என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விருத்தாசலம் அருகே வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற வாலிபர் தூக்கில் பிணமாக மீட்பு
- கோயம்புத்தூரில் உள்ள ஒரு கடையில் வெல்டிங் வேலை செய்து வந்தார்.
- அந்த வழியாக சென்றவர்கள் பார்த்த அதிர்ச்சியடைந்தனர்.
கடலூர்:
விருத்தாசலம் அருகே விஜயமாநகரத்தை சேர்ந்த வர் வெங்கடேசன். இவரது மகன் சுகன்ராஜ் (வயது 23). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கடையில் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று விஜயமாநகரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். இதனையடுத்து சுகன்ராஜ் விஜயமாநகரத்தில் இருந்து கோவைக்கு நேற்று இரவு சென்றார்.
இந்நிலையில் இன்று காலை விஜயமாநகரம் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள ஒரு மரத்தில் சுகன்ராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்த அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மங்கலம் பேட்டை போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுகன்ராசின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து சுகன்ராசை யாரேனும் கொலை செய்து தூக்கில் பிணமாக தொங்க விட்ட னரா? அல்லது வேறு யேதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்