்ட காரணத்தினால் அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.
- கடலூர் நீதிமன்றத்தில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவ கிராமத்தினருக்குள் மோதல் ஏற்பட்ட காரணத்தினால் அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் நேற்று கடலூர் நீதிமன்றத்தில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் இடையே பெரும் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரின் நேற்று முன்தினம் முதல் கடலூர் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், தாழங்குடா, கடலூர் துறைமுகம் மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் போலீசாருக்கும், மீனவர்களுக்கும் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பதட்ட நிலை காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் மீனவ கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக மீனவர் கிராம பகுதிகளில் பொதுமக்கள் கும்பலாக கூடுவதற்கு போலீசார் அனுமதி அளிக்காமல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆற்று கரையோரம் மற்றும் துறைமுகம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுளுக்கு போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
- 13 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
கடலூர்:
மாநில அளவில் 13 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி விருதுநகரில் வருகிற 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக கடலூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
இதற்கு மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் விஜய சுந்தரம் தலைமை தாங்கினார். தேசிய விளையாட்டு வீரர் தங்கதுரை, மூத்த விளையாட்டு வீரர்கள் நெடுஞ்செழியன், அமீர்ஜான், நடராஜன், அப்துல்லா, தயாளன், தமிழ்வாணன், முகமது கனி, பொன்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா கலந்து கொண்டு வீரர்கள் தேர்வை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அதாவது 1.1.2010 -ந்தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் மட்டும் பங்கேற்க அனுமதி க்கப்பட்டனர். தொடர்ந்து தேர்வுக்கு வந்திருந்த மாணவ- மாணவிகளின் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகல் சரிபார்க்க ப்பட்டதும் வீரர்கள் தேர்வு செய்ய ப்பட்டனர். இதில் ஆண்கள் அணிக்கு 15 பேரும், பெண்கள் அணிக்கு 15 பேரும் என மொத்தம் 30 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாணவர்கள் விருதுநகரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
நிகழ்ச்சியில் கடலூர் அசோசியேசன் பொருளாளர் பாலமுரளி, இணைச் செயலாளர் சகாய செல்வம், விளையாட்டு பயிற்சியாளர்கள் மோகனசந்திரன், வினோ த்குமார், செங்குட்டுவன், முத்துராமன், மணிகண்டன், பாலமுருகன், பிரபு, பாலாஜி, விவேக், பழனி, மணிவாசகம், இளவரசன், சிவரஞ்சனி, யுவஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணைச் செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
- தரம் பிரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினர்.
- நடவடிக்கையில் ஈடுபடாததால் பல்வேறு குறைபாடுகள் இருந்து வந்தது.
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட துறைமுகம் பகுதியில் இருந்து வரும் துப்புரவு ஊழியர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா துறைமுகம் பகுதியில் குப்பைகள் சரியான முறையில் அகற்றப்படுகிறதா? கால்வாய் சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறதா? பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் கிடைக்கிறதா? என்பதனை திடீரென்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது துப்புரவு ஊழியர்கள் குப்பை களை அகற்றியபோது அதனை பாதுகாப்பாக எடுத்துச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டி பாளையம் சாலை, தங்கராஜ் நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பொதுக் குழாயில் குடிநீர் வருகிறதா? என்பதனை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீரை குடித்து ஆய்வு செய்தார். இதில் பொதுமக்கள் குடிப்பதற்கு ஏதுவாக குடிநீர் இருந்தது தெரிய வந்தது.
மேலும் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா பொதுமக்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பேரில் தற்போது ஒரு கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் அயன் பில்டர் பெட் என்பதனை பொருத்தி பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. மேலும் 10 ஆண்டு கால ஆட்சி காலத்தில் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடாததால் பல்வேறு குறைபாடுகள் இருந்து வந்தது. தற்போது அந்த குறைபாடுகளை நீக்கி பொது மக்களுக்கு தரமான குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் குடிநீர் கிடைக்க பெறாத பகுதிகளில் அந்தந்த கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் மூலமாக வாகனங்கள் மூலம் இலவச குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. ஆகையால் பொதுமக்கள் இந்த குடிநீரை முறையாக பயன்படுத்த வேண்டும். காசு கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பாடாது என தெரிவித்தார். அப்போது மாநகர திமுக செயலாளர் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, மாநகராட்சி கவுன்சிலர்கள் பாலசுந்தர், விஜயலட்சுமி செந்தில், கவிதா ரகுராம், மாநகராட்சி அலுவலர்கள் நாகராஜன், தாமோதரன், கார்த்திக் மற்றும் பலர் உடன் இருந்தனர்.






