search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வால்பாறை  நகராட்சிக்கு தனி ஆணையாளரை நியமிக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
    X

    வால்பாறை நகராட்சிக்கு தனி ஆணையாளரை நியமிக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

    • வால்பாறையில் சில மாதங்களுக்கு முன்பு ஆணையாளர் பாலு என்பவர் பணி செய்து வந்தார்.
    • நகராட்சி பணிகளில் தொய்வு ஏற்படுகிறது

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறையில் 21 வார்டு உள்ளது. வால்பாறையில் சில மாதங்களுக்கு முன்பு ஆணையாளர் பாலு என்பவர் பணி செய்து வந்தார்.

    அவர் பதவி உயர்வு பெற்று கோவை பகுதிக்கு சென்றதால் வால்பாறை நகராட்சிக்கு, உடுமலை நகராட்சி ஆணையாளர் பெற்பெட்டி டெரன்ஸ் லியோ என்பவர் வால்பாறை நகராட்சி அலுவலகத்தையும் சேர்த்து பார்த்து வருகிறார்.

    இவர் உடுமலையில் இருந்து வாரம் 2 முறை மட்டுமே இங்கு வந்து செல்வதால் நகராட்சி பணிகள் தோய்வடைகின்றன. எனவே வால்பாறை நகராட்சிக்கு என்று தனி ஆணையாளரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×