என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு, மரங்கள் முறிந்து கிடக்கின்றன
    • இடிபாடுகளை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் மும்முரம்

    மேட்டுப்பாளையம்,

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டியுள்ள நீலகிரி, கோவை மாவட் டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

    இதனிடையே குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 3-ந் தேதி நள்ளிரவு பெய்த கனமழைக்கு ஆடர்லி, ஹில்கு ரோவ் இடையே 5க்கு மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு பாறை கள், மரங்கள் முறிந்து தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் கடந்த 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை மலை ெரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    அதன்பின் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே ெரயில்வே பணி மனை ஊழியர்கள் தண்ட வாளங்களில் பராமரிப்பு பணியை முடித்ததால் 8-ந் தேதி மலை ெரயில் இயக்கப்பட்டது.ஆனால் அன்றைய தினம் இரவு பெய்த கன மழையால் 10-க்கு மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தண்வாளத்தில் மரம், பாறைகள் சரிந்து விழுந்தன.

    இதனால் கடந்த 9-ந் தேதி முதல் 16-ந் தேதி (வியாழக்கிழமை) வரை மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ெரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்ேவ நிர்வாகம் அறிவித்தது.

    இந்நிலையில் மேட்டுப் பாளையம்-குன்னூர் மலை ெரயில் பாதையில் மேலும் சில இடங்களில் தண்டவாளத்தில் விழுந்த மரம், பாறைகளை அகற்றப்படாததால் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை(சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மலை ெரயில் மீண்டும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதனால் மலை ெரயிலில் பயணம் செய்ய காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    • கடந்த 2022 ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் முதல் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
    • ஜவுளித்துறைக்கு பல்வேறு நிதி சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

    கோவை:

    கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கம் நடந்தது.

    ஜவுளி துறையில் தொழில்நுட்ப ஜவுளி பிரிவு என்பது முக்கியமான சந்தையை பிடித்து வரும் நிலையில், தமிழகத்தில் தொழில்நுட்ப ஜவுளி தொழிலில் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கவும், தொழில்நுட்ப ஜவுளி சந்தையின் சர்வதேச வாய்ப்புகள், தொழிலில் உள்ள சிக்கல்கள், அதை எவ்வாறு களையலாம் என்பது குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

    கடந்தாண்டு முதல் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. தற்போது 2-வது கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது.

    2 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடந்த 2022 ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் முதல் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதன் பேரில் கோவையில் 2-வது கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது.

    ஜவுளித்துறைக்கு பல்வேறு நிதி சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

    மாநில ஜவுளித்துறை சார்பில் புதிய ஜவுளி பாலிசி விரைவில் வெளியிட போகின்றோம். டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப மாநில அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு மில்லியன் எகனாமி என்ற இலக்கை அடைய இந்த கருத்தரங்கம் உதவும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மத்திய, மாநில அரசின் ஜவுளித்துறையின் செயலாளர்கள், ஆணையர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உணவை சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
    • அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    கோவை:

    கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜாஸ்மின். இவரது வீட்டில் கியாஸ் சிலிண்டர் காலியானது.

    இதனையடுத்து ஜாஸ்மின் ஆன்லைன் மூலம் பிரபல உணவகத்தில் நேற்று பிற்பகலில் தயிர்சாதம், சாம்பார் சாதம், பேபி கார்ன் ஆகியவற்றை ஆர்டர் செய்தார்.

    பின்னர் உணவு வந்து சேர்ந்தது. அவருக்கு வந்த உணவை அவரும் அவரது குழந்தையும் சாப்பிட தொடங்கினர். திடீரென உணவில் டீ தூள் போன்று பொட்டலம் ஒன்று ஸ்பூனில் தட்டுப்பட்டது.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜாஸ்மின் அதனை எடுத்துப் பார்த்தார். அப்போது அது கூல் லீப் எனப்படும் புகையிலை என்பது தெரியவந்தது.

    இதனை பார்த்து ஜாஸ்மின் அதிர்ச்சியடைந்தார். உணவை சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடடினயாக அவர் 108 ஆம்புலன்சு ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக அவர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை பரிசோதனை செய்தனர். அப்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருந்தது.

