புவனகிரி அருகே பெண்ணை தாக்கி மானபங்கபடுத்திய வாலிபர் கைது

பாரதிதாசனின் மனைவி புவனிகிரி போலீசில் புகார் செய்தார்.புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதிதாசனை கைது செய்தனர்.
புவனகிரி அருகே பெண்ணை தாக்கி மானபங்கபடுத்திய வாலிபர் கைது
Published on

கடலூர்:

புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு பகுதியை சேர்ந்தவர் 31 வயது பெண், அதே பகுதியை சேர்ந்தவர் பாரதிதாசன்(37). இவர்கள் இருவருக்கும் இடையில் நீண்டநாட்களாக கள்ளதொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த பாரதிதாசனின் மனைவி இதுகுறித்து புவனிகிரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் புவனகிரி போலிசார் அந்த பெண்ணையும், பாரதிதாசனையும் அழைத்து இருவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று பாரதிதாசன் அந்த பெண் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் பாரதிதாசன் அந்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி அவரை தாக்கி மானபங்கம் படுத்தியுள்ளார். இதை தடுக்க வந்த பெண்ணின் கணவர் நிர்மல்ராஜையும் பாரதிதாசன் தாக்கி உள்ளார். இதுகுறித்து அந்த பெண் புவனகிரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதிதாசனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com