என் மலர்
கடலூர்
- குளத்தில் குளிக்க சென்றபோது திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு, தண்ணீரில் விழுந்து மயக்க நிலையில் இருந்தார்.
- இது குறித்து தூக்கணாம்பக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:-
கடலூர் அருகே திருப்பணாம்பாக்கம் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 32). அதே பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குளிக்க சென்றபோது திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு, தண்ணீரில் விழுந்து மயக்க நிலையில் இருந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் இவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தூக்கணாம்பக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ருட்டியில் மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர்:
பண்ருட்டி புதுப்பேட்டை பகுதியில் டி.எஸ்.பி சபியு ல்லா உத்தரவி ன்பேரில் இன்ஸ்பெக்டர்(பொ)நந்தகுமார் தலைமையில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்ன எலந்தம்பட்டி ரோட்டு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 65), இவரது மகன் பாண்டியன் (31) ஆகியோர் மது, சாரா யம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து இவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 20 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று புதுப்பே ட்டை பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கலா(55) வீட்டுதோட்டத்தில் வைத்து சாராயம் விற்பனை செய்து வந்தார். இதை பார்த்த அப்பகுதியில் ரோந்து சென்ற பண்ருட்டி போலீசார் கலாவை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்ய ப்பட்டது.
- டிஜிட்டல் பேனர்கட்டும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பேனர் வைப்பதற்கு அனுமதி இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.
கடலூர்:
பண்ருட்டி நகரில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி டி.எஸ்.பி.சபி யுல்லா தலைமையில் பண்ருட்டி போலீஸ் நிலை யத்தில் நடந்தது. கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் பண்ருட்டி கண்ணன், புதுப்பேட்டை நந்தகுமார் மற்றும் அனைத்துகட்சி பிர முகர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், டிஜிட்டல் பேனர்கட்டும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் லிங்ரோடு ஜங்ஷன், தட்டாஞ்சாவடி பஸ்நிறுத்தம்,யூனியன் ஆபீஸ் பஸ் நிறுத்தம் ஆகிய 3 இடங்களில் மட்டும் 10 -க்கு10 அடி அளவுள்ள டிஜிட்டல் பேனர்களை போலீஸ் அனுமதி பெற்று வைக்க வேண்டும் என்றும்இந்த இடங்களைத் தவிர மற்ற இடங்களில் பேனர் வைப்பதற்கு அனுமதி இல்லை என்றும்முடிவு செய்யப்பட்டது.
- போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா கலந்துகொண்டு நூலகத்துடன்கூடிய வரவேற்பறையை திறந்து வைத்து பேசினார்.
- இந்த புதிய நூலகத்தில் பயனுள்ள புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் நிலையத்தில்புகார் தாரர்கள் மற்றும் பொது மக்கள் காத்திருப்பதற்காக புதிதாக நுாலகத்துடன் கூடிய வரவேற்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதன்திறப்பு விழா நடந்தது. இதில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா கலந்துகொண்டு நூலகத்துடன்கூடிய வரவேற்பறையை திறந்து வைத்து பேசினார்.
இதற்கான ஏற்பாடுகளை பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர். திறப்பு விழாவில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரண்யா, தங்கவேலு, புஷ்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த புதிய நூலகத்தில் பயனுள்ள புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.
- கலெக்டர் வளர்ச்சி திட்ட பணிகள் என்னென்ன நடைபெற்று உள்ளது என்பதனை அதிகாரிகளிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- பணிகளுக்கான தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் கலெக்டராக அருண் தம்பராஜ் நேற்று முன்தினம் பதவி யேற்றுக் கொண்டார். இந்த நிலை யில் இன்று காலை கடலூர் மாநகராட்சி அலுவல கத்தில் கலெக்டர் அருள் தம்புராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி அலுவல கத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை யில் ஆய்வு கூட்டம் நடை பெற்றது. மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் கிருஷ்ண மூர்த்தி, பொறியாளர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ், கடலூர் மாநகராட்சியில் குடிநீர், சாலை, தூய்மை பணிகள், தெரு மின்விளக்கு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் என்னென்ன நடைபெற்று உள்ளது என்பதனை அதி காரிகளிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஒவ்வொரு திட்டப் பணிகள் குறித்தும் அந்த பணி நடைபெறும் மாதங்கள், எவ்வளவு நிதி ஒதுக்கீடு, தற்போது பணிகளின் நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக கேட்டறிந்தார். அப்போது சென்னையில் உள்ள சாலைகள் போல் கடலூர் மாநகராட்சியில் உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும். மக்களை கண் கவர கூடிய தெரு மின்விளக்குகள், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக பார்க்கிங் வசதி, சாலைகளில் முகம் சுளிக்கும் வகையில் ஒட்டப்படும் போஸ்டர் மற்றும் பேனர்களை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வரும் பணிகளை உடனுக்கு டன் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
சாலை, குடிநீர் போன்ற அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை விரைந்து முடித்து மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாத வகை யில் அனைத்து நடவடிக்கை களும் மேற்கொள்ள வேண்டும். கடலூர் மாநகராட்சியில் நிர்ணயிக்கப்படும் அனைத்து பணிகளையும் அந்தந்த கால அவகா சத்திற்குள் தரமாக கட்ட மைத்து முடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது மட்டும் இன்றி பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்த தாரர்களுக்கு உடனுக்குடன் அந்தந்த பணிகளுக்கான தொகையை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இது மட்டும் இன்றி மாநகராட்சி முழுவதும் அனைத்து இடங்களிலும் குப்பைகள் தேங்காத வகையில் துப்புரவு பணி யாளர்களை கொண்டு குப்பைகளை அகற்றி தூய்மையான மாநகராட்சி யாக வைத்திருக்க நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சியில் நடை பெறும் பணிகள் தொய்வு ஏற்படாத வகையி லும், பணிகள் காலதாம தமானால் அதற்கான காரணங்கள் தெரிவிக்காத வகையில் அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தி அடையும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகேட்டுக் கொண்டார். இதில் மாநக ராட்சி கவுன்சிலர்கள், அனைத்துதுறை அதிகாரி கள் கலந்து கொண்டனர்.