    உணவில் புகையிலை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு 10 முறைக்கும் மேல் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.

    ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இது போன்று அலட்சியமாக உணவு விநியோகம் செய்யும் உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த தகவல் வெளியானதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கோவிந்தராஜன் தலைமையிலான அதிகாரிகள் புகையிலை கலந்த உணவை கொடுத்த உணவகத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது கடையில் சுகாதாரமற்ற முறையில் பணியாற்றிய ஊழியர்களிடம் பாதுகாப்பு உபகரணங்களை முறையாக அணியுமாறும், கடையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உரிமையாளருக்கு அறிவுரை வழங்கினர்.

    மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து வினியோகிக்கப்பட்ட உணவில் புகையிலை எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரித்தனர்.

    மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதுதவிர கடையின் உரிமையாளருக்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறையினர் கூறும்போது, சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டோம். உணவில் புகையிலை எப்படி வந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இது தொடர்பாக நோட்டீசும் அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டல் நிர்வாகத்தின் விளக்கத்திற்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

    • வால்பாறையில் சில மாதங்களுக்கு முன்பு ஆணையாளர் பாலு என்பவர் பணி செய்து வந்தார்.
    • நகராட்சி பணிகளில் தொய்வு ஏற்படுகிறது

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறையில் 21 வார்டு உள்ளது. வால்பாறையில் சில மாதங்களுக்கு முன்பு ஆணையாளர் பாலு என்பவர் பணி செய்து வந்தார்.

    அவர் பதவி உயர்வு பெற்று கோவை பகுதிக்கு சென்றதால் வால்பாறை நகராட்சிக்கு, உடுமலை நகராட்சி ஆணையாளர் பெற்பெட்டி டெரன்ஸ் லியோ என்பவர் வால்பாறை நகராட்சி அலுவலகத்தையும் சேர்த்து பார்த்து வருகிறார்.

    இவர் உடுமலையில் இருந்து வாரம் 2 முறை மட்டுமே இங்கு வந்து செல்வதால் நகராட்சி பணிகள் தோய்வடைகின்றன. எனவே வால்பாறை நகராட்சிக்கு என்று தனி ஆணையாளரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு காய்ச்சல் தடுப்பு வார்டு தொடக்கம்
    • கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா பேட்டி

    கோவை,

    கோவையில் காலநிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகிறது. தினசரி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சராசரியாக 50 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதில் தற்போது 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து கோவை ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:

    30 பேர் உள்நோயாளிகளாக பல்வேறு வைரஸ் காய்ச்சல்களால் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காலநிலை மாற்றத்தால் தண்ணீர் மற்றும் கொசுவால் வைரஸ் காய்ச்சல் பரவுவதால், குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். வீட்டின் முன் தேங்கும் நீரினை உடனடியாக அப்புறப்படுத்துவதுடன், கொசுக்கள் பரவாமல் தவிர்க்க வேண்டும். 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரியை அணுகி பரிசோதித்து சிகிச்சை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவில் பஸ்கள் மற்றும் படிக்கட்டு வழியாக பக்தர்கள் செல்ல அறிவுறுத்தல்
    • சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகத்தினர் மும்முரம்

    வடவள்ளி,

    கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7-ம் படை வீடு என அன்போடு அழைக்கப்பட்டு வருகிறது.

    இந்த கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் அதிகமானோர் வந்து செல்கிறார்கள்.

    இந்த கோவிலில் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதனையொட்டி தினமும் காலை, மாலை என 2 வேளைகளிலும் யாக சாலை வேள்வி பூஜை நடைபெற்று வருகி றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று புதிதாக கட்டப்பட்டுள்ள அலங்கார மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, சேச வாகனத்தில் ராஜ தர்பார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    நாளை மறுநாள் சூரச சம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதனையொட்டி கோவிலுக்கு திரளான பக்தர்கள் வருவார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    கூட்டம் அதிகமாக வருவதை கருத்தில் கொண்டு, நாளையும், நாளை மறுநாளும் மட்டும் மலைப்பாதையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அன்றைய தினம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் பஸ்களிலும், படிக்கட்டு வழியாகவும் சென்று சாமியை தரிசிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவல் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தீத்திபாளையம் ரேசன் கடை ஷட்டரை உடைத்து, அரிசி, பருப்பு, சர்க்கரை மூட்டைகளை தின்றது
    • வனத்துக்கு முன்பாக உள்ள அடர்ந்த புதற்காட்டில் தஞ்சமடைந்து நிற்பதால் பொதுமக்கள் அச்சம்

    வடவள்ளி,

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் மலை அடிவார கிராமங்களுக்கு அடிக்கடி காட்டு யானைகள் வந்து செல்வது வழக்கம்.

    உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் வரும் யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விளை பயிர்களை சேதப்படுத்துவதாக தொடர்ந்து விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 8 யானைகள் கொண்ட கூட்டம், தீத்திபாளையம் கிராமத்திற்குள் புகுந்தது.

    அப்போது அங்கு இருந்த ரேசன் கடையின் ஷட்டரை உடைத்து, உள்ளே இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை மூட்டைகளை வெளியே எடுத்து போட்டு சாப்பிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அங்கு திரண்ட பொதுமக்கள் வனத்துறை உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். நேற்றிரவு காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வந்துள்ளன.

    நள்ளிரவு நேரத்தில் அய்யாசாமி மலை அடிவாரத்தில் இருந்து வெளிவந்த யானைகள் வனத்தையொட்டி உள்ள தோட்டங்களிலும், கிராமப்பகுதிகளிலும் உலா வந்துள்ளன.

    இதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் விரைந்து சென்று 3 குழுக்களாக பிரிந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் குப்பனூர் பகுதி வழியாக சென்று அடர் வனத்துக்கு முன்பாக உள்ள அடர்ந்த புதற்காட்டில் தஞ்சமடைந்துள்ளன. இந்த யானைகளை விரட்ட வனத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதிகளில் யானை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி இந்த யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கமாகியுள்ளது.

    அவ்வாறு ஊருக்குள் வரும் யானைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. விளை நிலங்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே யானைகள் ஊருக்குள் வராமல் இருக்கும் வகையில் வனத்து

    றையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வேலைக்கு செல்ல கணவர் அனுமதிக்காததால் வேதனை
    • சாணிப்பவுடரை கரைத்து குடித்து உயிரை மாய்த்து கொண்டார்

    கோவை,

    கோவில்பாளையம் அருகே உள்ள வெள்ளா னைப்பட்டி மகாசக்தி நகரை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி வசந்தபி ரியா (வயது17). இவருக்கு அவரது பெற்றோர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். 1 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    வசந்த பிரியா தனது கணவரிடம் வேலைக்கு செல்கிறேன் என அடிக்கடி கூறி வந்தார். ஆனால் அவரது கணவர் வேலைக்கு அனுப்ப மறுத்து விட்டார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    தீபாவளிக்கு முதல் நாளன்று மகளின் வீட்டிற்கு வந்த பெற்றோர் யாரிடமும் சொல்லாமல் வசந்த பிரியாவை அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    தீபாவளி முடிந்ததும் வசந்தபிரியா வீட்டிற்கு திரும்பினார். அவரிடம் கணவரின் தாயார் ஏன் சொல்லாமல் சென்றாய் என கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த வசந்த பிரியா வீட்டில் உள்ள அறைக்கு சென்று சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை அவரது கணவர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் வசந்த பிரியா பரிதாபமாக இறந்தார் .இது குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 கிலோ பாக்கெட்டுகள் பறிமுதல்
    • சொந்த ஊரில் வாங்கி வந்து பதுக்கி வைத்து விற்றது அம்பலம்

     கோவை,

    கோவை கோவில்பாளையம் அண்ணாநகரில் உள்ள டீக்கடையில் கஞ்சா சாக்லெட்டை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து கோவில்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் குருசந்திரவடிவேல் தலைமையிலான போலீசார் தகவல் வந்த கடைக்கு சென்று சோதனை செய்தனர்.

