search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே   போலீஸ் சப் -இன்ஸ்பெக்டரை கத்தியால்  வெட்ட முயன்ற 2 வாலிபர்கள் கைது
    X

    கடலூர் அருகே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்ட முயன்ற 2 வாலிபர்கள் கைது

    • கடலூர் அருகே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்ட முயன்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் 2 வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த புதுக்கடை பகுதியில் 2 வாலிபர்கள் கையில் கத்தி வைத்துக் கொண்டு அனைவரையும் மிரட்டிக்கொண்டு இருந்ததாக ரெட்டிச்சாவடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் 2 வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவரை பணி செய்ய விடாமல் தடுத்து அவர்கள் வைத்திருந்த கத்தியால் வெட்ட முயன்றனர்.

    சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் சுதாரித்துக் கொண்டு 2 வாலிபர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டார். இதில் அவர்கள் கடலூர் செல்லஞ்சேரியை சேர்ந்த தேவா ( 26), மரக்காணம் கூனிமேட்டை சேர்ந்த சுமன் (27) என்பது தெரியவந்தது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து தேவா மற்றும் சுமன் ஆகியோரை கைது செய்தனர். சப்- இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்ட முயன்ற சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×