என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • சின்னியம்பாளையம் - நீலாம்பூர் வரை உயர்மட்ட சாலை நீட்டிக்கப்படும்.
    • மனித - விலங்கு மோதல் தடுக்க ரூ.7 கோடி மதிப்பில் யானைகள் உள்ளே வராத அளவிற்கு வேலி அமைக்கப்படும்.

    கோவை மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடியில் மாபெரும் நூலகத்திற்கும், அறிவியல் மையத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் கூறியதாவது:

    * தங்க நகை வியாபாரிகள் பல கோரிக்கைகளை வைத்துள்ளனர். ரூ.126 கோடி செலவில் தங்க நகை உற்பத்திக்கு தொழில் வளாகம் அமைக்கப்படும். ஏராளமானோர் இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

    * கோவைக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது திமுக அரசு.

    * கோவை கிரிக்கெட் மைதானம் அமைக்க விரைவில் பணிகள் தொடங்கும்.

    * கோவையில் புதிய தகவல் தொழில் நுட்ப மையம் அமைக்கப்படும். கோவை வளர்ச்சியில் புதிய மைல் கல்லாக தகவல் தொழில்நுட்ப மையம் அமையும்.

    * சின்னியம்பாளையம் - நீலாம்பூர் வரை உயர்மட்ட சாலை நீட்டிக்கப்படும்.

    * ரூ.26 கோடி செலவில் கூட்டுக்குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும்.

    * ரூ.200 கோடி செலவில் மண் சாலைகள் தார் சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.

    * மனித - விலங்கு மோதல் தடுக்க ரூ.7 கோடி மதிப்பில் யானைகள் உள்ளே வராத அளவிற்கு வேலி அமைக்கப்படும்.

    * நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக அரசு.

    * நாட்டின் 2வது பொருளாதார மாநிலம் தமிழ்நாடு. பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

    * வட மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி தெரியும் என்று கூறினார்.

    • கோவை நூலகம் கம்பீரமாக மிகச்சிறப்பாக அமையும்.
    • கோவைக்கு அரசு திட்டங்களை செயல்படுத்த கம்பேக் கொடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி.

    கோவை மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடியில் மாபெரும் நூலகத்திற்கும், அறிவியல் மையத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் கூறியதாவது:

    * கோவையில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பில் நூலகம் அமைய உள்ளது.

    * கோவை நூலகம் கம்பீரமாக மிகச்சிறப்பாக அமையும்.

    * மதுரை நூலகத்தை பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.

    * கோவை நூலகம் 2026ம் ஆண்டு திறக்கப்படும்.

    * கோவையில் பெரியார் பெயரில் நூலகம் அமைவது தான் பொருத்தமாக இருக்கும்.

    * மாணவர் சமுதாயத்தை பார்க்கும்போது ஆற்றல் ஏற்படுகிறது.

    * கோவை மாவட்டத்தில் 3 முறை நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன்.

    * கோவைக்கு அரசு திட்டங்களை செயல்படுத்த கம்பேக் கொடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி. கோவைக்கு சிறப்பான திட்டங்களை செய்ய உள்ளார்.

    * தடைகளை உடைத்து மீண்டு வந்திருக்கிறார் செந்தில் பாலாஜி என்று கூறினார்.

    • போத்தனூரில் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.
    • மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை மக்களின் வரவேற்பின் மூலம் தெரிந்து கொண்டேன் என்றார்.

    கோவை.

    2 நாள் பயணமாக கோவை வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க.,வினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விளாங்குறிச்சியில், எல்காட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டடத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் சுகுணா கல்யாண மண்டபத்தில் நில எடுப்பு விலக்கு அளிக்கப்பட்ட உத்தரவுகளை உரிமையாளர்களுக்கு வழங்கினார்.

    தொடர்ந்து குறிச்சி தொழிற்பேட்டை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர்கள் விடுதியினை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து போத்தனூரில் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.


    நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

    மக்கள் பல கோரிக்கைகள் வைத்திருக்கின்றனர். அவை நிறைவேற்றித் தரப்படும். தங்க நகை தொழில் பூங்கா கோரிக்கை பரிசீலிக்கப்படும். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சிதான். மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை மக்களின் வரவேற்பின் மூலம் தெரிந்து கொண்டேன் என்றார்.

    முன்னதாக, எந்த எதிர்பார்ப்புமின்றி கழகத்திற்காக உழைக்கும் தொண்டர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக பத்து அல்லது பதினைந்து இளைஞர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை என்று கோவையில் கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தனது முதல் கள ஆய்வினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் தொடங்கினார்.
    • கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

    கோவை:

    தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கிறதா? அரசின் வளர்ச்சி பணிகள் சரியாக நடக்கின்றனவா? என்பதை மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து, நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொள்ள போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    அதன்படி தனது முதல் கள ஆய்வினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் தொடங்கினார்.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அங்கு அவருக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வரவேற்பை ஏற்றுக்கொண்ட அவர் அங்கிருந்து காரில் விளாங்குறிச்சிக்கு சென்றார்.

    அங்குள்ள தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் எல்காட் நிறுவனம் சார்பில் 3.94 ஏக்கர் பரப்பளவில், ரூ.114.16 கோடியில் 8 தளங்களுடன் புதிதாக தகவல் தொழில்நுட்ப கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அந்த கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

     

    இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, செந்தில்பாலாஜி, பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் தலைமை செயலாளர் முருகானந்தம், கோவை தொகுதி எம்.பி. கணபதி ராஜ்குமார், கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், மேயர் ரங்கநாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீளமேடு பகுதியில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்திற்கு சென்று, அங்கு கள ஆய்வின் ஒரு பகுதியாக, வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு நிலவிடுப்பு உத்தரவு ஆணையை வழங்குகிறார்.

     

    • நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள், ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.
    • மாலை வெகுநேரமாகியும் 2 பேரின் நடமாட்டமும் வெளியில் தெரியவில்லை.

    கோவை:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த பூலாவூரணியை சேர்ந்தவர் பழனிச்சாமி(வயது39). இவர் வீட்டில் வைத்து மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்தார்.

    இவரது மனைவி வத்சலா(35). இவர்களுக்கு 7 வயதில் மகன் இருந்தார். வத்சலா அங்குள்ள தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பழனிச்சாமியின் மகன் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார்.

    மகன் இறந்த நாளில் இருந்து பழனிச்சாமியும், அவரது மனைவி வத்சலாவும் மிகுந்த மன வேதனையில் காணப்பட்டனர். அவர்களுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி அவர்களை சமாதானப்படுத்தி வந்தனர். ஆனாலும் மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் இருவரும் தவித்தனர்.

    இதையடுத்து உறவினர்கள் 2 பேரையும், கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று சில காலம் தங்கி வாருங்கள் என கூறி அனுப்பி வைத்தனர். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 பேரும் கோவைக்கு வந்தனர்.

    சிறிது நாட்கள் 2 பேரும் தங்களது உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர். பின்னர் வேடப்பட்டி வி.கே.வி. ஸ்ரீநகர் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினர். வத்சலா வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வந்தார்.

    இங்கு வந்த பின்னரும் அவர்களுக்கு மகன் நினைவாகவே இருந்தது. மகன் தங்களை விட்டு போய்விட்டானே என நினைத்து நினைத்து வருத்தப்பட்டு கொண்டே இருந்தனர். ஒருகட்டத்தில் அவர்களும், தங்கள் மகன் சென்ற இடத்திற்கே சென்று விட முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள், நேராக காந்திபுரம் காட்டூர் பகுதிக்கு வந்தனர். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து 2 பேரும் தங்கினர்.

    நேற்று மாலை வெகுநேரமாகியும் 2 பேரின் நடமாட்டமும் வெளியில் தெரியவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர் ஒருவர் அறைக்கு சென்றார். அறை கதவை தட்டியபோது, கதவு பூட்டப்படாமல் திறந்து கொண்டது. அப்போது அங்குள்ள அறையில் கணவன், மனைவி 2 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அந்த ஊழியர் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அங்கிருந்த மற்றவர்களும் ஓடி வந்து பார்த்தனர். சம்பவம் குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர்கள் எப்படி இறந்தனர் என்பதை அறிய போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது அங்கு 2 குளிர்பான பாட்டில்கள் கிடந்தன. அதனை பறிமுதல் செய்தனர்.

    அவர்கள் மகன் இறந்த துக்கத்தில் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

    அத்துடன் அவர்கள் பிணமாக கிடந்த இடத்தின் அருகே ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

    அந்த கடிதத்தில், எங்களது இறப்புக்கு யாரும் காரணமில்லை. எங்களது மகன் இறந்த அதிர்ச்சியில் இருந்து எங்களால் மீளமுடியவில்லை. இதனால் நாங்களும் எங்கள் மகன் சென்ற இடத்திற்கே செல்கிறோம் என எழுதப்பட்டிருந்தது.

