என் மலர்
உள்ளூர் செய்திகள்

டெங்கு, வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு: கோவை அரசு ஆஸ்பத்திரியில் 30 பேருக்கு சிகிச்சை
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு காய்ச்சல் தடுப்பு வார்டு தொடக்கம்
- கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா பேட்டி
கோவை,
கோவையில் காலநிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகிறது. தினசரி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சராசரியாக 50 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதில் தற்போது 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கோவை ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:
30 பேர் உள்நோயாளிகளாக பல்வேறு வைரஸ் காய்ச்சல்களால் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காலநிலை மாற்றத்தால் தண்ணீர் மற்றும் கொசுவால் வைரஸ் காய்ச்சல் பரவுவதால், குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். வீட்டின் முன் தேங்கும் நீரினை உடனடியாக அப்புறப்படுத்துவதுடன், கொசுக்கள் பரவாமல் தவிர்க்க வேண்டும். 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரியை அணுகி பரிசோதித்து சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






