search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tip-Top Asami"

    • வயதான இரு தம்பதியர்கள் தர்மம் எடுத்து சேர்ந்த பணத்தையும், சில்லறை காசுகளையும் செட்டியாபத்து ரோட்டில் உள்ள ஒரு பஸ் நிறுத்த நிழற்குடையில் வைத்து மாலையில் எண்ணிக் கொண்டிருந்தனர்.
    • அப்போது அங்கு வந்த டிப்டாப் ஆசாமி என்னிடம் இருக்கும் கருப்பட்டி கொட்டானை வைத்துக் கொள்ளுங்கள் நான் போய் சில்லறையை கொடுத்து விட்டு பணத்தை வாங்கிக் கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.

    உடன்குடி:

    உடன்குடியில் நேற்று முன்தினம் வழக்கமாக நடைபெறும் வாரச்சந்தை நடந்தது. இதில் பல ஊர்களில் இருந்து தர்மம் எடுக்க வருவார்கள். அப்படி வந்த வயதான இரு தம்பதியர்கள் காலையில் வந்து உடன்குடி பஜார் வீதிகள் மற்றும் வாரச்சந்தையில் கடை கடையாக தர்மம் எடுத்து சேர்ந்த பணத்தை யும், சில்லறை காசு களையும் செட்டியாபத்து ரோட்டில் உள்ள ஒரு பஸ் நிறுத்த நிழற்குடையில் வைத்து மாலையில் எண்ணிக் கொண்டி ருந்தனர்.

    டிப்- டாப் ஆசாமி

    அப்போது ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த டிப்டாப் ஆசாமி, சில்லரைகாசு வேணும் எவ்வளவு இருக்கிறது என்று கேட்டார்? தம்பதியினர் ரூ.1055 இருப்பதாக சொன்னார்கள். என்னிடம் இருக்கும் கருப்பட்டி கொட்டானை வைத்துக் கொள்ளுங்கள் நான் போய் சில்லறையை கொடுத்து விட்டு பணத்தை வாங்கிக் கொண்டு வருகிறேன். அதுவரை இந்த கருப்பட்டி கொட்டான் உங்களிடம் இருக்கட்டும் இதன் விலை ரூ.3000 ஆகும் என்று சொல்லிவிட்டு சில்லரையை வாங்கி சென்றுவிட்டார். மாலை 5 மணிக்கு சென்ற ஆசாமி இரவு 7 மணி வரை காத்திருந்து வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த தம்பதியினர் கருப்பட்டி கொட்டானை பிரித்து பார்க்கும் போது அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே கற்கள் மற்றும் கழிவு பொருட்கள் இருந்தது. அதற்கு பின் தான் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பது தெரிந்து யாரிடம் போய் சொல்வது, யாரிடம் கேட்பது என வயதான தம்பதி புலம்பிக்கொண்டே இருந்தனர். நூதனமாக நடந்த மோசடி அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

    • மளிகை கடைக்கு இன்று மதியம் டிப்- டாப் ஆசாமி வந்தார்.
    • கல்லா பெட்டியில் இருந்த ரூ. 40 ஆயிரத்தை திருடி விட்டு தப்பி சென்று விட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி பொன்னுசாமி தெருவில் மளிகை கடை உள்ளது. இந்த மளிகை கடைக்கு இன்று மதியம் டிப்- டாப் ஆசாமி வந்தார்.அவர் பூண்டு விலை என்ன என்று கேட்டார். கடைக்காரர் பூண்டுவை எடுக்க உள்ளே சென்ற போது டிப்- டாப் ஆசாமி கடையின் கல்லா பெட்டியில் இருந்த ரூ. 40 ஆயிரத்தை திருடி விட்டு தப்பி சென்று விட்டார். இது குறித்து மளிகை கடை உரிமையாளர் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ. 40 ஆயிரத்தை திருடி சென்ற டிப்-டாப் ஆசாமியை தேடி வருகிறார்கள்.

    ×