என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் கடத்தல்
- அம்மு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை செய்த வருகிறார்.
- பஸ் ஊழியர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி அம்முவை கடத்தியதாக கூறியுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஓறையூர் கிராமத்தை சேர்ந்தவர் மன்னாதன் இவரதுமகள் அம்மு (22) இவர் பண்ருட்டி பஸ் நிலையத்தின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை செய்த வருகிறார்.
இவர்,நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடுதிரும்பவில்லை பல இடங்களில்தே டி எங்கும்கிடைக்காதால்.இவரது தந்தை மன்னாதன் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் புகாரில் பண்ருட்டி அடுத்த கனிசபாக்கத்தை சேர்ந்தபஸ் ஊழியர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி அம்முவை கடத்தியதாக கூறியுள்ளார். புகார் குறித்துபுதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்வழக்கு பதிவு செய்து காணாமல் போன தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை வலை வீசி தேடி வருகிறார்.
Next Story