- கணவன் சிவராமன் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வழக்குநிலையில் உள்ளது.
- சிவராமன் உட்பட 8 பேர் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் அடுத்த ஏ.புதூர் கிராமத்தை சேர்ந்த வர் சிவராமன். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழி யராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி (31). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்குஒரு மகன் உள்ளான். இவர் களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். கணவன் சிவராமன் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வழக்குநிலையில் உள்ளது.
இந்நிலையில் சிவராமன் தனது உறவினர் பெண்ணான சிறு தொண்ட மா தேவியைசேர்ந்த சூர்யா வை (30 )கடந்த சில நாட்க ளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது விவாகரத்து பெறாமல் 2-வது திருமணம் செய்து கொண்ட கணவர் சிவராமன் (35), அவரது தந்தை மூர்த்தி ராமன், தாயார் மகாலட்சுமி (55), அண்ணன் தணிகைவேல் (40),உள்ளிட்ட 8 பேர் மீது பண்ருட்டி மகளிர்போலீஸ் நிலையத்தில் பிரியதர்ஷினி புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி, பிரியதர்ஷினியின் கணவன் சிவராமன் உட்பட 8 பேர் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கடந்த 24-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகையுடன் வழங்கப்படும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது-
கடலூர் மாவட்டத்தில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கடலூர், கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், மங்களுர் மற்றும் நெய்வேலி தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023-ம் ஆண்டு பயிற்சியா ளர்கள் சேர்க்கை இணை யவழிக் கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது. இதற்காக இணைதளம் வாயிலாக கடந்த 24-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவ, மாணவியர் இந்ந வாய்ப்பினை பயன்படுத்தி அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்ந்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மாணவர்களின் விண்ண ப்பங்கள் அடிப்படையில் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இணையதளத்தில் வெளியிட ப்படும். தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவ ர்களுக்கு மாதந்தோரும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு (மின்சாரப்பணியாளர் மற்றும் பொருத்துனர் பிரிவு) சுய வேலை வாய்ப்பு செய்திடும் கைகருவிகள் அடங்கிய தொகுப்பு இலவ சமாக வழங்கப்படுகிறது. மாறிவரும் தொழிற்சா லைகளின் நவீன தொழில்நு ட்பத்திற்கு ஏற்றவாறு முன்னனி தனியார் நிறுவன ங்ளுடன் இணைந்து தொழிற்நுட்ப மையங்களாக உயர்த்த ப்பட்டு பயிற்சியளிக்க ப்படுகிறது. மேலும் பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியா ளர்களுக்கு பிரபல தொழில் நிறுவன ங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 07.06.2023 ஆகும். இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
- நேற்று மாலை குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன்மழை பெய்தது.
- மரங்கள் முறிந்து மின்கம்பத்தில் சாய்ந்ததால் பல்வேறு ழுலு பல இடங்களில் மின்கம்பம் உடைந்தது இதனால் மின்தடை ஏற்பட்டது
கடலூர்:
கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் கடலூர் மாவட்டம் முழுதும் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன்மழை பெய்தது. பலத்த சூறாவளி காற்றும் வீசியது. இதில் நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இருந்தவேப்பமரம், தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் முறிந்து மின்கம்பத்தில் சாய்ந்ததால் பல்வேறு இடங்களில் மின்கம்பம் உடைந்தது இதனால் மின்தடை ஏற்பட்டது .
இதே போல குறிஞ்சிப்பாடியை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில் மேச்சலில் இருந்த கறவை மாடு மீது மின்னல் தாக்கியது. அதில் சம்பவ இடத்திலேயே அந்த மாடு உயிரிழந்தது. இதனை அறிந்த மாட்டின் உரிமையாளர் மூதாட்டி லட்சுமி என்பவர் கதறி அழுதது பலரையும் சோகத்தில் அழுத்தியது. சூறாவளிக்காற்று மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்த மழை போன்றவற்றால் சற்று குளுமையான சூழல் நிலவியது.