    சோதனையில் அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 4 கிலோ கஞ்சா சாக்லெட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் பிஸ்வால் (வயது 36) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கஞ்சா சாக்லெட் எப்படி வந்தது என விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ராஜேஷ் பிஸ்வால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்றார். அங்கு இருந்து வரும் போது 6 கிலோ கஞ்சா சாக்லெட்டை வாங்கி வந்தது வட மாநில தொழிலாளர்களுக்கு 2 கிலோ சாக்லெட்டை விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட ராஜேஷ் பிஸ்வாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • மனைவி மாயமானதால் வேதனை
    • பேரூர் போலீசார் தீவிர விசாரணை

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையத்தை சேர்ந்தவர் தர்மன் (வயது 28).

    சம்பவத்தன்று இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி தனது கணவரிடம் கோபித் துக்கொண்டு வெளியே சென்றார். இதனையடுத்து தர்மன் தனது மனைவி அந்த பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு தான் சென்று இருப்பார் என நினைத்து அங்கு சென்று பார்த்தார். ஆனால் அவர் அங்கு இல்லை. பின்னர் அருகே உள்ள உறவினர் வீடுகளிலும் சென்று தேடி பார்த்தார். ஆனால் மனைவியை கண்டு பிடிக்க முடிய வில்லை.

    இதனால் மனவேதனை அடைந்த தர்மன் பெட்ரோலை அவரது முகத்தில் ஊற்றி தீ பற்ற வைத்தார். தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது.

    இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தர்மனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுத்திகரிக்கும் நீரை எவ்வாறு கொண்டு வருவது, வெளியேற்றும் வழிகள் ஆகியவை குறித்து ஆலோசனை
    • வருவாய் கோட்டாட்சியர் பண்டரினாதன் மற்றும்பேரூராட்சி தலைவர்கள் பங்கேற்பு

    சூலூர்,

    சூலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளபாளையம் பேரூராட்சி, சூலூர் பேரூ ராட்சி, இருகூர் பேரூராட்சி மற்றும் மோப்பிரிபாளையம் பேரூராட்சி பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலத்தை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, சுத்திகரிக்கும் நீரை எவ்வாறு தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு கொண்டு வருவது அதை வெளியேற்றும் வழிகள் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    இதில் வருவாய் கோட்டாட்சியர் பண்டரினாதன், சூலூர் தாசில்தார் நித்திலவள்ளி, மோப்பிரிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் பெலிக்ஸ், தலைமை எழுத்தர் சாமிநாதன், பேரூராட்சி தலைவர் சசிகுமார், சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவிமன்னவன், சூலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சசிகுமார், பேரூராட்சி தலைமை எழுத்தாளர் கோவிந்தராஜன், பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் பி.எஸ்.செல்வராஜ், செயல் அலுவலர் சுந்தர்ராஜன், தலைமை எழுத்தர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • காற்று வீசும் திசைக்கு எதிரே குச்சிகளால் முட்டு கொடுத்து புதிதாக நடவு செய்த செடிகள் சாயாமல் பாதுகாக்க வலியுறுத்தல்
    • 75 சதவீதத்துக்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்ய வேண்டுகோள்

    கோவை,

    வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

    காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையும் வகையில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும். உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும்.

    கொடியின் அடிப்பகுதியில் மண் அணைத்து விட வேண்டும். உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். திராட்சைக் கொடியில் போர்போப் பசையைப் பூச வேண்டும். அதிகப்படியான இலைதழைகளை கவாத்து செய்தல் வேண்டும். திராட்சைக் கொடிகளை பந்தல் அமைப்பில் நன்கு கட்ட வேண்டும்.

    உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். காய்ந்து போன இலைகள் மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும்.

    காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ் கட்ட இலைகளை அகற்றி விட்டு மரத்தின் அடியில் மண் அணைக்க வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும். மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடி வைக்க வேண்டும். 75 சதவீதத்துக்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்ய வேண்டும்.

    காய்கறி மற்றும் இதர தோட்டக் கலைப் பயிர்களுக்கான வழி முறைகள் தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், தக்காளி, கொத்துமல்லி, கத்தரி போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்காத வகையில் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

    காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயா தவண்ணம் பாதுகாக்க வேண்டும்.

    கிழிந்து போன நிழல் வலைகளை தைத்து சரி செய்ய வேண்டும். நிழல்வ லைக்குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    நிழல்வலைக்குடில் மற்றும் பசுமைக்குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று உட்புகாமல் பாதுகாக்க வேண்டும்.

    ×