    இதுகுறித்து பழனிச்சாமியின் சகோதரர் முருகேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளார்.
    • கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

    கோவை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா? என்பதை மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளார்.

    கள ஆய்வுப்பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை (5-ந்தேதி) கோவையில் இருந்து தொடங்க உள்ளார். நாளையும், நாளை மறுநாளும் கோவையில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆய்வு செய்கிறார்.

    இதற்காக நாளை காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    காலை 11.30 மணிக்கு விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனம் சார்பில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 3.94 ஏக்கர் பரப்பளில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழிநுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

    மதியம் 12 மணிக்கு சுகுணா திருமண மண்டபத்தில் கள ஆய்வுப்பணியின் ஒரு அங்கமாக முதல்-அமைச்சர் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு விடுப்பு ஆணைகளை வழங்க உள்ளார்.

    மாலை 4 மணிக்கு சிவாலயா திருமண மண்டபத்தில் தங்க நகை தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். தங்க நகை தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறித்து அவர் கேட்டறிகிறார்.

    தொடர்ந்து போத்தனூர் பிவிஜி திருமண மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடி 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து அவர் ஆலோசனை வழங்குகிறார். பின்னர் இரவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    மறுநாள் (6-ந் தேதி) காலை 9.30 மணிக்கு கோவை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்று வரும் செம்மொழி பூங்கா கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

    தொடர்ந்து திறந்தவெளி சிறைச்சாலையின் ஒரு பகுதியில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அவர் மதியம் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி கோவை மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். மு.க.ஸ்டாலின் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

    கலைஞர் நூலக அடிக்கல் நாட்டு விழாவில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    முதலமைச்சர் வருகையை யொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. உள்ளூர் போலீசார் மட்டும் அல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • தெலுங்கானா, குஜராத், கோவா, புதுச்சேரி, தாதர், நாகர்ஹவேலி, டையு, டாமன், லட்சத்தீவுகள் சேர்ந்தவர்களுக்கு முகாம்.
    • 5 மணிக்கு முகாம் என்பதால் நேற்று இரவு முதல் வரத்தொடங்கி சாலையோரம் ஓய்வெடுத்தனர்.

    இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதையொட்டி ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி (பி.ஆர்.எஸ்.) மைதானத்தில் இன்று காலை தொடங்கியது.

    இன்று காலை 5 மணிக்கு தெலுங்கானா, குஜராத், கோவா ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி, தாதர், நாகர்ஹவேலி, டையு, டாமன், லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கும் முகாம் நடக்கிறது.

    இன்று தொடங்கும் முகாமில் பங்கேற்க தெலுங்கானா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் கோவைக்கு வந்தனர். காலை 5 மணிக்கு முகாம் தொடங்குவதால் அதற்கு முன்னதாக வர வேண்டும். எனவே வெளிமாநில வாலிபர்கள் நேற்றிரவவே கோவைக்கு வந்தனர். மேலும் நள்ளிரவில் வந்து சேர்ந்தனர். அவர்கள் தங்குவதற்கு வசதி ஏதும் இல்லாததால் சாலையோரத்தில் தங்கும் நிலை ஏற்பட்டது.

    மேலும் அதிகாலையில் வரும் இளைஞர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாலையோரம் படுத்து தூங்கி ஓய்வெடுத்தார். இதனால் அவர்களுக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

    வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கழிப்பிடம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாத நிலை உள்ளது. இதனால் அவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும், நாளை மறுநாள் (6-ந்தேதி) ராஜஸ்தான், மராட்டியம் மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கான முகாம் நடக்கிறது.

    7-ந்தேதி தமிழகத்தில் உள்ள அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ண கிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்ப லூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான முகாம் நடைபெறுகிறது.

    8-ந்தேதி சென்னை, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, சேலம், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருவண்ணாமலை, நெல்லை, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களுக்கும், 9-ந் தேதி கேரள மாநிலம் ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, கொல்லம், கோட்டயம் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு முகாம் நடத்தப்படுகிறது.

    10-ந் தேதி கேரள மாநிலத்தை சேர்ந்த கோழிக்கோடு, திருச்சூர், மலப்புரம், பாலக்காடு, பத்தினம்திட்டா, திருவனந்தபுரம், வயநாடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் முகாம் நடைபெறுகிறது.

    11-ந் தேதி முதல் 16-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை நடைபெறுகிறது. இதில் ஓட்டம், கயிறு ஏறுதல் உள்ளிட்ட உடற்தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

    • பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பலர் அதிகளவில் பட்டாசுகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை.
    • ஆன்லைனில் பட்டாசுகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டன. கவுண்டம்பாளையம், சாய் பாபா காலனி, கணபதி, டவுன்ஹால், பீளமேடு, ராமநாதபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் 370-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

    இதுதவிர, ஊரக பகுதிகளில் 360-க்கும மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த பட்டாசு கடைகளில் கடந்த வாரம் முதல் விற்பனை தொடங்கினாலும், சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் ஊதியம் வழங்க காலதாமதம் செய்தது. இதனால் தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்பு முதல் தான் பட்டாசு விற்பனை சூடுப்பிடித்தது. பட்டாசு விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாத நிலையில் பெற்றோர் குழந்தைகளுடன் சென்று பட்டாசுகளை வாங்கி சென்றனர்.

    சிவகாசியில் இருந்து நேரடியாக பட்டாசு கொள்முதல் செய்தவர்கள் அதிரடி சலுகை என அறிவித்து 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பனை செய்தனர். நடப்பாண்டில், பேன்சி ரக பட்டாசுகளையும், வாணவேடிக்கை பட்டாசுகளையும் பொதுமக்கள் அதிகளவில் விரும்பி வாங்கியுள்ளனர். குழந்தைகள் வழக்கம் போல் கம்பி மத்தாப்பு, தீப்பொறி மத்தாப்பு, பிஜிலி, சங்கு சக்கரம் போன்ற வெடிகளை வாங்கி சென்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பலர் அதிகளவில் பட்டாசுகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. தவிர, ஆன்லைனில் பட்டாசுகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை இளைஞர்கள் பலர் வாங்கியதால், கடைகளில் பெரிய அளவில் பட்டாசு விற்பனையானது நடக்கவில்லை என கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 80 சதவீதம் பட்டாசு விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாவட்ட பட்டாசு விற்பனையாளர் நலச்சங்கத்தின் நிர்வாகி கூறுகையில், "மாநகரில் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் 50 கடைகளுக்கு மேல் அதிகமாக பட்டாசு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கடைகள் அதிகரித்து இருந்தாலும், எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை நடந்தது. அதாவது கடைகளில் 80 சதவீதம் பட்டாசு வரை விற்பனை நடந்துள்ளது. பெரும்பாலான கடைகளில் பட்டாசுகள் பெருமளவில் விற்பனையாகி உள்ளது" என்றார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகமுறை சுற்றுப்பயணம் செய்த மாவட்டமாக கோவை இருக்கிறது.
    • கோவை விளாங்குறிச்சியில் 8 தளங்களுடன் கட்டப்பட்டு உள்ள புதிய தொழில்நுட்ப பூங்காவை 5-ந்தேதி முதலமைச்சர் திறந்துவைக்கிறார்.

    கோவை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வுப்பணி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

    அதன்படி தனது முதல் கள ஆய்வுப்பணியை வருகிற 5-ந்தேதி கோவையில் தொடங்குகிறார். 5-ந்தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கோவையில் முகாமிட்டு பல்வேறு நலப்பணிகளை தொடங்கி வைக்கிறார். அத்துடன் அவர் கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-

    5-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு கோவை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அங்கிருந்து கார் மூலம் மு.க.ஸ்டாலின் விளாங்குறிச்சி செல்கிறார். அங்கு புதிதாக ரூ.114.16 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய ஐ.டி. பார்க்கை திறந்து வைக்கிறார்.

    பின்னர் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மாலை 4 மணிக்கு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்கிறார். அங்கு தங்க நகை தயாரிப்பு தொழிலில் உள்ள சிக்கல்கள் குறித்தும், அதற்கு தீர்வு காணவும் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    மாலை 5 மணிக்கு போத்தனூர் பிவிஜி திருமண மண்டபத்தில் கோவை ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவில் தங்குகிறார்.

    மறுநாள் (6-ந்தேதி) காலை 10 மணிக்கு கோவை சிறை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.167 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்கா பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

    தொடர்ந்து காந்திபுரம் பஸ்நிலையம் பகுதிக்கு சென்று டவுன் பஸ் நிலையம் பின்புறம் 6.9 ஏக்கரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். மதியம் விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார்.

    கோவை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு விழாக்கள் மட்டுமின்றி தங்களையும் சந்தித்து பேசுவதால் தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    மு.க.ஸ்டாலின் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த சில நாட்களாக கோவையில் முகாமிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.

    கோவை விளாங்குறிச்சியில் 8 தளங்களுடன் கட்டப்பட்டு உள்ள புதிய தொழில்நுட்ப பூங்காவை 5-ந்தேதி முதலமைச்சர் திறந்துவைக்கிறார்.

    6-ந்தேதி காந்திபுரம் பஸ் நிலையம் மத்திய சிறைச்சாலை மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டுகிறார். இந்த நூலகம் 7 தளங்களுடன் ஒரு லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகமுறை சுற்றுப்பயணம் செய்த மாவட்டமாக கோவை இருக்கிறது. கோவைக்கு இன்னும் பல திட்டங்களை முதலமைச்சர் வழங்க உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீபாவளி முன்னிட்டு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
    • கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகியை தரிசனம் செய்தனர்.

    நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக நடைபெற்றது. தீபாவளி முன்னிட்டு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இந்நிலையில், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திலும் தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை நாட்களையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சென்றனர்.

    அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று (அக்.31) 75,000-க்கும் அதிகமான பக்தர்கள் கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகியை தரிசனம் செய்தனர்.

    மேலும், சுற்றுவட்டார பழங்குடி மக்கள் பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து ஆட்டம் பாட்டத்துடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    • வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தது.
    • யானைகள் நள்ளிரவில் உலா வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    வடவள்ளி:

    கோவை, மருதமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து உணவு தேடும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று நள்ளிரவு கோவை மருதமலை ஐ.ஓ.பி. காலனியில் யானை ஒன்று தனது குட்டியுடன் புகுந்தது. அங்குள்ள ஒரு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. பின்னர் அங்கிருந்த அலங்கார தாவரங்களை ருசித்து சாப்பிட்டது.

    பின்னர் வீட்டின் மெயின் கதவை உடைத்து உள்பக்கமாக தும்பிக்கையை விட்டு உணவு தேடியது.

    சத்தம் கேட்டு அந்த வீட்டில் வசித்தவர்கள் அலறி அடித்து மாடிக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டனர். சிறிது நேரம் வாசலில் நின்ற யானைகள் உணவு எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து வெளியேறிச் சென்றன.

    யானைகள் வந்து சென்ற வீடியோக்கள் வீட்டில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தன. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மருதமலை ஐ.ஓ.பி காலனி பகுதியில் அவ்வப்போது யானைகள் நள்ளிரவில் உலா வருவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகள் வருவதை தடுத்து, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • விமான நிலையத்தில் இருந்து பெரும்பாலும் உள்நாட்டு சரக்கு போக்குவரத்து தான் அதிகமாக கையாளப்படுகிறது.
    • பண்டிகை என்பதால் உள்நாட்டு பிரிவில் இருந்து இனிப்பு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா, அபுதாபி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தினந்தோறும் 30 விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மாதந்தோறும் சராசரியாக 2.8 லட்சம் பயணிகள் பயணம் சென்று வருகின்றனர்.

    இந்த விமான நிலையத்தில் இருந்து பெரும்பாலும் உள்நாட்டு சரக்கு போக்குவரத்து தான் அதிகமாக கையாளப்படுகிறது. அந்தவகையில் கடந்த ஜூன் மாதம் 936 டன் சரக்குகள் கையாளப்பட்டன. அதேபோல ஜூலையில் 1079 டன், ஆகஸ்டு மாதத்தில் 1239 டன் என்ற அளவில் சரக்குகள் கையாளப்பட்டன. அதாவது கோவை விமான நிலையத்தில் இருந்து மாதந்தோறும் சராசரியாக 100 டன் சரக்குகள் கையாளப்படுகின்றன.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுடெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கோவையில் இருந்து விமானம் வாயிலாக 3 டன் இனிப்பு வகைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 டன்களுக்கும் அதிகமான இனிப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. வெளிநாடுகளுக்கு அதிகம் அனுப்பப்படவில்லை. கோவை விமான நிலையத்தில் இருந்து வழக்கமாக உணவுப்பொருட்கள்தான் அதிகம் ஏற்றுமதி ஆகின்றன. பண்டிகை என்பதால் உள்நாட்டு பிரிவில் இருந்து இனிப்பு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×