- சிதம்பரத்தில் தீட்சிதர்களின் குழந்தைகள் திருமண புகைப்படம் சமூக வலலைதளங்களில் பரவி வருகிறது.
- கடந்த 2 நாட்களுக்கு முன் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், சிதம்பரம் வந்து விசாரணை மேற்கொண்டார்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்று வருவதாக புகார் வந்தது.
இதனை தொடர்ந்து குழந்தை திருமணங்கள் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், சிதம்பரம் வந்து விசாரணை மேற்கொண்டார்.
முதலில் நடராஜர் கோவிலுக்கு சென்று அங்கு தீட்சிதர்களிடம் குழந்தைகள் திருமணம் பற்றி விசாரணை செய்தார்.
பின்னர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சென்று இந்த வழக்கு சம்மந்தமாக அறிக்கை கேட்டார். குழந்தைகள் திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் வீடுகளுக்கும் சென்று விசாரைண மேற்கொண்டார்.
இந்த நிலையில் தீட்சிதர் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தகராறு ஏற்பட்டு அங்கு இருந்த மர சட்டத்தினால் பன்னீரை, குமார்கடுமையாக தாக்கி உள்ளார்.
- பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்
கடலூர்:
பண்ருட்டி அடுத்த கந்தன்பாளையத்தை சேர்ந்தவர் பன்னீர் (வயது 50).மீன் வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் குமார் என்ற சிவகுமார்(38)ஆட்டோ டிரைவர். கடந்தாண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி குமார் மனைவி வீட்டு தோட்டத்தில் துணி துவைத்துக் கொண்டிருக்கும் போது யாரோ எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது.இதனால்தெருவில் நின்றுகொண்டுகு மார்திட்டிஉள்ளார் அப்போது அங்கு வந்த மீன் வியாரி பன்னீர் இதை தட்டி கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு அங்கு இருந்த மர சட்டத்தினால் பன்னீரை, குமார்கடுமையாக தாக்கி உள்ளார். படுகாயத்துடன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பன்னீர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் .இது குறித்து பண்ருட்டிபோலீசார் வழக்குப திவுசெய்துத லைம றைவான கொலையாளி குமாரை வலை வீசி தேடி வந்தனர்.
இதற்கிடையில்நி லுவையில் உள்ள பழையவழக்குகளை துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பண்ருட்டி போலீசாருக்கு உத்தரவிட்டார் இதனை தொடர்ந்துபண்ருட்டி துணை ேபாலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர்தங்கேவல் போலீசார்ஆ னந்த்,ராஜி,கணேச மூர்த்திஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் இந்த வழக்கு விசாரணையை பல்வேறு கோணங்களில்நடத்தி தலைமறைவாக இருந்த கொலையாளி குமார் என்கின்ற சிவகுமாரை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்
- சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
- வாகன ஓட்டைகளின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டு வருகின்றது.
கடலூர்:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த மே 4 -ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக அனல் காற்று கடுமையாக வீசி வருகின்றது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் புயல் ஏற்பட்ட காரணத்தினால் கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக ஆங்காங்கே பயிர் வகைகள் நாசமாயின. இருந்த போதிலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் வெயிலின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து காண ப்பட்டு வரும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி வருகிறது. இதில் கடந்த மே 19-ந்தேதி மற்றும் இரண்டு நாட்களாக தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி உள்ளது.
இதன் காரணமாக வழக்கத்தை விட அதிக அளவில் அனல் காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்கு பழச்சாறுகள், பழ வகைகள், குளிர்பானங்கள், இளநீர், நுங்கு ஆகியவற்றை சாப்பிட்டு அவைகளின் தாக்கத்தை குறைத்து வருகின்றனர். இது மட்டுமின்றி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து வருவதையும் காண முடிந்தது. இதன் காரணமாக வழக்கமான சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டைகளின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டு வருகின்றது. தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் சதம் அடித்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து தாக்கத்தால் அவதி அடைந்து வருவது காண முடிந்தது. ஆகையால் பொதுமக்கள் உணவு வகைகளை பாதுகாப்பாக எடுத்து தேவையின்றி வெளியில் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்த க்கதாகும்.
- ஜோதிகாவிற்கு கடந்த ஏப்ரல் மாதம் 24 -ந் தேதி திருமணம் நடைபெற்றது.
- இளம் பெண்காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடலூர்:
கடலூர் சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 33). இவருக்கும் ஜோதிகா (வயது 23) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 24 -ந் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆன நிலையில், சம்பவத்தன்று சபரிநாதன் வேலை காரணமாக சென்னைக்கு சென்றார். பின்னர் தனது வேலையை முடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார்.
அப்போது அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிலிருந்த ஜோதிகாவை திடீரென்று காணவில்லை. இதனை தொடர்ந்து சபரிநாதன் தனது மனைவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் திருமணமாகி ஒரு மாதத்தில் இளம் பெண்காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது






