search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில்   தொழிலாளி மர்ம சாவு
    X

    பண்ருட்டியில் தொழிலாளி மர்ம சாவு

    • சிவகுமார் மதுப்பழக்கம் உள்ள இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே தொரப்பாடி பேரூராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் கூலி தொழிலாளி. மதுப்பழக்கம் உள்ள இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். பகல் 2 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமாரை எழுப்பினர். அப்போது அவர் சுய நினைவு இல்லாமல் கிடந்தார். உடனே அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×